சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையில் இயற்கை வளங்கள் துறை ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறுகிறது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் இயற்கை வளங்கள் துறை தொடர்பான நிதிநிலை அறிக்கை சம்பந்தமாக முதலமைச்சர் விஜய் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.
மேலும், கனிம வளங்கள் துறையில் வெளிப்படையான நிர்வாகத்தை செயல்படுத்தி அதிக வருவாயை ஈட்டுவது தொடர்பாகவும், கனிம வள கடத்தலை தடுப்பது குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது.
இதே போல் வெளி மாநிலங்களுக்கு கனிம வளங்கள் எடுத்துச் செல்லப்படுவதை தடுக்கும் வகையில் கூடுதல் கட்டுப்பாடுகளை விதிப்பது தொடர்பாகவும்,
ஆன்லைன் மூலமாக குவாரிகளை கண்காணிப்பது, வாகனங்களில் எடுத்து செல்லும் ஜல்லி,எம். சாண்ட் உள்ளிட்டவற்றை கண்காணிப்பது தொடர்பாகவும் கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
