Close Menu
    What's Hot

    விழுந்தா வீட்டுக்கு, விழாவிட்டால் நாட்டுக்கு – ரூ.30 கோடி கேரள ஓணம்  பம்பர் லாட்டரி வெளியீடு

    ஹார்முஸ் பகுதிக்கு இந்திய மாலுமிகளை அனுப்ப வேண்டாம்!. மத்திய அரசு அதிரடி உத்தரவு!

    மயிலாடுதுறை ; பெட்ரோல் பங்கில் பெண் ஊழியர் மீது தாக்குதல்…. பெட்ரோலுக்கு பணம் கேட்டதால் போதை இளைஞர்கள் வெறிச்செயல்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»கோவை சிறுமி பாலியல் கொலை: நடந்தது என்ன..?- மேற்கு மண்டல ஐ.ஜி. விளக்கம்
    Featured

    கோவை சிறுமி பாலியல் கொலை: நடந்தது என்ன..?- மேற்கு மண்டல ஐ.ஜி. விளக்கம்

    Editor web1By Editor web1May 23, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Police IG Ramya Bharathi
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கோவை சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமாகக் கொல்லப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், நடந்தது என்ன, குற்றவாளிகள் கைது செய்யப்பட்டது எப்படி என்பது குறித்து மேற்கு மண்டல காவல் துறை இணை இயக்குநர் (ஐஜி) ரம்யா பாரதி விரிவாக விளக்கி உள்ளார்.

    இது தொடர்பாக இன்று செய்தியாளர்களைச் சந்தித்து வழக்கின் தற்போதைய நிலவரத்தை விளக்கிய அவர், சம்பவம் நடைபெற்ற அன்று மாலை 6 மணியளவில் சிறுமி வீட்டில் காணவில்லை என அவரது பெற்றோர் 100 என்ற அவசர உதவி எண்ணிற்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணையைத் தொடங்கினர்.

    இரவு 10 மணிக்கு முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை தீவிரமாக விசாரிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு பணியாற்றின. சிசிடிவி காட்சிகளைத் துல்லியமாக ஆய்வு செய்ததில், பக்கத்து வீட்டில் வசித்த கார்த்தி என்பவன் சிறுமியை இனிப்பு வாங்கித் தருவதாக ஆசை காட்டி அழைத்துச் சென்றது தெரியவந்தது. அவன் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பின்னர், கொலை செய்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    குற்றவாளி கார்த்தி போலீசார் வருவதை அறிந்து பதுங்கி இருந்தபோது, அவரை மடக்கிப் பிடிக்க முயன்றபோது தப்பிக்க முயன்றான். இதில் அவனுக்கு வலது கை மற்றும் வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இருப்பினும், குற்றம் நடைபெற்ற 24 மணி நேரத்துக்குள் கார்த்தி மற்றும் அவருடன் தொடர்புடைய மோகன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். இருவர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    குழந்தைகள் மீதான குற்றங்களுக்கு எந்தவித சமரசமும் இல்லை. குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். குற்றப் பத்திரிகையை விரைவாக தயாரித்து, உரிய தண்டனை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

    பிரேத பரிசோதனை அறிக்கை வரும் வரை முழுமையான விவரங்கள் வெளியிடப்படாது என்றும், ஆனால் வழக்கு தொடர்பான அனைத்து ஆதாரங்களும் துல்லியமாக சேகரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகோவை சிறுமி உடற்கூராய்வு முடிந்து பெற்றோரிடம் உடல் ஒப்படைப்பு!
    Next Article வெளுத்துப்போன அரசியல் சாயம்… சர்ச்சையில் செங்கல்பட்டு தவெக எம்.எல்.ஏ!
    Editor web1
    • Website

    Related Posts

    விழுந்தா வீட்டுக்கு, விழாவிட்டால் நாட்டுக்கு – ரூ.30 கோடி கேரள ஓணம்  பம்பர் லாட்டரி வெளியீடு

    July 16, 2026

    ஹார்முஸ் பகுதிக்கு இந்திய மாலுமிகளை அனுப்ப வேண்டாம்!. மத்திய அரசு அதிரடி உத்தரவு!

    July 16, 2026

    மயிலாடுதுறை ; பெட்ரோல் பங்கில் பெண் ஊழியர் மீது தாக்குதல்…. பெட்ரோலுக்கு பணம் கேட்டதால் போதை இளைஞர்கள் வெறிச்செயல்

    July 16, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    விழுந்தா வீட்டுக்கு, விழாவிட்டால் நாட்டுக்கு – ரூ.30 கோடி கேரள ஓணம்  பம்பர் லாட்டரி வெளியீடு

    ஹார்முஸ் பகுதிக்கு இந்திய மாலுமிகளை அனுப்ப வேண்டாம்!. மத்திய அரசு அதிரடி உத்தரவு!

    மயிலாடுதுறை ; பெட்ரோல் பங்கில் பெண் ஊழியர் மீது தாக்குதல்…. பெட்ரோலுக்கு பணம் கேட்டதால் போதை இளைஞர்கள் வெறிச்செயல்

    திருப்பதி கோயில் சாதனை!. ஒரே நாளில் ரூ. 97 கோடி!. நன்கொடை செலுத்த முண்டியடித்த பக்தர்கள்!. என்ன காரணம்?

    இஸ்ரோவில் ஒரே ஆண்டில் 120 விஞ்ஞானிகள் விலகல்… புதிய விதிகளே காரணமா?

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.