Close Menu
    What's Hot

    ஓமன் கடற்பகுதியில் இந்தியக் கப்பல் மீது தாக்குதல்? 24 மாலுமிகளின் நிலை என்ன?

    ”திட்டமிட்டு மின்வெட்டு ஏற்படுத்தப்படுகிறது” – அமைச்சர் நிர்மல் குமார் குற்றச்சாட்டு

    அடேங்கப்பா!. ராமர் கோயில் நன்கொடை ரூ. 3,000 கோடியை தாண்டியது!. வரி மட்டும் எவ்வளவு தெரியுமா?

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»பிலிப்பைன்ஸில் கோரத்தாண்டவமாடிய நிலநடுக்கம்!. 32 பேர் பலி; 10,000க்கும் மேற்பட்டோர் வெளியேற்றம்!
    Featured

    பிலிப்பைன்ஸில் கோரத்தாண்டவமாடிய நிலநடுக்கம்!. 32 பேர் பலி; 10,000க்கும் மேற்பட்டோர் வெளியேற்றம்!

    Editor web3By Editor web3June 8, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    32 dead earthquake
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    பிலிப்பைன்ஸின் தெற்குப் பகுதியில் உள்ள மிண்டானாவோ தீவுப் பகுதியில் இன்று காலை நேரிட்ட பயங்கர நிலநடுக்கத்தில் சிக்கி இதுவரை 32 பேர் உயிரிழந்துள்ளனர். ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பல நாடுகளுக்குச் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.

    பிலிப்பைன்ஸ் உள்ளூர் நேரப்படி திங்கள்கிழமை காலை 07:37 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மிண்டானாவோ தீவின் சரங்கனி (Sarangani) மாகாணக் கடற்கரையை மையமாகக் கொண்டு, பூமிக்கு அடியில் சுமார் 33 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உருவானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தின் தாக்கம் பிலிப்பைன்ஸ் மட்டுமின்றி, இந்தோனேசியா வரை உணரப்பட்டது.

    நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்குச் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனடியாகப் பாதுகாப்பான, உயரமான இடங்களுக்கு வெளியேற உத்தரவிடப்பட்டது. எனினும், சில மணி நேரங்களுக்குப் பிறகு விலக்கிக்கொள்ளப்பட்டது.

    நிலநடுக்கத்தின் கோரத் தாண்டவத்தால் பல கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாயின. குறிப்பாக, அங்குள்ள புகழ்பெற்ற ‘ஜோலிபி’ (Jollibee) உணவகம் முற்றிலும் இடிந்து துகள்களாக மாறும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. நிலநடுக்கத்தால் மலைக் கிராமங்களில் பயங்கர நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன.

    இதுவரை 32 பேர் பலியாகியுள்ளனர். இதில் நிலநடுக்கத்தின் மையப்பகுதிக்கு அருகில் உள்ள சரங்கனி மாகாணத்தில் மட்டும் நிலச்சரிவில் சிக்கி 17 பேர் உயிரிழந்துள்ளனர். பல்வேறு மாகாணங்களில் 100-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    புகழ்பெற்ற குத்துச்சண்டை வீரர் மேனி பக்குவாவின் சொந்த ஊரான ‘ஜெனரல் சாண்டோஸ்’ நகரில் 10 பேர் பலியானதோடு, 22-க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர். அவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கடலோரப் பகுதிகளில் இருந்து 10,000-க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நிலநடுக்கம் காரணமாகப் பல இடங்களில் மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகள் துண்டிக்கப்பட்டன. தற்போது மீட்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் முடுக்கிவிடப்பட்டுள்ள நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. பிலிப்பைன்ஸ் தேசிய பேரிடர் மேலாண்மை வாரியம் சேத விவரங்களை முழுமையாக ஆய்வு செய்து வருகிறது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article”மின்சார வாரியத்தில்  15,000 பேருக்கு வேலை!”
    Next Article ரெக்கார்டு பிரேக் வெற்றி… ஆனா No யூஸ்! இந்திய அணியின் WTC கணக்கில் வராத ஆப்கான் டெஸ்ட்!
    Editor web3
    • Website

    Related Posts

    ஓமன் கடற்பகுதியில் இந்தியக் கப்பல் மீது தாக்குதல்? 24 மாலுமிகளின் நிலை என்ன?

    June 8, 2026

    அடேங்கப்பா!. ராமர் கோயில் நன்கொடை ரூ. 3,000 கோடியை தாண்டியது!. வரி மட்டும் எவ்வளவு தெரியுமா?

    June 8, 2026

    ‘‘சிங்கப் பெண்’’ அதிரடிப் படைத் திட்டம் நாளை (ஜூன் 9) தொடக்கம்!

    June 8, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஓமன் கடற்பகுதியில் இந்தியக் கப்பல் மீது தாக்குதல்? 24 மாலுமிகளின் நிலை என்ன?

    ”திட்டமிட்டு மின்வெட்டு ஏற்படுத்தப்படுகிறது” – அமைச்சர் நிர்மல் குமார் குற்றச்சாட்டு

    அடேங்கப்பா!. ராமர் கோயில் நன்கொடை ரூ. 3,000 கோடியை தாண்டியது!. வரி மட்டும் எவ்வளவு தெரியுமா?

    ‘‘சிங்கப் பெண்’’ அதிரடிப் படைத் திட்டம் நாளை (ஜூன் 9) தொடக்கம்!

    ’இந்தியா’ கூட்டணியில் காங்கிரசுக்கு எதிராக வெடித்த திருமா… திமுகவை கூல் பண்ணவா?

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.