Close Menu
    What's Hot

    அரசியலுக்கு அச்சாரம் போடுகிறாரா சூர்யா..?? ரசிகர் பேச்சால் இணையத்தில் கிளம்பிய விவாதம்..!!

    வாட்டும் கடும் வெப்ப அலை!. 1,300-க்கும் அதிகமானோர் பலி!. WHO அதிர்ச்சி தகவல்!

    எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!. மருத்துவ கல்வி இயக்குனரகம்!.

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»காலையிலேயே பரபரப்பு..!! திமுகவினரை குண்டுக்கட்டாக கைது செய்த போலீஸ்..!!
    Featured

    காலையிலேயே பரபரப்பு..!! திமுகவினரை குண்டுக்கட்டாக கைது செய்த போலீஸ்..!!

    editor5By editor5June 29, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    image 20 15
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    திமுக மாணவர் அணியினருக்கு காவல்துறையினர் அனுமதி மறுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை குண்டுக்கட்டாக கைது செய்தனர்.

    மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் டி.சரத்குமார் பொது இடத்தில் போதைப்பொருள் பயன்படுத்தியதாகக் கூறப்படும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதைத் தொடர்ந்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமைச்சர் தரப்பில், அது தனது குழந்தைக்கு மருந்தைப் பொடியாக்கி கொடுத்த காட்சி என விளக்கம் அளிக்கப்பட்டாலும், அதை ஏற்க மறுத்த திமுக மாணவர் அணி, அவரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி மாநிலம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டது.

    இதன்படி, சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் ஆர்ப்பாட்டத்திற்கான மேடை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த மாணவர் அணியினரை போலீசார் தடுத்து நிறுத்தினர். உரிய முன் அனுமதி பெறாததால் ஆர்ப்பாட்டத்தை அனுமதிக்க முடியாது என போலீசார் தெரிவித்தனர். பொது இடங்களில் போராட்டம் நடத்த ஐந்து நாட்களுக்கு முன்னதாக அனுமதி பெற வேண்டும் என்பது விதி எனக் கூறிய காவல்துறையினர், மாநகர காவல் ஆணையரிடம் அனுமதி வாங்குமாறு அறிவுறுத்தினர். இதனால் திமுக மாணவர் அணி நிர்வாகிகளுக்கும் போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றவர்களை போலீசார் தடுத்து, காவல்துறை வாகனங்களில் ஏற்றிச் சென்றனர். சென்னையில் மட்டும் 30க்கும் மேற்பட்ட மாணவர் அணியினர் கைது செய்யப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மதுரை, புதுக்கோட்டை, திருவள்ளூர் உள்ளிட்ட பல மாவட்டங்களிலும் இதேபோல் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

    முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ். ரவிச்சந்திரன் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார். “போதைப்பொருள் பயன்படுத்திய அமைச்சரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த கழகத்தின் உத்தரவின்படி நடவடிக்கை எடுக்கப்பட்டது. நேற்று மதியம் 12 மணிக்கு ஆணையர் அலுவலகத்தில் அனுமதி கோரினோம். ஆனால் விடியற்காலை 2 மணிக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலிட உத்தரவு என்கிறார்கள். ஒரு அமைச்சர் போதைப் பயன்படுத்துவதை அனுமதிப்பதா மேலிடம்?” எனக் கேள்வி எழுப்பினார்.

    “பொதுமக்களுக்கு இந்த சூழ்நிலையை எடுத்துக்கூறவே இந்த போராட்டம். அமைதியான முறையில் நடத்த திட்டமிட்டிருந்தோம். ஆனால் அனுமதி மறுக்கப்பட்டது. எதிர் மனு தாக்கல் செய்து மீண்டும் போராட்டம் நடத்துவோம்” என அவர் தெரிவித்தார். தற்போது கைது செய்யப்பட்டவர்களின் இருப்பிடம் தெரியவில்லை எனவும், தங்களையும் கைது செய்ய முயற்சிப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார். இந்த சம்பவம் திமுகவுக்குள் உள் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், எதிர்க்கட்சிகளின் கடும் விமர்சனத்திற்கும் வழிவகுத்துள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமுழுப் போர் வெடித்தால் ஈரான் என்ற நாடே இருக்காது..!! எச்சரிக்கும் அமெரிக்க அதிபர் டிரம்ப்..!!
    Next Article பாக். – ஆப்கான் எல்லையில் அதிரடி ராணுவ நடவடிக்கை!. 29 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!
    editor5

    Related Posts

    அரசியலுக்கு அச்சாரம் போடுகிறாரா சூர்யா..?? ரசிகர் பேச்சால் இணையத்தில் கிளம்பிய விவாதம்..!!

    June 29, 2026

    வாட்டும் கடும் வெப்ப அலை!. 1,300-க்கும் அதிகமானோர் பலி!. WHO அதிர்ச்சி தகவல்!

    June 29, 2026

    எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!. மருத்துவ கல்வி இயக்குனரகம்!.

    June 29, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    அரசியலுக்கு அச்சாரம் போடுகிறாரா சூர்யா..?? ரசிகர் பேச்சால் இணையத்தில் கிளம்பிய விவாதம்..!!

    வாட்டும் கடும் வெப்ப அலை!. 1,300-க்கும் அதிகமானோர் பலி!. WHO அதிர்ச்சி தகவல்!

    எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!. மருத்துவ கல்வி இயக்குனரகம்!.

    அதிமுகவில் மீண்டும் சலசலப்பு..!! வேலுமணி நடத்திய இரவுநேர சந்திப்பு.. பின்னணி என்ன?

    தோல்வியிலும் ஒரு வரலாற்று மகிழ்ச்சி!. உலக சாதனை படைத்தார் தீப்தி சர்மா!.

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.