Close Menu
    What's Hot

    7 ஆண்டுகளில் 6 பிரதமர்!. ஏன் எந்த இங்கிலாந்து பிரதமரும் நீண்ட காலம் பதவியில் நீடிப்பதில்லை?

    டென்மார்க் வானில் ஓர் மாயாஜாலம்!. உலகையே வியக்க வைத்த பட்டங்கள்!. வைரல் வீடியோ!

    காவிரியில் 40.43 டி.எம்.சி நீரை உடனடியாகத் திறக்க வேண்டும்!. தமிழக அரசு திட்டவட்டம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»தேர்தல் வழக்கை நிராகரிக்கக்கோரி துரைமுருகன் வழக்கு; தீர்ப்பு தள்ளி வைப்பு
    Featured

    தேர்தல் வழக்கை நிராகரிக்கக்கோரி துரைமுருகன் வழக்கு; தீர்ப்பு தள்ளி வைப்பு

    Editor TN TalksBy Editor TN TalksJune 23, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    002 duraimurugan
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தனக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி காட்பாடி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வும், திமுக பொதுச்செயலாளருமான துரைமுருகன் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதிகுறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது.

    கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் காட்பாடி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன், அதிமுக வேட்பாளர் வி.ராமுவை விட 746 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றார்.

    இதையடுத்து, வாக்கு எண்ணிக்கை முறையாக நடைபெறவில்லை என குற்றம்சாட்டி, துரைமுருகனின் வெற்றியை செல்லாது எனவும், தன்னை வெற்றி பெற்றவராக அறிவிக்கக் கோரியும் அதிமுக வேட்பாளர் வி.ராமு 2021ல் தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

    ராமு தாக்கல் செய்த தேர்தல் வழக்கை நிராகரிக்க வேண்டும் என்று துரைமுருகன் தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

    இந்த மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, துரைமுருகன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரிச்சரட்சன் வில்சன், 16வது சட்டமன்றத்தின் பதவிக்காலம் முடிவடைந்து, 17 சட்டமன்றம் அமைந்துவிட்ட நிலையில், வாக்குக்கு பணம் கொடுத்தது உள்ளிட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் கூறப்படாத நிலையில் இந்த தேர்தல் வழக்கு செல்லத்தக்கதல்ல என்றும், இந்த வழக்கில் தபால் வாக்கு எண்ணிக்கை மற்றும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில்  பதிவான வாக்குகளின் எண்ணிக்கை முறையாக நடைபெறவில்லை என்ற குற்றச்சாட்டு மட்டுமே முன்வைக்கப்பட்டுள்ளது; உச்ச நீதிமன்ற உத்தரவின் படி, பதவிகாலம் முடிந்துவிட்ட நிலையில், ஊழல் குற்றச்சாட்டுகள் கூறப்படாத நிலையில், இந்த வழக்கு செல்லத்தக்கதல்ல எனவும் வாதிட்டார்.

    அதிமுக வேட்பாளர் ராமு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அரவிந்த் ஸ்ரீவத்சவா, 2016ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக வேட்பாளர் இன்பதுரை வெற்றிபெற்றதை எதிரித்து திமுக வேட்பாளர் அப்பாவு தாக்கல் செய்த தேர்தல் வழக்கில் சமீபத்தில் வெளியான தீர்ப்பை சுட்டிக்காட்டி, பதவிக்காலம் முடிவடைந்துவிட்டதால் தேர்தல் வழக்கு செல்லக்கத்தக்கதல்ல என கூறமுடியாது; இதில் ஊழல் நடவடிக்கை இல்லை என்று கூறவில்லை; தபால் வாக்குகள் சரியாக எண்ணப்பட்டனவா என்பதை சாட்சிகள் விசாரணை மூலம் இந்த நீதிமன்றம் தான் தீர்மானிக்க முடியும் என்பதால் தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கூடாது என வாதிட்டார்.

    அப்போது குறுக்கிட்ட துரைமுருகன் தரப்பு வழக்கறிசர், அப்பாவு தொடர்ந்த வழக்கில் 2019ஆம் ஆண்டில், பேரவையின் பதவிக்காலத்தின்போதே இறுதி முடிவு எடுக்கப்பட்டுவிட்டதாகவும், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்ததாலேயே அந்த வழக்கில் சமீபத்தில் தீர்ப்பளிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

    இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை தள்ளிவைத்தார்.

    DMK Duraimurugan Election Case Election Petition
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசி.எம். விஜய் சொல்வது உண்மையா?  சிபிஎம் செயலாளர் பதில்!
    Next Article அமைச்சர் வன்னியரசுவுடன் பெண் பத்திரிகையாளர் சந்திப்பு; திமுகவினர் அருவெறுப்பு கருத்து – பத்திரிகையாளர் மன்றம் கண்டனம்.
    Editor TN Talks

    Related Posts

    7 ஆண்டுகளில் 6 பிரதமர்!. ஏன் எந்த இங்கிலாந்து பிரதமரும் நீண்ட காலம் பதவியில் நீடிப்பதில்லை?

    June 23, 2026

    டென்மார்க் வானில் ஓர் மாயாஜாலம்!. உலகையே வியக்க வைத்த பட்டங்கள்!. வைரல் வீடியோ!

    June 23, 2026

    காவிரியில் 40.43 டி.எம்.சி நீரை உடனடியாகத் திறக்க வேண்டும்!. தமிழக அரசு திட்டவட்டம்!

    June 23, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    7 ஆண்டுகளில் 6 பிரதமர்!. ஏன் எந்த இங்கிலாந்து பிரதமரும் நீண்ட காலம் பதவியில் நீடிப்பதில்லை?

    டென்மார்க் வானில் ஓர் மாயாஜாலம்!. உலகையே வியக்க வைத்த பட்டங்கள்!. வைரல் வீடியோ!

    காவிரியில் 40.43 டி.எம்.சி நீரை உடனடியாகத் திறக்க வேண்டும்!. தமிழக அரசு திட்டவட்டம்!

    ஐசிசி மகளிர் டி20 தரவரிசை: நம்பர் 1 பந்துவீச்சாளரானார் இந்தியாவின் ஸ்ரீ சரணி!

    நாளை காலை 10 மணிக்கு… தலைவர் 173 புதிய அப்டேட்!.

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.