Close Menu
    What's Hot

    “தனியார் நிறுவனங்களில் தமிழக இளைஞர்களுக்கே 75% வேலை” – சட்டம் கொண்டுவர அன்புமணி வலியுறுத்தல்!

    மாற்றுத்திறனாளிகள் நலனில் முன்னெடுப்பு… மதுரையில் ஒன்றிய அரசின் ALIMCO-வின் கிளை அலுவலகம் ….  சு.வெங்கடேசன் எம்.பி மகிழ்ச்சி

    போலீஸை கத்தியால் வெட்டிய ரவுடிக்கு துப்பாக்கிச் சூடு… நாட்டு வெடிகுண்டு தயாரித்த சதி அம்பலம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநர்களை மாற்றுப் பணிகளுக்கு பயன்படுத்தக் கூடாது: அதிரடி உத்தரவு!
    Featured

    அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநர்களை மாற்றுப் பணிகளுக்கு பயன்படுத்தக் கூடாது: அதிரடி உத்தரவு!

    Editor web1By Editor web1June 28, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    3 20
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    அரசுப் பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் மற்றும் தொழில்நுட்பப் பணியாளர்களை அவர்களின் அசல் பணிகளைத் தவிர்த்து, அலுவலகப் பணிகள் போன்ற இதர மாற்றுப் பணிகளுக்கு பயன்படுத்தக் கூடாது என்று அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் (SETC) அனைத்து கிளை மேலாளர்களுக்கும் கடுமையான சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.

    மதுரை உயர் நீதிமன்ற கிளையில் தொடரப்பட்ட வழக்கு ஒன்றின் விசாரணையின் போது, அரசுப் போக்குவரத்து கழகங்களில் நூற்றுக்கணக்கான ஓட்டுநர்களும் நடத்துநர்களும் தங்களின் அசல் பணியைச் செய்யாமல், அலுவலக உதவியாளர்களாகவும், தொழிற்சங்கப் பணிகளிலும் முழுச் சம்பளத்துடன் ஈடுபட்டு வருவது தெரியவந்தது.

    இதனால் பேருந்துகளை இயக்க ஆள் பற்றாக்குறை ஏற்பட்டு, தற்காலிகப் பணியாளர்களை நியமிக்கும் நிலை உருவானதாக தெரிகிறது. இதனை கடுமையாக விமர்சித்த நீதிமன்றம், இதற்கு உடனடியாக தடை விதிக்குமாறு உத்தரவிட்டது.

    ஓட்டுநர்கள், நடத்துநர்கள் மற்றும் தொழில்நுட்பப் பணியாளர்கள் எந்த நோக்கத்திற்காக வேலைக்கு எடுக்கப்பட்டார்களோ, அந்தப் பணியை மட்டுமே செய்ய வேண்டும் என்றும் அவர்களை எந்தக் காரணம் கொண்டும் அலுவலகப் பணிகளுக்கு மாற்றக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டது. பணியின் போது விபத்து அல்லது உடல்நலக் குறைவு காரணமாக மாற்றுத்திறனாளிகளாக மாறும் பணியாளர்களுக்கு, முறையான மருத்துவக் குழுவின் சான்றிதழ் அடிப்படையில் மட்டுமே மாற்றுப் பணிகள் (அலுவலகப் பணிகள்) வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

    இந்த உத்தரவை மீறி ஓட்டுநர், நடத்துநர்களை அலுவலகப் பணிகளில் அமர்த்தும் கிளை மேலாளர்கள் மற்றும் அதிகாரிகள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை மற்றும் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅமைச்சர்கள் ஆதவ் அர்ஜூனா, நிர்மல்குமார் மன்னிப்புக் கேட்க வேண்டும்! வக்கீல் நோட்டீஸ்!
    Next Article YouTube வீடியோவை பார்த்து வீட்டில் பிரசவம்: திருப்பூரில் இளம்பெண் பரிதாப பலி!
    Editor web1
    • Website

    Related Posts

    “தனியார் நிறுவனங்களில் தமிழக இளைஞர்களுக்கே 75% வேலை” – சட்டம் கொண்டுவர அன்புமணி வலியுறுத்தல்!

    July 19, 2026

    மாற்றுத்திறனாளிகள் நலனில் முன்னெடுப்பு… மதுரையில் ஒன்றிய அரசின் ALIMCO-வின் கிளை அலுவலகம் ….  சு.வெங்கடேசன் எம்.பி மகிழ்ச்சி

    July 19, 2026

    போலீஸை கத்தியால் வெட்டிய ரவுடிக்கு துப்பாக்கிச் சூடு… நாட்டு வெடிகுண்டு தயாரித்த சதி அம்பலம்!

    July 19, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    “தனியார் நிறுவனங்களில் தமிழக இளைஞர்களுக்கே 75% வேலை” – சட்டம் கொண்டுவர அன்புமணி வலியுறுத்தல்!

    மாற்றுத்திறனாளிகள் நலனில் முன்னெடுப்பு… மதுரையில் ஒன்றிய அரசின் ALIMCO-வின் கிளை அலுவலகம் ….  சு.வெங்கடேசன் எம்.பி மகிழ்ச்சி

    போலீஸை கத்தியால் வெட்டிய ரவுடிக்கு துப்பாக்கிச் சூடு… நாட்டு வெடிகுண்டு தயாரித்த சதி அம்பலம்!

    FIFA உலகக் கோப்பை இறுதிப் போட்டி: கேரளாவில் கல்வி நிறுவனங்களுக்கு நாளை விடுமுறை!

    நாடாளுமன்ற பேரணியை வெற்றியடையச் செய்யுங்கள்….. மருத்துவமனையில் இருந்து சோனம் வாங்சுக் முதல் செய்தி!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.