அமெரிக்கா – ஈரான் இடையேயான போரால், உலக நாடுகள் பல்வேறு விதமான இன்னல்களை சந்தித்தன. குறிப்பாக இந்தாவுக்கு ஹார்மூஸ் நீர்முனை வழியே வர வேண்டிய கச்சா எண்ணெய் வருவதில் தாமதம் ஏற்பட்டதால், பெட்ரோல், டீசல் தொடங்கி சிலிண்டர் வரை விலை ஏறியது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்தனர்.

இந்த நிலையில், அமெரிக்கா – ஈரான் இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான அமைதி ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது. 14 அம்சங்கள் இடம் பெற்றுள்ள இந்த ஒப்பந்தம் உடனடியாக அமலுக்கு வந்தது. இதில் ஹார்மூஸ் ஜலசந்தியில் ஈரானுக்கு எதிரான அமெரிக்க கடற்படையின் முற்றுகை திரும்ப பெறப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் அமைதி ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டதை போல் ஹோர்முஸ் ஜலசந்தியில் ஈரான் துறைமுகங்களுக்கு எதிரான அனைத்து கடற்படை முற்றுகையையும் அதிகாரப்பூர்வமாக திரும்ப பெறப்பட்டுள்ளதாக அமெரிக்க ராணுவத்தின் மத்திய கட்டளைப் பிரிவு அறிவித்துள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version