சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது, சட்டமன்ற கூட்டம் கூடவுள்ள நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை கைது செய்திருப்பது கடும் ஜனநாயக விரோத செயலாகும். ‘ஜனநாயகன்’ என்ற திரைப்படத்தில் நடித்தாரே தவிர, ஜனநாயகம் என்றால் என்னவென்று கூட முதலமைச்சர் விஜய்க்குத் தெரியவில்லை. அனைத்து எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்களையும் கைது செய்துவிட்டு, ஆளில்லா மைதானத்தில் தனியாகப் பந்தாட நினைக்கிறார் முதல்வர். சட்டமன்றத்தில் எதிர்கொள்ளப் பயந்துதான் இந்தத் தந்திரமான கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
டெல்டா மாவட்டங்களில் தண்ணீர் வராதது குறித்துப் பொதுக்கூட்டத்தில் பேசப்பட்டபோது, கூட்டத்தில் இருந்த ஒருவர் திரிஷா குறித்துக் கேள்வி எழுப்பினார். அதற்கு உதயநிதி பதிலளித்தாரே தவிர, திரிஷா இந்த நாட்டின் பிரதமரா அல்லது முதலமைச்சரா? கூட்ட நெரிசலில் மக்கள் எழுப்பும் கேள்விகளுக்குப் பதிலளிப்பது இயல்புதான். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிசாமி காலத்தில்கூட இதுபோன்ற பல விவகாரங்கள் பேசப்பட்டிருக்கின்றனவே தவிர, அவதூறு பேச்சுக்காக யாரும் இதுவரை கைது செய்யப்பட்டதில்லை.
இந்தக் கைது நடவடிக்கை மூலம் உதயநிதி ஸ்டாலினை மேலும் பிரபலப்படுத்தி, அவரை ‘இளைய கலைஞர்’ என்று மக்கள் அழைக்க வழிவகுத்துள்ளார் முதல்வர். திரிஷாவை அரசியலுக்குக் கொண்டுவரும் மறைமுக முயற்சி இதுதானா என்ற கேள்விக்கு, தமிழகத்தில் எந்த விசித்திரமான நிகழ்வும் நடக்கலாம்; அதை ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும் என்று அவர் பதிலளித்தார்.
