Close Menu
    What's Hot

    வேலூர் : சட்டவிரோதமாக 2 நாட்டு துப்பாக்கி வைத்திருந்த நபர் கைது..! வனத்துறையினரின் அதிரடி நடவடிக்கை..!

    நீட் வினாத்தாள் கசிவு சர்ச்சை..!! விவாதிக்க நாங்க ரெடி..!! மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு உறுதி!

    தலைநகரில் ஜனநாயகம் நசுக்கப்படுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது –  ஒன்றிய அரசுக்கு  தவெக எதிர்ப்புக் குரல்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»வறட்சியால் விளைச்சல் குறைவு எதிரொலி…. தமிழகம் முழுவதும் கர்நாடக பொன்னி அரிசி விலை கிடுகிடு உயர்வு!
    Featured

    வறட்சியால் விளைச்சல் குறைவு எதிரொலி…. தமிழகம் முழுவதும் கர்நாடக பொன்னி அரிசி விலை கிடுகிடு உயர்வு!

    Editor TN TalksBy Editor TN TalksJuly 22, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    008 rice
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் இலவச அரிசி  வழங்கப்பட்டு வந்தாலும் பெரும்பாலானோர் கடைகளில் விற்கும் பொன்னி அரிசி வகைகளை விரும்பி வாங்குகின்றனர்.

    இந்த நிலையில் கடந்த இரண்டு வாரமாக அரிசி விலை கிடுகிடு என உயர்ந்து வருகிறது. கிலோ 55 ரூபாய்க்கு விற்கப்பட்ட கர்நாடக பொன்னி அரிசி கடந்த 15 நாட்களுக்கு முன்பு 10 ரூபாய் விலை உயர்ந்த நிலையில், தற்போது 15 ரூபாய் உயர்ந்து கிலோ ரூ.80 க்கு விற்கப்படுகிறது.

    25 கிலோ கொண்ட ஒரு சிப்பம் அரிசி 350 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளது. இதேபோல் இட்லி அரிசியும் கிலோ 35 ரூபாயிலிருந்து 50 ரூபாயாக அதிகரித்துள்ளது.

    கர்நாடகத்தில் நெல் விளைச்சல் குறைந்தது தான் விலை உயர்வுக்கு முக்கிய காரணம் எனக் கூறப்படுகிறது. விளைச்சல் குறைவால், அங்கிருந்து தமிழ்நாட்டுக்கு அரிசி லோடு வருவது வெகுவாக குறைந்து விட்டது. இந்த தட்டுப்பாட்டை சமாளிக்க கர்நாடகா மாநில வியாபாரிகள் தமிழகத்தில் விளைவிக்கப்படும் நாட்டு பொன்னி ரகத்தை கொள்முதல் செய்து வருகிறார்கள்.

    இதன் காரணமாக ரூ. 60 க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நாட்டுப் பொன்னி அரிசி இப்போது ரூ.85 க்கு விற்கப்படுகிறது.

    இது குறித்து வியாபாரிகள் கூறுகையில் நாட்டில் பரவலாக ஏற்பட்டுள்ள வறட்சி, நெல் உற்பத்தியை வெகுவாக பாதித்துவிட்டது. கர்நாடக மாநிலத்தில் விளைச்சல் குறைந்ததால் ஏற்பட்டுள்ள இந்த விலையேற்றம் கவலை தருவதாக உள்ளது. இந்த சூழ்நிலையில்  தமிழகத்திலும் நெல் உற்பத்தி குறைந்துள்ளது. கடந்த கோடை சாகுபடியில் ஒரு லட்சத்து 88 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்ட நிலையில் இந்த ஆண்டு 88 ஆயிரம் மெட்ரிக் டன் மட்டுமே கொள்முதல் ஆகி உள்ளது.

    இது தவிர ஆற்றுப் பாசனத்தில் குருவை சாகுபடி நடைபெறாத நிலையில் தமிழக அரசு குறுவை தொகுப்பு திட்டம் ஒன்றை அறிவித்திருந்தாலும் அரசு நிர்ணயித்த ஒரு லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடியானது இந்த ஆண்டு 60,000 ஏக்கர் பரப்பளவில் மட்டுமே  சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அதிலும் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளதால் மகசூல் குறையும் அபாயம் உள்ளது.

    எனவே வறட்சி காரணமாக நெல் சாகுபடியில் ஏற்பட்டுள்ள ஒட்டுமொத்த பின்னடைவு அரிசி விலை கடுமையாக உயர்வதற்கான காரணமாகி விட்டது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிப்படையும் சூழல் ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்தனர்.

    Agriculture Drought Impact Karnataka Ponni Rice Rice Price Hike tamil nadu
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசொன்னதை செய்தால் தான் மக்கள் ‘ஹீரோ’வாக பார்ப்பார்கள்..!! விஜய் குறித்து பிரேமலதா பேச்சு..!!
    Next Article ஆர்.எஸ்.எஸ் ஆதரவு அமைப்புகளுக்கு ஓ.என்.ஜி.சி ரூ.671 கோடி நிதி – எஸ்.டி.பி.ஐ குற்றச்சாட்டு!
    Editor TN Talks

    Related Posts

    வேலூர் : சட்டவிரோதமாக 2 நாட்டு துப்பாக்கி வைத்திருந்த நபர் கைது..! வனத்துறையினரின் அதிரடி நடவடிக்கை..!

    July 22, 2026

    நீட் வினாத்தாள் கசிவு சர்ச்சை..!! விவாதிக்க நாங்க ரெடி..!! மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு உறுதி!

    July 22, 2026

    தலைநகரில் ஜனநாயகம் நசுக்கப்படுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது –  ஒன்றிய அரசுக்கு  தவெக எதிர்ப்புக் குரல்

    July 22, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    வேலூர் : சட்டவிரோதமாக 2 நாட்டு துப்பாக்கி வைத்திருந்த நபர் கைது..! வனத்துறையினரின் அதிரடி நடவடிக்கை..!

    நீட் வினாத்தாள் கசிவு சர்ச்சை..!! விவாதிக்க நாங்க ரெடி..!! மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு உறுதி!

    தலைநகரில் ஜனநாயகம் நசுக்கப்படுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது –  ஒன்றிய அரசுக்கு  தவெக எதிர்ப்புக் குரல்

    திருப்பத்தூர்: வீட்டில் பதுக்கப்பட்டிருந்த ரூ.3 லட்சம் செம்மரக்கட்டைகள்; வனத்துறையினர் பறிமுதல்

    “மாணவர்கள் மீதான தடியடி வீடியோக்களை பார்க்க நேரமில்லை”!. அவசர வழக்காக விசாரிக்க தலைமை நீதிபதி மறுப்பு!.

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.