Close Menu
    What's Hot

    தவெக எம்.எல்.ஏவுக்கு ரூ.50கோடி பேரம்; ஸ்டாலினுக்கு வெட்கமில்லையா? – அமைச்சர் நிர்மல்குமார் காட்டம்

    “அமைச்சர் உறவினர்” எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

    எங்களுக்கு கட்சிப் பதவியே வேண்டாம் – எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுக முன்னணியினர்  எழுதிய கடிதம் வெளியானது  

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»தருமபுரி : மனைவி, மகளை நானே கொன்றுவிட்டேன்..! கடன் தொல்லை தாங்க முடியவில்லை..! தொழிலதிபரின் அதிர்ச்சி வீடியோ..!
    Featured

    தருமபுரி : மனைவி, மகளை நானே கொன்றுவிட்டேன்..! கடன் தொல்லை தாங்க முடியவில்லை..! தொழிலதிபரின் அதிர்ச்சி வீடியோ..!

    Editor web4By Editor web4July 1, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    10
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தருமபுரி மாவட்டத்தில் கடன் பிரச்சினையால் மனைவி மற்றும் மகளை கொலை செய்துவிட்டு, பின்னர் லாரி மீது இருசக்கர வாகனத்தை மோதச் செய்து உயிரிழந்த தொழிலதிபரின் சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்திற்கு முன்பு அவர் வெளியிட்ட வீடியோவும் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    தருமபுரி அன்னசாகரம் பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ் (45). டிரேடிங் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த இவருக்கு சரண்யா (35) என்ற மனைவியும், சாத்தியா (14) என்ற மகளும் இருந்தனர். சொந்த ஊரான அன்னசாகரத்தில் இருந்து தருமபுரி கோட்டை கோயில் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளனர்.

    கடந்த சில மாதங்களாக தொழிலில் ஏற்பட்ட கடும் நஷ்டம் மற்றும் அதிகரித்த கடன் சுமையால் சந்தோஷ் மிகுந்த மனஉளைச்சலில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், வீட்டில் இருந்த தனது மனைவி சரண்யாவை கழுத்தறுத்து கொலை செய்ததாகவும், பின்னர் தனது மகள் சாத்தியாவை எடைக்கல்லால் தாக்கி கொடூரமாக கொலை செய்துள்ளார் சந்தோஷ்.

    அதன்பிறகு இருசக்கர வாகனத்தில் வீட்டை விட்டு வெளியேறிய சந்தோஷ், தருமபுரி – கிருஷ்ணகிரி – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் புறவடை அருகே லாரி மீது தனது இருசக்கர வாகனத்தை மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    இதுகுறித்து தகவலறிந்த தருமபுரி டிஎஸ்பி சிவராமன் தலைமையிலான போலீசார், வீட்டில் உயிரிழந்திருந்த சரண்யா மற்றும் சாத்தியாவின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதேபோல், விபத்தில் உயிரிழந்த சந்தோஷின் உடலையும் அதியமான் கோட்டை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர்.

    உயிரிழப்பதற்கு முன்பு சந்தோஷ் தனது செல்போனில் பதிவு செய்த வீடியோவில், “என் மனைவியையும், மகளையும் நான்தான் கொன்றேன். தொழிலில் ஏற்பட்ட கடும் நஷ்டம் மற்றும் தீர்க்க முடியாத கடன் சுமையால் இந்த முடிவை எடுத்தேன். என்னை அனைவரும் மன்னித்துவிடுங்கள். என் குடும்பத்தினருக்கு எந்தத் தொந்தரவும் கொடுக்காதீர்கள். இந்த முடிவுக்கு வேறு யாரும் காரணம் இல்லை” என்று கூறியிருக்கிறார்.

    இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன் தலைமையில் போலீசார் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். உண்மையில் கடன் பிரச்சினை மட்டுமே காரணமா? அல்லது வேறு ஏதேனும் பின்னணி உள்ளதா? என்பதையும் விசாரித்து வருகின்றனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகடலூர் : பாரில் ஏற்பட்ட தகராறு..! அண்ணா கல்லூரி முன் நடந்த வெறித்தனமான தாக்குதல்..!
    Next Article 100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வறட்சியை சந்தித்த ஜூன் மாதம்!. பருவமழை பொய்த்தது ஏன்?
    Editor web4

    Related Posts

    தவெக எம்.எல்.ஏவுக்கு ரூ.50கோடி பேரம்; ஸ்டாலினுக்கு வெட்கமில்லையா? – அமைச்சர் நிர்மல்குமார் காட்டம்

    July 1, 2026

    “அமைச்சர் உறவினர்” எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

    July 1, 2026

    எங்களுக்கு கட்சிப் பதவியே வேண்டாம் – எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுக முன்னணியினர்  எழுதிய கடிதம் வெளியானது  

    July 1, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தவெக எம்.எல்.ஏவுக்கு ரூ.50கோடி பேரம்; ஸ்டாலினுக்கு வெட்கமில்லையா? – அமைச்சர் நிர்மல்குமார் காட்டம்

    “அமைச்சர் உறவினர்” எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

    எங்களுக்கு கட்சிப் பதவியே வேண்டாம் – எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுக முன்னணியினர்  எழுதிய கடிதம் வெளியானது  

    100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வறட்சியை சந்தித்த ஜூன் மாதம்!. பருவமழை பொய்த்தது ஏன்?

    தருமபுரி : மனைவி, மகளை நானே கொன்றுவிட்டேன்..! கடன் தொல்லை தாங்க முடியவில்லை..! தொழிலதிபரின் அதிர்ச்சி வீடியோ..!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.