Close Menu
    What's Hot

    காஞ்சிபுரம் : தலைமறைவாக இருந்த பிரபல ரவுடி தணிகா..! பாதுகாப்புடன் சிறையில் அடைப்பு..! 

    டாஸ்மாக் நிர்வாகத்தின் அதிரடி முடிவு..! மதுபான கொள்முதலில் புதிய நடைமுறை..!

    திருப்பத்தூர் : 510கிராம் கோயில் நகைகளை மோசடி செய்த நபர்..! திரும்ப கேட்கும் போது கொலை மிரட்டல் விடுப்பதாக புகார்..!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»” கைது செய்தால் அழுகை, மயக்கம்… திமுகவினர் டிராமா ” – அமைச்சர் நிர்மல்குமார் குற்றச்சாட்டு
    Featured

    ” கைது செய்தால் அழுகை, மயக்கம்… திமுகவினர் டிராமா ” – அமைச்சர் நிர்மல்குமார் குற்றச்சாட்டு

    Editor web2By Editor web2July 20, 2026Updated:July 20, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    011 nirmalkumar B
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார், விளாத்திகுளம் எம்எல்ஏ கைது விவகாரம், திமுக குற்றச்சாட்டுகள் மற்றும் அரசியல் சூழல் குறித்து விளக்கம் அளித்தார்.

    விளாத்திகுளம் தொகுதி எம்எல்ஏ கைது செய்யப்பட்டதற்கான காரணம் குறித்து பேசிய அமைச்சர், பொதுக்கூட்ட மேடையில் முதலமைச்சரை அவதூறாக பேசியதுடன், கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் கருத்து தெரிவித்ததால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் சூழல் உருவானதாக கூறினார். அதன்பேரில்தான் புகாரின் அடிப்படையில் காவல்துறை சட்டப்படி நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்தார்.

    திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “சட்டத்தின் ஆட்சியா, சாத்தானின் ஆட்சியா?” என விமர்சித்தது குறித்து கேட்கப்பட்டபோது, “முதல்வரின் கையை உடைப்பேன் என்று வெளிப்படையாக பேசிய எம்எல்ஏ மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க முடியாது. பொதுவெளியில் முதல்வருக்கு கொலை மிரட்டல் விடுப்பது சட்டவிரோதமான செயல்” என்று பதிலளித்தார்.

    மேலும், கடந்த திமுக ஆட்சியில் சமூக வலைதள பதிவுகளுக்கே குண்டர் சட்டம் பயன்படுத்தப்பட்டதாகவும், 70 வயது மூதாட்டியை கைது செய்ய ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டதாகவும் குற்றம்சாட்டினார்.

    திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனின் உயிருக்கு அச்சுறுத்தல் குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், “கைது என்பது வழக்கமான நடைமுறை. இதில் உயிருக்கு அச்சுறுத்தல் எதுவும் இல்லை. கரூரில் ஒருவர் கட்டிலுக்குக் கீழே சென்று அழுதார்; இன்று மற்றொருவர் காரில் மயக்கம் வருகிறது என்கிறார். திமுகவினர் தொடர்ந்து டிராமா செய்து கொண்டிருக்கிறார்கள். காவல்துறையினர் தங்கள் கடமையை மட்டுமே செய்துள்ளனர்” என்றார்.

    அதிமுகவில் இருந்து விலகும் நிர்வாகிகள் குறித்து கேட்கப்பட்டபோது, அவர்கள் கட்சித் தலைமையின் மீதான அதிருப்தியால் வெளியேறுவதாகவும், அதை “குதிரை பேரம்” என்று கூறுவது தவறானது என்றும் அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்தார். “குதிரை பேரம் என்பது எங்கள் எம்எல்ஏக்களுக்கு பணம் கொடுத்து விலைக்கு வாங்க முயன்றதைத்தான் குறிக்கும்” என்றும் அவர் விளக்கமளித்தார்.

    Nirmalkumar TamilNaduPolitics TVKGovernment VilathikulamMLA
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article‘ஜனநாயகன்’ புதிய ப்ரோமோ ரிலீஸ்..!! விஜய்யின் தரமான ‘கை’ செய்கை..!! கவனிச்சீங்களா..??
    Next Article வெடிக்கும் மாணவர்கள் போராட்டம்..!! வாயைக் கொடுத்து சர்ச்சையில் சிக்கிய கங்கனா ரனாவத்..!!
    Editor web2
    • Website

    Related Posts

    காஞ்சிபுரம் : தலைமறைவாக இருந்த பிரபல ரவுடி தணிகா..! பாதுகாப்புடன் சிறையில் அடைப்பு..! 

    July 21, 2026

    டாஸ்மாக் நிர்வாகத்தின் அதிரடி முடிவு..! மதுபான கொள்முதலில் புதிய நடைமுறை..!

    July 21, 2026

    திருப்பத்தூர் : 510கிராம் கோயில் நகைகளை மோசடி செய்த நபர்..! திரும்ப கேட்கும் போது கொலை மிரட்டல் விடுப்பதாக புகார்..!

    July 21, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    காஞ்சிபுரம் : தலைமறைவாக இருந்த பிரபல ரவுடி தணிகா..! பாதுகாப்புடன் சிறையில் அடைப்பு..! 

    டாஸ்மாக் நிர்வாகத்தின் அதிரடி முடிவு..! மதுபான கொள்முதலில் புதிய நடைமுறை..!

    திருப்பத்தூர் : 510கிராம் கோயில் நகைகளை மோசடி செய்த நபர்..! திரும்ப கேட்கும் போது கொலை மிரட்டல் விடுப்பதாக புகார்..!

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மாலை, இரவில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!

    டெல்லியில் நீட் தேர்வுக்கு எதிரான பேரணியில் தடியடி: 178 பேர் காயம், 70 பேர் கைது!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.