கேரள வனத்துறையின் பொதுமன்னிப்பு (Amnesty) திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படாத வனவிலங்கு பொருட்களை வைத்திருப்பவர்கள் அவற்றை அறிவித்து சட்ட நடவடிக்கைகளைத் தவிர்க்கலாம் என அறிவிக்கப்பட்டிரு. இந்தத் திட்டத்தின் கீழ்  மோகன்லால் புதிய அறிவிப்பை சமர்ப்பித்துள்ளார்.

ஏற்கெனவே தன்னிடம் 4 யானைத் தந்தங்கள் இருப்பதாக அறிவித்திருந்த மோகன்லால், தற்போது மேலும் 6 தந்தங்களை சேர்த்து மொத்தம் 10 தந்தங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும், ஸ்ரீகிருஷ்ணர், ஸ்ரீராமர், திருப்பதி பாலாஜி உள்ளிட்ட 13 தந்தச் சிலைகள் இருப்பதாகவும், அவற்றின் மொத்த எடை சுமார் 46 கிலோ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த தந்தங்களில் பெரும்பாலானவை பாரம்பரியமாக குடும்பத்திலிருந்து கிடைத்தவை அல்லது பரிசாக பெற்றவை என மோகன்லால் விளக்கம் அளித்துள்ளார்.

இந்நிலையில், தந்தங்கள் மற்றும் தந்தச் சிலைகளின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்த டி.என்.ஏ. பரிசோதனை மேற்கொள்ள கேரள வனத்துறை முடிவு செய்துள்ளது. இந்த வழக்கு கடந்த 2011-ஆம் ஆண்டு வருமான வரித்துறையினர் மோகன்லாலின் வீடுகளில் நடத்திய சோதனையில் யானைத் தந்தங்கள் மற்றும் தந்தச் சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து தொடங்கப்பட்டது. உரிய அனுமதியின்றி இரண்டு ஜோடி யானைத் தந்தங்களை வைத்திருந்ததாக வனத்துறை வழக்குப் பதிவு செய்தது.

பின்னர், இந்த வழக்கை திரும்பப் பெற கேரள அரசு முயன்றாலும், விசாரணை நீதிமன்றம் அதை நிராகரித்தது. அந்த முடிவை கேரள உயர்நீதிமன்றமும் உறுதி செய்து, மோகன்லால் மீதான வழக்கு தொடர்ந்து நடைபெற வேண்டும் என்று உத்தரவிட்டது. மேலும், கடந்த ஆண்டு அவரது வசமிருந்த தந்தப் பொருட்களுக்கான உரிமைச் சான்றிதழ்களையும் உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version