Close Menu
    What's Hot

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»எங்கள் டிமாண்டுகளுக்கு OK சொன்ன மத்திய அரசு..!! போராட்டத்தை வாபஸ் பெறுகிறோம்..!! CJP அறிவிப்பு..!!
    Featured

    எங்கள் டிமாண்டுகளுக்கு OK சொன்ன மத்திய அரசு..!! போராட்டத்தை வாபஸ் பெறுகிறோம்..!! CJP அறிவிப்பு..!!

    editor5By editor5July 25, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    WhatsApp Image 2026 07 25 at 5.45.26 PM
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    டெல்லி ஜந்தர் மந்தரில் நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் கல்வித் துறையில் சீர்திருத்தங்கள் வலியுறுத்தி நடைபெற்று வந்த ‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி’ (சிஜேபி) போராட்டம் இறுதியாக முடிவுக்கு வந்துள்ளது. மத்திய அரசுடன் நடைபெற்ற மூன்றாம் கட்ட அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தையில் அமைப்பின் மூன்று முக்கிய கோரிக்கைகளும் ஏற்கப்பட்டதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் நடைபெற்ற மாணவர்கள் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக சிஜேபி அறிவித்துள்ளது.

    சுகாதாரத் துறை அமைச்சரும் பாஜக தேசியத் தலைவருமான ஜே.பி. நட்டா தலைமையில் இன்று மதியம் நடைபெற்ற இந்த முக்கிய சந்திப்பு, பல நாட்கள் நீடித்த பதற்றமான போராட்டத்துக்கு திருப்புமுனையாக அமைந்தது. முதல் கட்டப் பேச்சுவார்த்தைக்கு முன்பு சிஜேபி அமைப்பினர் நாடாளுமன்றத்தை நோக்கி நடத்திய ‘சலோ சன்சாத்’ பேரணியின்போது போலீசாருடன் கடுமையான மோதல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அரசு பேச்சுவார்த்தைக்கு முன்வந்தது.

    ஜூலை 20 அன்று ஜே.பி. நட்டாவை சந்தித்த சிஜேபி பிரதிநிதிகள் தங்கள் கோரிக்கை மனுவை சமர்ப்பித்தனர். அமைச்சர் கோரிக்கைகளைப் பரிசீலிப்பதாக உறுதியளித்து, தற்காலிகமாகப் போராட்டத்தை நிறுத்துமாறு கேட்டுக்கொண்டார். இருப்பினும் போராட்டம் தொடர்ந்தது. இரண்டாம் கட்டப் பேச்சு, லடாக் தலைவர் சோனம் வாங்சுக் தனது 26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த பின்னர், ஜந்தர் மந்தருக்கு அருகிலுள்ள நடுநிலையான ‘கான்ஸ்டிடியூஷன் கிளப்’ இடத்தில் நடைபெற்றது.

    மத்திய அமைச்சர்கள் ஜே.பி. நட்டா மற்றும் ஜிதேந்திர சிங் ஆகியோருடன் சிஜேபியின் முதன்மை செய்தித் தொடர்பாளர் சௌரவ் தாஸ் மற்றும் அசுதோஷ் ரங்கா ஆகியோர் சுமார் இரண்டு மணி நேரம் பேசினர். இந்தச் சந்திப்பில் மாணவர்கள் மீதான எஃப்.ஐ.ஆர் வழக்குகளைத் திரும்பப் பெறுதல் மற்றும் பாதிக்கப்பட்ட மாணவர் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்குதல் ஆகிய இரு கோரிக்கைகளை அரசு கொள்கை அளவில் ஏற்றுக்கொண்டது. கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்பது குறித்து முடிவெடுக்க அவகாசம் கோரப்பட்டது.

    இந்நிலையில், மூன்றாம் கட்டப் பேச்சுவார்த்தைக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு தர்மேந்திர பிரதான் தனது ராஜினாமா கடிதத்தை பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பினார். இதனைத் தொடர்ந்து இன்றைய சந்திப்பில் மீதமிருந்த கோரிக்கையும் நிறைவேற்றப்பட்டதாக சிஜேபி தரப்பு தெரிவித்தது. இந்த உடன்பாடு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிரான போராட்டம் அமைதியான முறையில் முடிவுக்கு வந்துள்ள நிலையில், கல்வித் துறையில் மேலும் சீர்திருத்தங்கள் கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Central Government Cockroach Janata Party neet protest
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபேங்க் மேனேஜரின் கன்னம் சிவந்தது..! ஆவேசமான மு.க.அழகிரியின் மகள்! என்ன நடந்தது?
    Next Article “மேகதாது விவகாரத்தில் முதல்வர் விஜய்யின் முடிவு சாதகமானது”- ஐயூஎம்எல் தலைவர் காதர் மைதீன் பேட்டி!
    editor5

    Related Posts

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    August 9, 2026

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    August 9, 2026

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    August 9, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    தவெக அரசை கண்டித்து ஆகஸ்ட் 14-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்!. இபிஎஸ் அறிவிப்பு!

    மகாராஷ்டிராவில் அடுத்தடுத்து நிலநடுக்கம்!. வீடுகளில் விரிசல் ஏற்பட்டதால் வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.