Close Menu
    What's Hot

    போராட்ட மாணவர்கள் கைது விவகாரம்..!! விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

    திருச்சி காவேரி ஆற்றில் விபரீதம்!. டன் கணக்கில் செத்து குவியும் மீன்களால் அதிர்ச்சி!

    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சொத்து மோசடி..!! 19 பேர் மீது பாய்ந்தது வழக்கு..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»இடுக்கு பிள்ளையார் கோயிலுக்கு போறீங்களா? இனி முதலில் இந்த வழியாகத்தான் செல்ல வேண்டுமாம்..!!
    Featured

    இடுக்கு பிள்ளையார் கோயிலுக்கு போறீங்களா? இனி முதலில் இந்த வழியாகத்தான் செல்ல வேண்டுமாம்..!!

    editor5By editor5July 28, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    image 19 18
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் அருகே அமைந்துள்ள பிரசித்தி பெற்ற இடுக்கு பிள்ளையார் கோயில் சமீபகாலமாக ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. குகை வடிவிலான குறுகிய துவாரத்தின் வழியாக நெளிந்து வளைந்து செல்வதன் மூலம் நோய்கள் தீரும், கருப்பை பிரச்சினைகள் நீங்கி குழந்தை பாக்கியம் கிட்டும், பில்லி சூனியம் போன்ற எதிர்மறை சக்திகள் விலகும் என்பது பக்தர்களிடையே நிலவும் ஐதீகம்.

    இந்த அனுபவம், குழந்தை பிறக்கும் போது தாயின் கருப்பையிலிருந்து வெளியே வரும் செயல்முறையை நினைவூட்டுவதாக பக்தர்கள் கூறுகின்றனர். பின்புற வாசல் வழியாக ஒருக்களித்து நுழைந்து, உடலை வளைத்து முன்பக்கம் வெளியேறினால் பிள்ளையார் தரிசனம் கிடைக்கும். இத்தகைய நம்பிக்கையால் புதுமணத் தம்பதிகள் உள்ளிட்ட பலரும் இங்கு வருகை தருகின்றனர். ரத்த ஓட்டம் சீராகி உடல் வலிகள் குறையும் எனவும் பலர் அனுபவங்களைப் பகிர்ந்து வருகின்றனர்.

    எனினும், இந்த குறுகிய துவாரம் சிலருக்கு ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 24ஆம் தேதி இரவு 1.40 மணியளவில் ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் ராஜமகேந்திரவரம் அருகேயிருந்து கிரிவலம் வந்த தாசரி மணிக்குமார் (36) என்பவர் கோயிலுக்குள் நுழைந்தார். உடல்பருமன் காரணமாக அவர் சிக்கிக்கொண்டார். உறவினர்கள் மற்றும் பொதுமக்களின் முயற்சியும் பலனளிக்கவில்லை. மயக்கமடைந்த அவர் மீட்கப்பட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டபோது மருத்துவர்கள் அவரை இறந்துவிட்டதாக அறிவித்தனர்.

    இதைத் தொடர்ந்து நேற்று மற்றொரு ஆந்திரப் பெண் துவாரத்தில் சிக்கிக்கொண்ட நிலையில், பக்தர்களின் உதவியால் உயிர் காப்பாற்றப்பட்டார். இந்த இரு சம்பவங்களும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, கோயில் நிர்வாகம் முக்கிய முடிவெடுத்துள்ளது.

    உடல்பருமன் மிக்கவர்கள், உடல்நலம் பாதிக்கப்பட்டோர், வயதானவர்கள் ஆகியோர் துவாரத்திற்கு அருகிலே செல்லக் கூடாது என்று தடை விதிக்கப்பட்டுள்ளது. கோயிலின் நுழைவுப் பகுதியில் குறுகிய இரும்புக் கம்பிகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த கம்பிகளுக்கு இடையே நுழைய முடிந்தவர்கள் மட்டுமே உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவார்கள். மற்றவர்கள் வெளியே நின்றபடியே சுவாமி தரிசனம் செய்யலாம்.

    தமிழ், ஆங்கிலம், தெலுங்கு மொழிகளில் வழிகாட்டு அறிவிப்புகளுடன் கூடிய பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை வரவேற்பைப் பெற்றுள்ளது. கோயில் அதிகாரிகள், “ஐதீக நம்பிக்கையைப் பேணும் அதே வேளையில் பக்தர்களின் உயிர் பாதுகாப்பு முக்கியம்” என்று தெரிவித்துள்ளனர்.

     

     

    idukku pillaiyar temple tiruvannamalai
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதமிழ்நாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்திற்கே எப்போதும் முன்னுரிமை: அமைச்சர் நிர்மல்குமார் உறுதி!
    Next Article காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடகாவுக்கு ஆதரவு… மத்திய அரசு மீது சந்தேகம்  கிளப்பும் அண்ணாமலை!
    editor5

    Related Posts

    போராட்ட மாணவர்கள் கைது விவகாரம்..!! விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

    July 28, 2026

    திருச்சி காவேரி ஆற்றில் விபரீதம்!. டன் கணக்கில் செத்து குவியும் மீன்களால் அதிர்ச்சி!

    July 28, 2026

    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சொத்து மோசடி..!! 19 பேர் மீது பாய்ந்தது வழக்கு..!!

    July 28, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    போராட்ட மாணவர்கள் கைது விவகாரம்..!! விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

    திருச்சி காவேரி ஆற்றில் விபரீதம்!. டன் கணக்கில் செத்து குவியும் மீன்களால் அதிர்ச்சி!

    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சொத்து மோசடி..!! 19 பேர் மீது பாய்ந்தது வழக்கு..!!

    டெல்லியில் கர்நாடக எம்.பி.க்களுடன் சந்திப்பு…. மிகப்பெரிய வெற்றி என முதல்வர் டி.கே. சிவக்குமார் பெருமிதம்

    மேகதாது அணை… கீழ்நிலை மாநிலங்களின் ஒப்புதல் அவசியம்… பிரதமர் மோடிக்கு முதல்வர் சி. ஜோசப் விஜய் கடிதம்…

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.