Close Menu
    What's Hot

    சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் அப்ரெண்டீஸ் பணியிடம்: ஆக. 28 வரை விண்ணப்பிக்கலாம்

    இந்தியா – ஜார்ஜியா இடையே தேர்தல் நிர்வாக ஒத்துழைப்பு வலுப்படுத்த ஒப்புதல்!

    திமுகவில் வரலாற்று மாற்றம்.. 15 ஆண்டுகளை மனதில் வைத்து ஸ்டாலின் எடுத்த அதிரடி முடிவு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»கோயில்களில் இனி ஆன்லைன் டெண்டர் முறை, டிஜிட்டல் பில்லிங் அறிமுகம்!. அமைச்சர் ரமேஷ் அதிரடி!
    Featured

    கோயில்களில் இனி ஆன்லைன் டெண்டர் முறை, டிஜிட்டல் பில்லிங் அறிமுகம்!. அமைச்சர் ரமேஷ் அதிரடி!

    Editor web3By Editor web3July 30, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    minister ramesh 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழகத்திலுள்ள அனைத்துத் திருக்கோவில்களிலும் முறைகேடுகளைத் தடுத்து வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவரும் நோக்கில் புதிய மற்றும் பொதுவான டெண்டர் முறைகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

    கோவில்களில் உள்ள பூக்கடை, பழக்கடை, முடிகாணிக்கை செலுத்துமிடம் மற்றும் பிரசாதம் தயாரிக்கும் இடங்கள் போன்ற  டெண்டர்களில் ஒரே நபர் பல ஆண்டுகளாக தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருவதாகவும், பல இடங்களில் முறைகேடுகள் நடப்பதாகவும் புகார்கள் எழுந்துள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ள அவர், இத்தகைய நடைமுறைகளை மாற்றியமைக்க இந்த புதிய திட்டம் கொண்டுவரப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

    இந்த புதிய ஆன்லைன் முறையின்படி, டெண்டருக்கான அனைத்துப் படிவங்களும் ஒரே மாதிரியானதாக வடிவமைக்கப்பட்டு, முழுமையாக இணையதளம் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்கும் வசதி செய்யப்படும். முன்பு குறைந்த தொகையைக் கொட்டேஷனாக தருபவர்களுக்கு மட்டுமே டெண்டர் வழங்கப்பட்ட விதியை மாற்றி, கொட்டேஷன்கள் பெறப்பட்ட பிறகு சம்பந்தப்பட்டவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டு, அதன்பின் மிகக் குறைந்த விலையைக் கோருபவர்களுக்கு டெண்டர் ஒதுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ப்ரீ-பிட் மீட்டிங் (Pre-bid meeting) விதிமுறைகளில் தளர்வுகள் செய்யப்பட்டுள்ளதால், தகுதியுள்ள யார் வேண்டுமானாலும் எந்தவிதத் தயக்கமுமின்றி நேரடியாக டெண்டர் எடுத்து நடத்தலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    கோவில்களில் உள்ள கடைகள் மற்றும் பார்க்கிங் வசதிகளிலும் அதிரடி மாற்றங்கள் செய்யப்படவுள்ளன. கோவில்களில் இயங்கும் அனைத்துக் கடைகளிலும் டிஜிட்டல் பில்லிங் முறை கட்டாயமாக்கப்படுவதன் மூலம், முறையான விலைக்குப் பொருட்கள் விற்கப்படுகிறதா என்பதைக் கண்காணிக்கவும், கடைகளின் சரியான வருவாயைத் தெரிந்து கொள்ளவும் முடியும். அதேபோன்று, கோவில்களில் பார்க்கிங் கட்டணம் வெவ்வேறு விதமாக வசூலிக்கப்படுவதைத் தவிர்த்து, அனைத்துக் கோவில்களுக்கும் பொதுவான ஒரே மாதிரியான கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு அங்கும் டிஜிட்டல் பில் வழங்க ஏற்பாடு செய்யப்படும்.

    இதனிடையே, தூய்மைப் பணியாளர்கள் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்களுக்கு உரிய ஊதியம் வழங்கப்படுவதில்லை, அடிப்படை வசதிகள் மற்றும் அடையாள அட்டை போன்றவைகளில் குறைகள் உள்ளன என்ற புகார்களுக்குத் தீர்வு காணப்படவுள்ளது. இனி இவர்களுக்கு முறைப்படி ‘பே ஸ்லிப்’ (Pay Slip) வழங்கப்படுவதோடு, அவர்களின் சம்பளம் மற்றும் பிடித்தம் குறித்த அனைத்து விவரங்களும் வெளிப்படையாகத் தெரியப்படுத்தப்படும். தற்போது பல்வேறு கோவில்களில் ஒப்பந்தக் காலங்கள் வெவ்வேறாக இருப்பதால், ஒரே கட்டமாக அனைத்தையும் மாற்றாமல், அந்தந்தக் கோவில்களில் ஏற்கனவே உள்ள டெண்டர் காலம் முடியும்போது இந்த புதிய வழிமுறைகள் படிப்படியாக நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அமைச்சர் ரமேஷ் விளக்கமளித்துள்ளார்.

    digital billing koil Minister Ramesh Online tender system temples
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசபரிமலை நெய் வினியோகத்தில் ரூ.85 லட்சம் முறைகேடு? விசாரணைக்கு கேரள அரசு உத்தரவு!!
    Next Article கர்நாடகாவில் ‘ஜனநாயகன்’ போஸ்டர் கிழிப்பு… தமிழகத்துக்கு காவிரி நீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்
    Editor web3
    • Website

    Related Posts

    சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் அப்ரெண்டீஸ் பணியிடம்: ஆக. 28 வரை விண்ணப்பிக்கலாம்

    July 30, 2026

    இந்தியா – ஜார்ஜியா இடையே தேர்தல் நிர்வாக ஒத்துழைப்பு வலுப்படுத்த ஒப்புதல்!

    July 30, 2026

    திமுகவில் வரலாற்று மாற்றம்.. 15 ஆண்டுகளை மனதில் வைத்து ஸ்டாலின் எடுத்த அதிரடி முடிவு!

    July 30, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் அப்ரெண்டீஸ் பணியிடம்: ஆக. 28 வரை விண்ணப்பிக்கலாம்

    இந்தியா – ஜார்ஜியா இடையே தேர்தல் நிர்வாக ஒத்துழைப்பு வலுப்படுத்த ஒப்புதல்!

    திமுகவில் வரலாற்று மாற்றம்.. 15 ஆண்டுகளை மனதில் வைத்து ஸ்டாலின் எடுத்த அதிரடி முடிவு!

    தனியார் பள்ளி கட்டண கண்காணிப்புக்கு சிறப்பு குழு – அமைச்சர் ராஜ்மோகன்

    சுங்குவார்சத்திரம்; சிண்டெக்ஸ் டேங்காவது வையுங்க சார்… குடிநீர் பிரச்சினை… அமைச்சரிடம் முறையிட்ட பெண்கள்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.