மணிப்பூரில் கடந்த 2023-ம் ஆண்டு மெய்தி மற்றும் குக்கி இன மக்களுக்கு இடையே நடந்த கலவரத்தில் 260 பேர் உயிரிழந்தனர். கலவரம் நீடித்ததால் பைரேன் சிங் தலைமையிலான பாஜக அரசு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பதவி விலகியது. இதனையடுத்து குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. சட்டசபை முடக்கி வைக்கப்பட்டது.

கெம்சந்த் சிங் தலைமையிலான புதிய பாஜக அரசு கடந்த 4-ம் தேதி பதவியேற்றது. இதற்கு ஆதரவு தெரிவித்த குக்கி இன எம்.எல்.ஏக்களை கண்டித்து சுரசந்த்பூர் மாவட்டத்தில் முழு அடைப்பு நடத்தப்பட்டது. இதனால் அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. கடைகள், சந்தைகள் மூடப்பட்டு, குறைவான வாகனங்கள் மட்டுமே இயக்கப்பட்டது. கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்களில் குறைவான நபர்களே வந்திருந்தட்னர். முக்கிய இடங்களில் பாதுகாப்பு படைகள் நிறுத்தப்பட்டன.

முன்னதாக துய்போங் வனத்துறை கேட் அருகே கடந்த 5-ம் தேதி இரவு வன்முறை கும்பலுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல் வெடித்தது. நேற்று வரை நீடித்த இந்த தாக்குதலில் 2 பேர் காயமடைந்தனர். மீண்டும் கலவரம் வெடிக்காமல் இருக்க, போலீசார், பாதுகாப்பு படையினர் மாநிலம் முழுவதும் குவிக்கப்பட்டுள்ளனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version