Close Menu
    What's Hot

    கரூர் உயிரிழப்பு: 31 குடும்பங்களுக்கு வழங்கிய அரசு வேலை ரத்து… உயர் நீதிமன்றம் அதிரடி!

    இடுக்கு பிள்ளையார் கோவிலுக்கு போறீங்களா? இவங்களுக்கெல்லாம் அனுமதி இல்லையாம்..!!

    என் ஏரியாவுக்குள்ள வர்றியா? ஜெகதீஸ்வரி பெயரில் பரவும் ஆடியோ.. அரசியல் களத்தில் புதிய விவாதம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»இடுக்கு பிள்ளையார் கோவிலுக்கு போறீங்களா? இவங்களுக்கெல்லாம் அனுமதி இல்லையாம்..!!
    Featured

    இடுக்கு பிள்ளையார் கோவிலுக்கு போறீங்களா? இவங்களுக்கெல்லாம் அனுமதி இல்லையாம்..!!

    editor5By editor5July 27, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    image 37 7
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலைச் சுற்றியுள்ள புனித கிரிவலப் பாதையில் அமைந்துள்ள புகழ்பெற்ற இடுக்கு பிள்ளையார் கோயில் பக்தர்களிடையே பெரும் ஈர்ப்பைப் பெற்றிருந்தாலும், அதன் குறுகிய குகைப்பாதை சமீபகாலமாக உயிரிழப்பு மற்றும் ஆபத்துகளுக்கு காரணமாகி வருகிறது. இந்தக் கோயிலில் உள்ள சிறிய குகை அமைப்பு மூன்று வாசல்களைக் கொண்டுள்ளது. பக்தர்கள் பின் வாசல் வழியாக ஒருக்களித்து படுத்தவாறு உள்ளே நுழைந்து, கைகளை ஊன்றி முன் வாசல் வழியாக வெளியேறி, அங்குள்ள நந்தி சிலையை வணங்கி செல்லும் வழக்கம் உள்ளது.

    கடந்த 24-ம் தேதி நள்ளிரவில் ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதான மணிக்குமார் தனது குடும்பத்தினருடன் கிரிவலம் மேற்கொண்டார். இடுக்கு பிள்ளையார் கோயிலை அடைந்த அவர், பாரம்பரிய முறைப்படி குகைப்பாதை வழியாக நுழைந்தார். உடல் பருமன் காரணமாக உள்ளே சிக்கிக்கொண்ட அவர், மூச்சுத் திணறலால் தவித்து மயக்கமடைந்தார். சக பக்தர்கள் உடனடியாக முயன்று அவரை வெளியே இழுத்தனர். பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர், அங்கு ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். இந்தச் சம்பவம் பக்தர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    இந்தச் சோகம் மறைவதற்குள், அடுத்த நாள் அதே இடத்தில் மற்றொரு சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியது. ஆந்திராவைச் சேர்ந்த ஒரு பெண் பக்தர் கிரிவலத்தின்போது இடுக்கு பிள்ளையார் கோயிலுக்குச் சென்று குகைப்பாதை வழியாக உள்ளே நுழைந்தார். உடல் பருமன் காரணமாக அவரும் சிக்கிக்கொண்டார். உடனடியாக அங்கிருந்த பக்தர்கள் அவரது கையைப் பிடித்து இழுத்து பத்திரமாக வெளியேற்றினர். அதிர்ஷ்டவசமாக அந்தப் பெண்ணுக்கு பெரிய அளவில் உடல்நலக் குறைவு ஏற்படவில்லை.

    தொடர் சம்பவங்களை அடுத்து, இடுக்கு பிள்ளையார் கோயில் நிர்வாகம் முக்கிய முடிவு ஒன்றை எடுத்துள்ளது. குகைப்பாதை வழியாக நுழைய முயல்பவர்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்து பதாகை ஒன்றை வைத்துள்ளது. அதில், “உடல் பருமன் உள்ளவர்களுக்கும், உடல்நலக் குறைவு உள்ளவர்களுக்கும் அனுமதி இல்லை” என தெளிவாக எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது. கிரிவலம் வரும் லட்சக்கணக்கான பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    திருவண்ணாமலை கிரிவலப் பாதை ஆன்மீக ஆர்வலர்களின் முக்கியப் பாதையாக விளங்கும் நிலையில், இத்தகைய இடர்ப்பாடுகள் பக்தர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய அவசியத்தை உணர்த்துகின்றன. அதிகாரிகள் மேலும் பாதுகாப்பு ஏற்பாடுகளை வலுப்படுத்த வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    idukku pillaiyar temple tiruvannamalai
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஎன் ஏரியாவுக்குள்ள வர்றியா? ஜெகதீஸ்வரி பெயரில் பரவும் ஆடியோ.. அரசியல் களத்தில் புதிய விவாதம்!
    Next Article கரூர் உயிரிழப்பு: 31 குடும்பங்களுக்கு வழங்கிய அரசு வேலை ரத்து… உயர் நீதிமன்றம் அதிரடி!
    editor5

    Related Posts

    கரூர் உயிரிழப்பு: 31 குடும்பங்களுக்கு வழங்கிய அரசு வேலை ரத்து… உயர் நீதிமன்றம் அதிரடி!

    July 27, 2026

    என் ஏரியாவுக்குள்ள வர்றியா? ஜெகதீஸ்வரி பெயரில் பரவும் ஆடியோ.. அரசியல் களத்தில் புதிய விவாதம்!

    July 27, 2026

     ‘இணையற்ற இலக்கியத் திறமை’…ஞானபீட விருது பெற்றவைரமுத்துவிற்கு அமித் ஷா வாழ்த்து!

    July 27, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    கரூர் உயிரிழப்பு: 31 குடும்பங்களுக்கு வழங்கிய அரசு வேலை ரத்து… உயர் நீதிமன்றம் அதிரடி!

    இடுக்கு பிள்ளையார் கோவிலுக்கு போறீங்களா? இவங்களுக்கெல்லாம் அனுமதி இல்லையாம்..!!

    என் ஏரியாவுக்குள்ள வர்றியா? ஜெகதீஸ்வரி பெயரில் பரவும் ஆடியோ.. அரசியல் களத்தில் புதிய விவாதம்!

     ‘இணையற்ற இலக்கியத் திறமை’…ஞானபீட விருது பெற்றவைரமுத்துவிற்கு அமித் ஷா வாழ்த்து!

    சாதி சான்றிதழ் விவகாரத்தில் தமிழக அரசின் புதிய உத்தரவு.. யாருக்கெல்லாம் பொருந்தும்?

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.