Close Menu
    What's Hot

    தமிழ் இலக்கிய உலகின் முதுபெரும் கவிஞர் புவியரசு மறைவு..!! முதலமைச்சர் விஜய் இரங்கல்..!!

    பாஸ்போர்ட் எடுக்கப் போகிறீர்களா..?? இன்று முதல் அமலுக்கு வந்த புதிய கட்டணம்.. விவரம் இதோ!

    அரியானா : ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன்..! 21 மணி நேர போராட்டம்..! சடலமாக மீட்பு..!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»பெட்ரோல்-டீசல் மீதான கட்டுப்பாடுகளை நீக்கியது மத்திய அரசு..!! இன்று முதல் முழு சுதந்திரம்..!!
    Featured

    பெட்ரோல்-டீசல் மீதான கட்டுப்பாடுகளை நீக்கியது மத்திய அரசு..!! இன்று முதல் முழு சுதந்திரம்..!!

    editor5By editor5July 1, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    image 19
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    வளைகுடா பகுதியில் ஏற்பட்ட போர் பதற்றத்தால் உருவான எரிபொருள் நெருக்கடியைத் தொடர்ந்து, நாடு முழுவதும் விதிக்கப்பட்டிருந்த பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை கட்டுப்பாடுகளை மத்திய அரசு திரும்பப் பெற்றுள்ளது. இன்று (ஜூலை 1) முதல் இந்த உத்தரவு அமலுக்கு வருகிறது.கடந்த மாதம் ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டதால் கச்சா எண்ணெய் இறக்குமதி முடங்கியது. இதனால் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டது.

    விலை உயர்வு மற்றும் பற்றாக்குறை அச்சத்தால் பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் அதிக அளவில் பெட்ரோல்-டீசல் வாங்கிச் சேமித்ததால், சில பகுதிகளில் உள்ளூர் மட்டத்தில் தட்டுப்பாடு உருவானது. இதைத் தடுக்கும் வகையில் ஜூன் 12-ம் தேதி மத்திய பெட்ரோலிய அமைச்சகம் கடுமையான கட்டுப்பாடுகளை அறிவித்தது.

    அந்த உத்தரவின்படி, சில்லறை பெட்ரோல் நிலையங்களில் வாகனங்களின் டேங்கில் மட்டுமே எரிபொருள் நிரப்ப அனுமதி அளிக்கப்பட்டது. ஒரு வாடிக்கையாளருக்கு ஒரு நாளைக்கு 200 லிட்டருக்கு மேல் டீசல் வழங்கக் கூடாது என்றும், தொழில், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் பெரிய நுகர்வோர்கள் சில்லறை நிலையங்களில் இருந்து எரிபொருள் வாங்க தடை விதிக்கப்பட்டது. இந்த நடவடிக்கைகள் 90 நாட்களுக்கு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில், வளைகுடா பகுதியில் போர் பதற்றம் குறைந்து, ஹார்முஸ் நீரிணையில் கச்சா எண்ணெய் போக்குவரத்து சீராகத் தொடங்கியுள்ளது. இதனால் நாட்டின் பெட்ரோலியப் பொருட்கள் வினியோகம் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது. சூழ்நிலையை மதிப்பீடு செய்த மத்திய பெட்ரோலிய அமைச்சகம், கட்டுப்பாடுகளை நீக்க முடிவு செய்தது.

    நேற்று பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், “நிலவும் வினியோக நிலவரத்தை ஆய்வு செய்த பின்னர், ஜூன் 12-ம் தேதியிட்ட ஆணை இனி தேவையில்லை என முடிவு செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2026-ன் பெட்ரோலியப் பொருட்கள் சட்டத்தின் பிரிவு 3-ன் கீழ் வழங்கப்பட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி அந்த ஆணை திரும்பப் பெறப்படுவதாகவும், ஜூலை 1 முதல் இது அமலுக்கு வருவதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    இந்த முடிவால் பொதுமக்கள், வாகன உரிமையாளர்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் பெரும் நிம்மதி அடைந்துள்ளனர். எரிபொருள் வினியோகம் முழுமையாக சீரடைந்துள்ள நிலையில், விலை உயர்வு அழுத்தமும் சற்று குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், சர்வதேச சூழல் மாற்றங்களை உன்னிப்பாகக் கண்காணித்து, தேவைப்பட்டால் மீண்டும் நடவடிக்கை எடுக்க மத்திய அரசு தயாராக உள்ளது.

    Central Government petrol diesel
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஈரான்-அமெரிக்கா உறவில் புதிய திருப்பமா? ஈரான் ஜனாதிபதியுடன் பிரதமர் மோடி முக்கிய பேச்சு..!!
    Next Article ஊராட்சி பயிற்சி முகாம்: பெண் தலைவர்களுக்கு பதில் கணவர்கள் பங்கேற்பு..!! ஸ்ரீபெரும்புதூரில் அரங்கேறிய அவலம்..!!
    editor5

    Related Posts

    தமிழ் இலக்கிய உலகின் முதுபெரும் கவிஞர் புவியரசு மறைவு..!! முதலமைச்சர் விஜய் இரங்கல்..!!

    July 1, 2026

    பாஸ்போர்ட் எடுக்கப் போகிறீர்களா..?? இன்று முதல் அமலுக்கு வந்த புதிய கட்டணம்.. விவரம் இதோ!

    July 1, 2026

    அரியானா : ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன்..! 21 மணி நேர போராட்டம்..! சடலமாக மீட்பு..!

    July 1, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தமிழ் இலக்கிய உலகின் முதுபெரும் கவிஞர் புவியரசு மறைவு..!! முதலமைச்சர் விஜய் இரங்கல்..!!

    பாஸ்போர்ட் எடுக்கப் போகிறீர்களா..?? இன்று முதல் அமலுக்கு வந்த புதிய கட்டணம்.. விவரம் இதோ!

    அரியானா : ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன்..! 21 மணி நேர போராட்டம்..! சடலமாக மீட்பு..!

    தொடரும் சோகம்..!! அமோனியா வாயு கசிவு – பலி எண்ணிக்கை 17 ஆக உயர்வு..!!

    பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் இடையே பதற்றம் உச்சம்..!! தொடரும் டிரோன் அட்டாக்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.