Close Menu
    What's Hot

    தென்னகத்து ஜேம்ஸ்பாண்ட் ஜெய்சங்கரின் நினைவுநாள் இன்று

    திரைப்பாடல்களில் தனி முத்திரை பதித்த கலைஞர் கருணாநிதி

    முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதியின் 103வது பிறந்தநாள்!- ஒரு நூற்றாண்டு கண்ட தமிழினத்தின் இதயம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதியின் 103வது பிறந்தநாள்!- ஒரு நூற்றாண்டு கண்ட தமிழினத்தின் இதயம்!
    Featured

    முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதியின் 103வது பிறந்தநாள்!- ஒரு நூற்றாண்டு கண்ட தமிழினத்தின் இதயம்!

    Editor web1By Editor web1June 3, 2026Updated:June 3, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    2 2
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழக முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் 103-வது பிறந்தநாள் இன்று. ஒரு சாதாரணக் குடும்பத்தில் பிறந்து, தனது அறிவாற்றலாலும், தளராத உழைப்பாலும் தமிழகத்தின் தவிர்க்க முடியாத சக்தியாக உயர்ந்த கலைஞரின் வாழ்க்கைப் பயணம், ஒரு காவியம்.

    6 1

    1924-ம் ஆண்டு ஜூன் 3-ம் தேதி திருக்குவளையில் பிறந்த கலைஞர் கருணாநிதி, தனது இளம் வயதிலேயே சமூக மாற்றத்தின் மீது ஆர்வம் கொண்டார். ‘முரசொலி’ இதழைத் தொடங்கி, அதன் மூலம் தனது கொள்கைப் பரப்புரையைச் செய்தார். சினிமாத்துறையில் வசனகர்த்தாவாக நுழைந்த அவர், ‘பராசக்தி’ உள்ளிட்ட படங்களின் மூலம் சமூக அநீதிகளைத் திரையில் தோலுரித்துக் காட்டினார். வசனங்கள் மூலமே ஒரு தலைமுறையையே மாற்றியமைத்தவர் அவர்.

    தந்தை பெரியார் மற்றும் பேரறிஞர் அண்ணா ஆகியோரின் வழியில் திராவிட இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். 1957-ல் குளித்தலை தொகுதியில் இருந்து தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட கலைஞர் கருணாநிதி, தொடர்ந்து 60 ஆண்டுகளுக்கும் மேலாகச் சட்டமன்ற உறுப்பினராக இருந்து சாதனை படைத்தார். 1969-ல் அண்ணாவின் மறைவுக்குப் பிறகு, தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். ஐந்து முறை முதலமைச்சராகப் பணியாற்றிய கலைஞர், சமூக நீதியின் அடையாளமாகத் திகழ்ந்தார்.

    4 1

    3 1

    பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கான தனி இட ஒதுக்கீடு ஆகியவற்றிற்கு வித்திட்டவர். குடிசை மாற்று வாரியம், உழவர் சந்தைகள், கை ரிக்ஷாக்களை ஒழித்ததுது, மகளிர் சுயஉதவிக் குழுக்கள் போன்றவை அவர் முன்னெடுத்த முன்னோடித் திட்டங்கள். தமிழகம் முழுவதும் பாலங்கள், மேம்பாலங்கள் மற்றும் சாலை வசதிகளை மேம்படுத்தி நவீன தமிழகத்தை உருவாக்கினார். கலைஞர் கருணாநிதியின் அரசியல் பயணம் பெரும் சவால்களைக் கொண்டது. எமர்ஜென்சி காலத்தில் ஜனநாயகத்தைக் காக்க அவர் எடுத்த உறுதியான நிலைப்பாடு மற்றும் பல அரசியல் நெருக்கடிகள், அவரது தலைமைப் பண்பை உலகிற்கு பறைசாற்றின.

    ‘முத்தமிழறிஞர்’ என்று போற்றப்படும் கலைஞர், தமிழுக்கு ஆற்றிய பணிகள் ஈடு இணையற்றவை. தமிழுக்கு ‘செம்மொழி’ அந்தஸ்தைப் பெற்றுத் தந்ததில் கலைஞரின் பங்கு முக்கியமானது. திருக்குறளுக்கு அவர் எழுதிய ‘குறளோவியம்’, ‘சங்கத்தமிழ்’, ‘தொல்காப்பியப் பூங்கா’ எனத் தமிழ் இலக்கியத்திற்கு அவர் வழங்கிய உரை விளக்கங்கள் காலத்தால் அழியாதவை. முக்கடல் சங்கமிக்கும் குமரியில் வள்ளுவருக்கு சிலை எடுத்து, குறளின் பெருமைக்கு மேலும் பெருமை சேர்த்தார். அரசு அலுவலகங்களில் கோப்புகள் முதல், மொழி வளர்ச்சி வரை எங்கும் தமிழ் ஒலிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.

    5 1

    எந்தப் பதவியில் இருந்தாலும், கலைஞரின் கைப்பேனாவும், நாக்கும் தமிழின் உரிமைக்காகவே ஓயாது உழைத்தன. இன்று அவரது 103-வது பிறந்தநாளில், அவர் விதைத்த சமத்துவக் கொள்கைகளும், அவர் கட்டிக் காத்த சமூக நீதியும் தமிழகத்தின் அடையாளமாக இன்றும் நிலைத்து நிற்கின்றன. “எதையும் தாங்கும் இதயம் வேண்டும்” என்ற அவரது தாரக மந்திரம், இன்றும் பல இளைஞர்களுக்குப் போராட்டத்திற்கான ஊக்கத்தை இன்றும் அளித்துக் கொண்டிருக்கிறது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஇத்தனை திட்டங்களா? – மலைக்க வைக்கும் கலைஞர் கருணாநிதி!
    Next Article திரைப்பாடல்களில் தனி முத்திரை பதித்த கலைஞர் கருணாநிதி
    Editor web1
    • Website

    Related Posts

    தென்னகத்து ஜேம்ஸ்பாண்ட் ஜெய்சங்கரின் நினைவுநாள் இன்று

    June 3, 2026

    திரைப்பாடல்களில் தனி முத்திரை பதித்த கலைஞர் கருணாநிதி

    June 3, 2026

    இத்தனை திட்டங்களா? – மலைக்க வைக்கும் கலைஞர் கருணாநிதி!

    June 3, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தென்னகத்து ஜேம்ஸ்பாண்ட் ஜெய்சங்கரின் நினைவுநாள் இன்று

    திரைப்பாடல்களில் தனி முத்திரை பதித்த கலைஞர் கருணாநிதி

    முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதியின் 103வது பிறந்தநாள்!- ஒரு நூற்றாண்டு கண்ட தமிழினத்தின் இதயம்!

    இத்தனை திட்டங்களா? – மலைக்க வைக்கும் கலைஞர் கருணாநிதி!

    கலைஞர் வழங்கிய இசைஞானிப் பட்டம்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026

    குடியரசுத் தலைவருடன் தென்னாப்பிரிக்க துணை அதிபர் சந்திப்பு

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.