Close Menu
    What's Hot

    திருவள்ளூர் அருகே சோகம் : தொழிற்சாலையில் வாயுக் கசிவு… 7   பேர் பலி!

    நகராட்சி பெயரில் போலி ரசீது; கோவில்பட்டியில் இப்படியும் ஒரு வசூல்

    கல்லூரி மாணவிக்கு பாலியல் சீண்டல் ; பேராசிரியரைக்  கைது செய்த சிங்கப் பெண்படை

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»மேகதாது விவகாரத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டவேண்டும் – திருமாவளவன் வலியுறுத்தல்
    Featured

    மேகதாது விவகாரத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டவேண்டும் – திருமாவளவன் வலியுறுத்தல்

    Editor TN TalksBy Editor TN TalksJune 21, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    006 thiruma
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    வேலூர்மாவட்டம்,வேலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார்.

    அப்போது, விடுதலை சிறுத்தைகள் கட்சி விருதுகள் வழங்கும் விழா ஜூ 5 ஆம் தேதி சென்னையில் நடைபெறுவதாகவும் ஆகஸ்ட் 17-இல் தன்னுடைய பிறந்த நாளில் தமிழ் தேசிய மாநாடு நடைபெற உள்ளதாகவும், இந்த மாநாட்டுக்காக  மண்டல வாரியாக முன்னணி பொறுப்பாளர்களை சந்திக்கவுள்ளதாகவும் கூறினார்.

    மதசார்பின்மையை பாதுகாப்பதில் விசிக உண்மையாக இருப்பதாகவும், தமிழகத்தில் மதவாத சக்திகளுக்கு இடமில்லை என்பதை நடந்து முடிந்த தேர்தலில் மக்கள் உறுதி படுத்தியுள்ளதாகவும் கூறியவர் அண்ணாமலை விவகாரத்துக்கு வந்தார்.

    அண்ணாமலை பாஜகவிலிருந்து வெளியேறி அனுமதி பெற்று ஒரு இயக்கத்தை துவங்குகிறார். அவர் பாஜகவிலிருந்து வெளியேறுவது என்றால் செய்தியாளர்களுக்கு அறிவிப்பு செய்தால் போதும். ஆனால் அரசு அதிகாரி போல் பாஜகவிக்கு விலகல் கடிதம் கொடுத்து அனுமதி பெற்று அதன் பின்னர் புதிய இயக்கம் துவங்குகிறார் என்பது கவனிக்கப்பட வேண்டும். மதவாத அரசியல் எந்த அவதாரம் எடுத்தாலும் தமிழக மக்கள் கண்டுகொள்வார்கள் எனத் தெரிவித்தார்.

    தொடர்ந்து மேகதாது விவகாரம் குறித்த கேள்விக்கு, மேகதாதுவில் அணைகட்ட இந்திய ஒன்றிய அரசு அனுமதிக்க கூடாது என முதல்வர் தெளிவுபடுத்தியுள்ளார். அதனை உறுதிபடுத்தவே சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேகதாதுவில் அணைகட்டினால் தமிழகம் எந்த வகையில் பாதிக்கப்படும், விவசாயிகளும் மக்களும் கால்நடைகளும் எவ்வாறு பாதிக்கப்படும் என கவலை மேலோங்கி உள்ளது எனக் கூறியவர்,  அனைத்து கட்சிகளும் எவ்வளவு கருத்து முரண்பாடுகள் இருந்தாலும் இதில் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் எனவும்,  இது தொடர்பாக அனைத்து கட்சி கூட்டம் கூட்ட வேண்டுமென முதல்வருக்கு விசிக வேண்டுகோள் விடுப்பதாகவும் தெரிவித்தார்.

    மேலும் மேகதாது அணை விவகாரத்தில், தமிழ்நாட்டின் நலனை முன்னிறுத்தி காங்கிரஸ் முடிவு எடுத்துள்ளதாகவும்,  இதுதான் கடந்த கால வரலாறு எனவும், கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தாலும் தமிழ்நாடு காங்கிரஸ் தமிழக மக்கள் முயற்சிக்கு ஒத்துழைப்பார்கள் எனவும் திருமாவளவன் கூறினார்.

    தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் குறித்த வினாவுக்கு, பாலியல் கொடுமைகள் பெண்கள் சிறுமிகள் பாதுகாப்பில் கூடுதல் கவணம் செலுத்த வேண்டுமென்ற பொறுப்புணர்வு முதல்வருக்கு இருக்கிறது என்பதை உறுதிபடுத்துவதுதான் சிங்கபெண் திட்டம் எனவே இதனை ஒட்டி அவர் தீவிரமாக வல்லுநர்களுடன் கலந்துபேசி தடுப்பு நடவடிக்கைகளை செய்வார் என நம்பிக்கையுடன் கூறினார்.

    நியாயவிலைக்கடைகளில் வழங்கப்படும் அரிசி மாடுகளால்தான் சாப்பிட முடியும் என ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளார் என்றால் மக்களால் அதனை சாப்பிட முடியாததால் மாடுகளுக்கு தீனியாக போடுவதாக சொல்லியுள்ளார். நல்ல அரிசி போடுவது மக்களின் எதிர்பார்ப்பு திமுக அரசு மீது குறை சொல்வதை விட நல்ல அரிசியை அரசு வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

     

    All Party Meeting Cauvery Water Dispute Mekedatu Issue thirumavalavan
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleநீட் மறு தேர்வு தொடங்கியது… 22.79 லட்சம் மாணவர்கள் பங்கேற்பு!
    Next Article ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் மூடியது ஈரான்!
    Editor TN Talks

    Related Posts

    திருவள்ளூர் அருகே சோகம் : தொழிற்சாலையில் வாயுக் கசிவு… 7   பேர் பலி!

    June 21, 2026

    நகராட்சி பெயரில் போலி ரசீது; கோவில்பட்டியில் இப்படியும் ஒரு வசூல்

    June 21, 2026

    கல்லூரி மாணவிக்கு பாலியல் சீண்டல் ; பேராசிரியரைக்  கைது செய்த சிங்கப் பெண்படை

    June 21, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    திருவள்ளூர் அருகே சோகம் : தொழிற்சாலையில் வாயுக் கசிவு… 7   பேர் பலி!

    நகராட்சி பெயரில் போலி ரசீது; கோவில்பட்டியில் இப்படியும் ஒரு வசூல்

    கல்லூரி மாணவிக்கு பாலியல் சீண்டல் ; பேராசிரியரைக்  கைது செய்த சிங்கப் பெண்படை

    ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் மூடியது ஈரான்!

    மேகதாது விவகாரத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டவேண்டும் – திருமாவளவன் வலியுறுத்தல்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.