Close Menu
    What's Hot

    சூடுபிடிக்கும் தூத்துக்குடி லாக்கப் டெத் வழக்கு..!! தொடங்கியது பிரேத பரிசோதனை..!!

    தவெக கோஷ்டி மோதலால் தேனியில் பதற்றம்.. எம்.எல்.ஏ. கார் கண்ணாடி உடைப்பு!

    இந்த ஆண்டிலேயே இலக்கு.. தெருநாய் தொல்லைக்கு முற்றுப்புள்ளி வைக்க தமிழக அரசு தீவிரம்..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»என் அண்ணா நல்லாத்தான் இருந்தாரு.. போலீஸ் தான் காரணம்..!! அருணாச்சலத்தின் தம்பி பரபரப்பு பேட்டி..!!
    Featured

    என் அண்ணா நல்லாத்தான் இருந்தாரு.. போலீஸ் தான் காரணம்..!! அருணாச்சலத்தின் தம்பி பரபரப்பு பேட்டி..!!

    editor5By editor5July 24, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Screenshot 2026 07 24 at 6.58.14 AM 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தூத்துக்குடி மாவட்டம் அமுதநகர் பகுதியைச் சேர்ந்த நாகராஜின் மகன் அருணாச்சலம், மூன்றாவது மைல் அருகே செயல்படும் அரசு மதுபானக் கடையுடன் இணைந்திருந்த மதுபானக் கூடத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். அரசு மதுபானக் கடை மூடப்பட்ட பின்னரும் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் நிலையில், கடந்த 17-ஆம் தேதி காலை போலீசார் நடத்திய சோதனையில், அவரிடமிருந்து 120 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து தாளமுத்துநகர் காவல் நிலையத்தைச் சேர்ந்த போலீஸ் மீனாட்சிசுந்தரம் மற்றும் தென்பாகம் காவல் நிலைய போலீசார் இணைந்து அருணாச்சலத்தை கைது செய்து, சட்டவிரோத மது விற்பனை தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் நடைமுறையின் ஒரு பகுதியாக, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடல்நலத் தகுதிச் சான்று பெறப்பட்டதாகவும், அதன் பிறகு காவல் நிலையத்தில் உள்ள விசாரணைக் கைதிகள் வைக்கப்படும் அறையில் மற்ற கைதிகளுடன் தங்க வைக்கப்பட்டிருந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.

    அப்போது அருணாச்சலத்திற்கு திடீரென வலிப்பு ஏற்பட்டு கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதாகவும், உடனடியாக குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பியதாகவும் போலீஸ் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

    மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அருணாச்சலத்திற்கு தலையின் பின்பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக அதிக ரத்தக்கசிவு இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து கடந்த 21-ஆம் தேதி அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும், தொடர்ந்து தீவிர சிகிச்சையில் இருந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அருணாச்சலத்தின் மரணத்திற்கு காவல் நிலையத்தில் போலீசார் தாக்கியதே காரணம் என குற்றம்சாட்டிய அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், இந்த விவகாரம் குறித்து அவரது தந்தை நாகராஜ் தென்பாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

    இந்நிலையில், அருணாச்சலத்தின் தம்பி சுடலைமணி, “என் அண்ணன் முழுமையான உடல்நலத்துடன் இருந்தார். அவருக்கு எந்தவித உடல்நலக் குறையும் இல்லை. காவல்துறையினர் தாக்கியதால்தான் தலையில் காயம் ஏற்பட்டு உயிரிழந்தார்” என்று குற்றம்சாட்டினார். மேலும், பிரேதப் பரிசோதனை நீதித்துறை நடுவர் முன்னிலையில் வீடியோ பதிவு செய்யப்பட்டு நடத்தப்பட வேண்டும் என்றும், சம்பவத்தில் தொடர்புடைய காவல்துறையினருக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுத்து, உண்மை வெளிச்சத்துக்கு கொண்டு வரப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

    இதற்கிடையில், முன்னாள் அமைச்சர்கள் கீதா ஜீவன் மற்றும் சண்முகநாதன் ஆகியோர் மருத்துவமனைக்கு சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்ததுடன், அவர்களின் கோரிக்கைக்கும் ஆதரவு தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளும் விசாரணை மீது பொதுமக்கள் கவனம் திரும்பியுள்ளது.

    Arunachalam Death thoothukudi
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதக்காளி வரத்து அதிகரிப்பு.. விலை கடும் சரிவு..!! சோகத்தில் கிருஷ்ணகிரி விவசாயிகள்..!!
    Next Article கவுண்ட்டவுன் தொடக்கம்.. அடுத்த மாதம் வெளியாகிறது ‘வீ த லீடர்ஸ்’ கட்சியின் பெயரும் கொடியும்!
    editor5

    Related Posts

    சூடுபிடிக்கும் தூத்துக்குடி லாக்கப் டெத் வழக்கு..!! தொடங்கியது பிரேத பரிசோதனை..!!

    July 24, 2026

    தவெக கோஷ்டி மோதலால் தேனியில் பதற்றம்.. எம்.எல்.ஏ. கார் கண்ணாடி உடைப்பு!

    July 24, 2026

    இந்த ஆண்டிலேயே இலக்கு.. தெருநாய் தொல்லைக்கு முற்றுப்புள்ளி வைக்க தமிழக அரசு தீவிரம்..!!

    July 24, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சூடுபிடிக்கும் தூத்துக்குடி லாக்கப் டெத் வழக்கு..!! தொடங்கியது பிரேத பரிசோதனை..!!

    தவெக கோஷ்டி மோதலால் தேனியில் பதற்றம்.. எம்.எல்.ஏ. கார் கண்ணாடி உடைப்பு!

    இந்த ஆண்டிலேயே இலக்கு.. தெருநாய் தொல்லைக்கு முற்றுப்புள்ளி வைக்க தமிழக அரசு தீவிரம்..!!

    கவுண்ட்டவுன் தொடக்கம்.. அடுத்த மாதம் வெளியாகிறது ‘வீ த லீடர்ஸ்’ கட்சியின் பெயரும் கொடியும்!

    என் அண்ணா நல்லாத்தான் இருந்தாரு.. போலீஸ் தான் காரணம்..!! அருணாச்சலத்தின் தம்பி பரபரப்பு பேட்டி..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.