Close Menu
    What's Hot

    பாக்ஸ் ஆபீஸில் வசூல் சாதனை படைக்கும் ‘கட்டா குஸ்தி 2’: உலகளவில் ரூ. 55 கோடியைக் கடந்தது!

    மும்பை: ’நீட்’ போராட்டக்காரர்களுக்கு அதிகாலை வாட்ஸ்அப்பில் போலீஸ் நோட்டீஸ்

    CJP போராட்டத்தை நசுக்க பாஜக – காங்கிரஸ் நாடகம்- ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»திரிணாமுல் காங்., எம்.பி. மீது தாக்குதல்!. மேற்கு வங்கத்தில் அடுத்தடுத்து அரங்கேறும் வன்முறை!
    Featured

    திரிணாமுல் காங்., எம்.பி. மீது தாக்குதல்!. மேற்கு வங்கத்தில் அடுத்தடுத்து அரங்கேறும் வன்முறை!

    Editor web3By Editor web3May 31, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    west bengal mp attack
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மேற்கு வங்க மாநிலம் ஹூக்ளி மாவட்டத்தில் உள்ள சண்டிதலா காவல் நிலையம் முன்பாக திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜக தொண்டர்களுக்கிடையே ஏற்பட்ட பயங்கர மோதலில், திரிணாமுல் காங்கிரஸ் எம்பி கல்யாண் பானர்ஜி தலையில் பலத்த காயமடைந்துள்ளார்.

    https://x.com/ANI/status/2060977248484946043?

    திரணாமுல் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சிலர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, சண்டிதலா காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளிக்க டிஎம்சி தலைவர்கள் திட்டமிட்டிருந்தனர். இதற்காக அவர்கள் காவல் நிலையம் நோக்கி வந்துகொண்டிருந்த போது, அங்கு கூடியிருந்த பாஜக தொண்டர்கள் டிஎம்சிக்கு எதிராக “திருடன், திருடன்” என முழக்கமிட்டதாகக் கூறப்படுகிறது.

    இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி, திடீரென அது வன்முறையாக மாறியது. இந்த தள்ளுமுள்ளு மற்றும் மோதலின் போது, டிஎம்சி எம்பி கல்யாண் பானர்ஜியின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவருக்கு அங்கு முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.

    இதற்கு முந்தைய நாள் தான், டிஎம்சி கட்சியின் மூத்த எம்பியான அபிஷேக் பானர்ஜி மீது தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தின் சோனார்பூர் பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டது. தேர்தல் பிந்தைய வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களைச் சந்திக்கச் சென்ற போது இந்த விபரீதம் நிகழ்ந்தது.

    அப்போது அங்கு கூடியிருந்த கும்பல் அபிஷேக் பானர்ஜி மீது முட்டைகளையும், கற்களையும் வீசி எறிந்ததோடு, அவரை அடிக்கவும் முயன்றனர். இது தொடர்பான வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    “இது பாஜகவினர் திட்டமிட்டு நடத்திய தாக்குதல். சம்பவ இடத்தில் போதிய போலீஸ் பாதுகாப்பு இல்லை. இதுகுறித்து ஆளுநரிடம் முறையிடுவேன்” என்று அபிஷேக் பானர்ஜி தெரிவித்துள்ளார். பலத்த பாதுகாப்புடன் மீட்கப்பட்ட அவர், கொல்கத்தாவில் சிகிச்சை பெற்ற பின், மீண்டும் வன்முறையால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரைச் சந்தித்தார்.

    மறுபுறம், இதே நாளில் சட்டமன்றச் செயலகத்தில் சமர்ப்பிக்கப்பட்ட கடிதம் ஒன்றில் போலி கையெழுத்திட்டதாகக் கூறப்படும் வழக்கில், மேற்கு வங்க சிஐடி (CID) போலீசார் அபிஷேக் பானர்ஜிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இதுகுறித்து சட்ட நிபுணர்களுடன் கலந்தாலோசித்து உரிய பதில் அளிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

    அடுத்தடுத்து டிஎம்சி எம்பிக்கள் மீது நடத்தப்பட்டு வரும் இந்தத் தாக்குதல் சம்பவங்கள் மேற்கு வங்காளத்தில் அரசியல் ரீதியான பதற்றத்தை உச்சக்கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளன.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஉள்ளாட்சி தேர்தல்… திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா?
    Next Article 500 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து!. சுற்றுலா பயணிகள் 8 பேர் பலி!
    Editor web3
    • Website

    Related Posts

    மும்பை: ’நீட்’ போராட்டக்காரர்களுக்கு அதிகாலை வாட்ஸ்அப்பில் போலீஸ் நோட்டீஸ்

    July 21, 2026

    CJP போராட்டத்தை நசுக்க பாஜக – காங்கிரஸ் நாடகம்- ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

    July 21, 2026

    அங்கன்வாடியில் வழங்கிய முட்டையில் அழுகிய கோழிக்குஞ்சு… பெற்றோர் அதிர்ச்சி!

    July 21, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பாக்ஸ் ஆபீஸில் வசூல் சாதனை படைக்கும் ‘கட்டா குஸ்தி 2’: உலகளவில் ரூ. 55 கோடியைக் கடந்தது!

    மும்பை: ’நீட்’ போராட்டக்காரர்களுக்கு அதிகாலை வாட்ஸ்அப்பில் போலீஸ் நோட்டீஸ்

    CJP போராட்டத்தை நசுக்க பாஜக – காங்கிரஸ் நாடகம்- ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

    அங்கன்வாடியில் வழங்கிய முட்டையில் அழுகிய கோழிக்குஞ்சு… பெற்றோர் அதிர்ச்சி!

    பழனி கோயில் நில மோசடி வழக்கு: முன்னாள் இணை ஆணையர் உள்ளிட்ட 4 பேரிடம் 6 மணி நேரம் சிபிசிஐடி விசாரணை நிறைவு!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.