திமுக ஆட்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து இரண்டாவதாகப் பாடப்பட்டிருப்பதாக சில ஆதாரங்களைச் தமிழக வெற்றிக்கழகம் சுட்டிக்காட்டியுள்ளது.

இது தொடர்பான தவெக ஐடிவிங்கின் எக்ஸ்தளப் பதிவில் கூறப்பட்டிருப்பதாவது….

கடந்த 24.9.2024ஆம் தேதி, சென்னை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 166ஆவது பட்டமளிப்பு விழா மற்றும் 04.10.2023ஆம் தேதி அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 85ஆவது பட்டமளிப்பு விழா 14.10.2024ஆம் தேதி, பாரதியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 39ஆவது பட்டமளிப்பு விழாக்களில் எல்லாம் தமிழ்த்தாய் வாழ்த்து இரண்டாவதாகத்தான் பாடப்பட்டது. இந்த விழாக்களில் உயர்கல்வித் துறை அமைச்சர்களாக இருந்த க.பொன்மொழி, கோ..வி.செழியன் கலந்து கொண்டதாகக் குறிப்பிட்டு, தமிழ்நாட்டின் மரபை மீறிய விழாக்களை மண், மொழி, மானம் காக்கும் கொள்கைவழி நின்று சிறப்பித்துள்ளதாக விமர்சித்துள்ளது.

மேலும், கடந்த தி.மு.க. ஆட்சியில் 2-8-2021 அன்று, இந்தியக் குடியரசுத் தலைவர் அவர்கள் பங்கேற்ற , தமிழகச் சட்டப் பேரவையில் நடைபெற்ற கலைஞர் கருணாநிதி அவர்களின் புகைப்படம் திறக்கப்பட்ட நிகழ்விலும்,  தமிழகச் சட்டப் பேரவையின் நூற்றாண்டு விழாவிலும், முதலில் தேசிய கீதமும் இரண்டாவதாக தமிழ்த்தாய் வாழ்த்தும் பாடப்பட்டதாகவும் கூறியுள்ளது.

அதே வேளை தவெக ஆட்சியில், 18.06.2026ஆம் தேதி தமிழகச் சட்டமன்றத்தில் நடைபெற்ற ஆளுநர் உரை நிகழ்ச்சியிலேயே தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட்டு, தமிழகச் சட்டப்பேரவையின் மரபும் மாண்பும் காப்பாற்றப்பட்டதாகவும்,

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை விழாவையே, தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்படாததை ஏற்க முடியாது என்று கூறிப் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் தவெக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் விரும்பும் முதல்வர் ஜோசவ் விஜய் அவர்களின் தலைமையிலான த.வெ.க. ஆட்சியில்தான் இதுபோன்ற தமிழ் காக்கும் முயற்சி தொடர்கிறது என்பதை மக்கள் அறிவர். வழக்கம்போல இதில், திமுக கண்ணை மூடிக்கொண்டு கதறவே செய்யும்.

தமிழக மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் விதமாகவும், தமிழகச் சட்டமன்றத்தின் மரபைச்  சீர்குலைத்தும், தமிழ்த்தாய் வாழ்த்தின் முக்கியத்துவத்தைச் சிறுமைப்படுத்தியும் மக்கள் விரோத ஆட்சி நடத்திய தி.மு.க.வின் ஆட்சி தூக்கி எறியப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, மக்கள் ஆதரவில் அமையப்பெற்ற மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான த.வெ.க. ஆட்சியில் தமிழ்த்தாய் வாழ்த்தின் முக்கியத்துவம் பேணிக் காக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version