தமிழ்நாடு சட்டமன்றத்திற்கான தேர்தல் நாளை ஒரே கட்டமாக நடைபெறவுள்ள நிலையில், வாக்குப்பதிவுக்கான இறுதிக்கட்ட வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நாளை காலை 7 மணிக்கு தொடங்குகிறது. இந்த தேர்தலில் மொத்தம் 4,023 வேட்பாளர்கள் களத்தில் நிற்கின்றனர். திமுக, அதிமுக, நாம் தமிழர், தவெக என 4 முனை போட்டி நிலவுகிறது. தேர்தல் பிரசாரம் நேற்று மாலை 6 மணியுடன் ஓய்ந்த நிலையில், வாக்குப்பதிவுக்கான இறுதிக்கட்ட பணிகள் தீவிரமடைந்துள்ளன.

தமிழகத்தின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 5கோடியே 73 லட்சத்து 43ஆயிரத்து 291 ஆகும். இவர்கள் வாக்களிக்க ஏதுவாக மாநிலம் முழுவதும் சுமார் 75,000க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. 326 தேர்தல் பார்வையாளர்களை தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ளது. அத்தோடு 300 கம்பெனி துணை ராணுவத்தினரும், 1.20லட்சம் தமிழக போலீசாரும் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் பணிகளுக்காக சுமார் 3.60லட்சம் அரசு உழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு எந்திரங்கள், விவிபாட் எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம் ஆகியவை இன்று அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் கொண்டு செல்லப்படவுள்ளது. தேர்தல் பணியாளர்களுக்கு இன்று இறுதிக்கட்ட பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சிக்கு பிறகு அவர்கள், அந்ததந்த வாக்குச்சாவடி மையங்களுக்கு இன்றே சென்று விடுவர்.

நாளை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறும். வாக்குப்பதிவு தொடங்க 1 மணி நேரத்திற்கு முன்பாகவே மாதிரி வாக்குப்பதிவு நடைபெறும். ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கு உள்ளேயும், வெளியேயும் சிசிடிவி வைக்கப்பட்டிருக்கும். அங்கு நடக்கும் வாக்குப்பதிவை நேரடியாக கண்காணிக்க 3 வகை கட்டுப்பாட்டு அறைகளை தேர்தல் கமிஷன் அமைத்துள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version