Close Menu
    What's Hot

    பின்னலாடை உற்பத்தியாளர்கள் அதிர்ச்சி: நூல் விலை கிலோவுக்கு ரூ.7 உயர்த்தி நூற்பாலைகள் அதிரடி அறிவிப்பு!

    மத்திய அரசு விழாவில் மேயர் பிரியா… பாஜக – திமுக கூட்டணி  நிஜமாகிறதா?  

    உடுமலை அருகே நள்ளிரவில் துணிகரம்: விவசாயி வீட்டில் கத்தி முனையில் ரூ.45 ஆயிரம் கொள்ளை!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»எங்களுக்கு இனி ஒப்பந்தம் தேவையில்லை; அமெரிக்காவுடனான அமைதி ஒப்பந்தத்திலிருந்து ஈரான் விலகல்!
    Featured

    எங்களுக்கு இனி ஒப்பந்தம் தேவையில்லை; அமெரிக்காவுடனான அமைதி ஒப்பந்தத்திலிருந்து ஈரான் விலகல்!

    Editor web3By Editor web3July 15, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Iran Withdraws
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    போர் நிறுத்த அமைதி ஒப்பந்தத்தை அமெரிக்கா மீறியதாகக் குற்றம் சாட்டியுள்ள ஈரான், அந்த ஒப்பந்தத்திலிருந்து முழுமையாக விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

    கடந்த மாதம் கையெழுத்தான போர் நிறுத்த ஒப்பந்தத்தை அமெரிக்கா முற்றிலுமாகச் சிதைத்துவிட்டதாகவும், ஈரான் துறைமுகங்கள் மீது மீண்டும் கடல்வழித் தடையை விதித்துள்ளதே இதற்கு முக்கியக் காரணம் என்றும் ஈரான் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    போர்க்கால சூழலில் தேசியப் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, ஹார்முஸ் ஜலசந்தியின் முழு கட்டுப்பாட்டையும் ஈரான் தனது வசம் கொண்டுவருவதாக ஈரான் வெளியுறவுத்துறை துணை அமைச்சர் காசெம் கரிபாபாடி அறிவித்துள்ளார். பொதுவாக ஓமன் மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளின் கட்டுப்பாட்டில் இந்த ஜலசந்தி இருக்கும் நிலையில், இனி ஓமனின் பகுதி உட்பட ஒட்டுமொத்த ஜலசந்தியையும் ஈரான் தனது இறையாண்மையின் கீழ் கொண்டு வரும் என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும், அமெரிக்காவுடன் இனி எந்தவித பேச்சுவார்த்தைக்கும் இடமில்லை என்பதையும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

    இதனிடையே, ஈரான் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் குடிநீர் சுத்திகரிப்பு ஆலைகளைத் தாக்கும் மிரட்டலை விடுத்துள்ளார். குறிப்பாக, ஈரானின் எண்ணெய் வளத்தின் மையமான ‘கர்க் தீவை’ (Kharg Island) அமெரிக்கா தனது கட்டுப்பாட்டில் எடுக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளது போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

    அமெரிக்காவின் தடையைத் தொடர்ந்து, ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் ஈரான் மற்றும் அமெரிக்க படைகளுக்கு இடையே மீண்டும் துப்பாக்கிச் சூடு மற்றும் ஏவுகணைத் தாக்குதல்கள் தொடங்கியுள்ளன. ஈரானால் ஏவப்பட்ட ஏவுகணைகள் பஹ்ரைன் மற்றும் குவைத் நாடுகளைக் குறிவைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. அரேபிய கடலில் ஏற்கனவே 19 அமெரிக்கப் போர்க்கப்பல்கள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், மத்திய கிழக்கு பிராந்தியம் முழுமையான போரை நோக்கி நகருமோ என்ற அச்சம் உலக நாடுகளிடையே எழுந்துள்ளது.

    இந்த ஜலசந்தி வழியாகத்தான் உலகின் ஐந்தில் ஒரு பங்கு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கொண்டு செல்லப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது மீண்டும் தொடங்கியுள்ள இந்த மோதல், உலகளாவிய கச்சா எண்ணெய் விலை மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது.

    Hormuz Control Iran Withdraws Middle East oil and natural gas US Deal Over
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமேகேதாது விவகாரம்: ஓசூருடன் நிறுத்தப்பட்ட தமிழக பேருந்துகள்
    Next Article முதல்ல கரப்பான் பூச்சி.. இப்போ ‘பிராய்லர் கோழி’..!! வங்கதேசத்தில் உருவான புதிய கட்சி..!!
    Editor web3
    • Website

    Related Posts

    பின்னலாடை உற்பத்தியாளர்கள் அதிர்ச்சி: நூல் விலை கிலோவுக்கு ரூ.7 உயர்த்தி நூற்பாலைகள் அதிரடி அறிவிப்பு!

    July 16, 2026

    மத்திய அரசு விழாவில் மேயர் பிரியா… பாஜக – திமுக கூட்டணி  நிஜமாகிறதா?  

    July 16, 2026

    உடுமலை அருகே நள்ளிரவில் துணிகரம்: விவசாயி வீட்டில் கத்தி முனையில் ரூ.45 ஆயிரம் கொள்ளை!

    July 16, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பின்னலாடை உற்பத்தியாளர்கள் அதிர்ச்சி: நூல் விலை கிலோவுக்கு ரூ.7 உயர்த்தி நூற்பாலைகள் அதிரடி அறிவிப்பு!

    மத்திய அரசு விழாவில் மேயர் பிரியா… பாஜக – திமுக கூட்டணி  நிஜமாகிறதா?  

    உடுமலை அருகே நள்ளிரவில் துணிகரம்: விவசாயி வீட்டில் கத்தி முனையில் ரூ.45 ஆயிரம் கொள்ளை!

    அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டுங்கள்!. பிரதமர் மோடிக்கு மல்லிகார்ஜுன கார்கே கடிதம்!

    அமெரிக்க அரசியலில் புதிய பரபரப்பு… ஜே.டி. வான்ஸுக்கு ஈரானின் ரகசிய அறிக்கை..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.