அமைதிப் பேச்சுவார்த்தையில் ஒப்பந்தம் ஏற்படவில்லையென்றால் ஈரானை கடுமையாக தாக்குவோம்  என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான விவகாரத்தில் ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா  இணைந்து பிப்ரவரி 28ம் தேதி தாக்குதலைத் தொடங்கியது. இதற்கு பதிலடியாக இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் அமைக்கப்பட்டுள்ள அமெரிக்க படைத் தளங்கள் மீது ஈரான் கடுமையான தாக்குதலை நடத்தியது. அமெரிக்க தாக்குதலில் ஈரான் உச்சத் தலைவர் அயத்துல்லா அலி கமேனி மற்றும் முக்கியத் தலைவர்கள் உயிரிழந்தனர். இதனிடையே சர்வதேச எண்ணெய் போக்குவரத்துக்கு முக்கிய வழித்தடமான ஹார்முஸ் நீரிணையை ஈரான் மூடியதால், உலகளில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

இந்தநிலையில், மோதலை தடுக்க அமைதிப் பேச்சுவார்த்தை அழைப்பு விடுக்கப்பட்டதையடுத்து, தற்காலிக போர் நிறுத்தம் ஏற்படுத்தப்பட்டது. பாகிஸ்தானில் நடைபெற்ற அமைதிப் ஒப்பந்தப் பேச்சுவார்த்தையில் இருதரப்பும் நிபந்தனைகளை விதித்ததன் காரணமாக முன்னேற்றம் ஏற்படாமல் தாமதமானது. இருப்பினும், அமைதி ஒப்பந்தத்தில் ஈரான் விரைவில் கையெழுத்திடும் என அமெரிக்க கூறி வந்தது.

இதனிடையே லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலைத் கண்டித்து, ஈரான் மீண்டும் தாக்குதலைத் தொடங்கி உள்ளது. தற்காப்பு நடவடிக்கை எனக்கூறி ஈரான் மீது அமெரிக்காவும் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக அமெரிக்க படைத்தளங்கள் அமைந்துள்ள அரபு நாடுகள் மீது ஈரான் தாக்குதலை தொடங்கி உள்ளது. இதனிடையே ஈரானின் நடவடிக்கை கண்டனம் தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், அமைதி ஒப்பந்தத்திற்கு சம்மதிக்கவில்லையென்றால் ஈரான் மீது கடுமையாக தாக்குதலை தொடங்குவோம் என்று எச்சரித்துள்ளார்.  இதனால், மத்திய கிழக்கு மீண்டும் போர் பதற்றம் தொடங்கி உள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version