பொதுவாக, அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் நீண்ட காலமாகத் தங்களுக்கு நெருக்கமாக இருக்கும், தங்களின் உடல்நிலை, தனிப்பட்ட தேவைகள் மற்றும் அன்றாடப் பழக்கவழக்கங்களை நன்கு அறிந்த நபர்களைத் தங்களது தனிப்பட்ட பாதுகாவலராக தொடர்ந்து வைத்துக் கொள்வது வழக்கம். முதல்வர் விஜய் அவர்களுக்கும் அவரது நீண்டகாலப் பாதுகாவலரான ஆனந்த் போன்றோர் நிழலாகத் தொடர்வது இந்த அடிப்படையில்தான்.

இது மாநிலக் காவல் துறையின் மீது நம்பிக்கை இல்லாததால் அல்ல; மாறாக, லட்சக்கணக்கான தொண்டர்கள் மற்றும் பொதுமக்களின் அலைமோதும் கூட்டத்தைக் கையாள்வதில், தலைவரின் அசைவுகளையும் அவசரத் தேவைகளையும் சட்டென்று புரிந்துகொண்டு செயல்பட ஒரு தனிப்பட்ட ஒருங்கிணைப்பாளர் தேவைப்படுவதால் ஆகும்.

இந்தநிலையில், முதலமைச்சர் விஜய்யின் பாதுகாப்பு குறித்து அதிமுகவின் இன்பதுரை கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவரது எக்ஸ் பக்கத்தில், Core Cell உள்ளிட்ட பல அடுக்கு அதிகாரப்பூர்வ பாதுகாப்பு வளையங்கள் அரசால் வழங்கப்பட்டுள்ள நிலையில், முதல்வர் விஜய் தனது தனிப்பட்ட பாதுகாவலருடன் வலம் வருவது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மாநில காவல் துறையினர் வழங்கும் பாதுகாப்பு மீது முதல்வருக்கே முழு நம்பிக்கை இல்லையா? அரசுப் பாதுகாப்பு அமைப்புகளைச் சாராத ஒருவர், ‘பாதுகாவலர்’ என்ற பெயரில் அவரது நிழலாகத் தொடர்ந்து செயல்படுவது பாதுகாப்பு நெறிமுறைகளுக்கு (Security Protocols) ஏற்புடையதா? அதிகாரப்பூர்வ பாதுகாப்பு வளையத்திற்குள் (Access Control Zone) அவர் எந்த விதிமுறையின் அடிப்படையில் அனுமதிக்கப்படுகிறார்? பாதுகாப்பு மற்றும் தகவல் பாதுகாப்பு (Information Security) தொடர்பான இந்த முக்கியமான கேள்விகளுக்குத் தமிழக அரசு விளக்கம் அளிக்குமா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version