காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் கிறிஸ்டோபர் திலக் திருச்சி விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
இரண்டு நாட்களில் ஒரு தெளிவு ஏற்படும் என்ற நம்பிக்கையில் சென்னை செல்கிறேன். அங்கு கட்சி நிர்வாகிகளுடன் சந்தித்து சட்டமன்றத் தேர்தல் வெற்றி குறித்தும், தமிழக வெற்றிக் கழகம் என்ன செய்ய போகிறது என்பதை உற்றுநோக்கக்கூடிய காலம் உள்ளது,
அடுத்த 10நாட்களுக்குள் புதிய அரசு பொறுப்பேற்கக்கூடிய நம்பிக்கையில் உள்ளோம்.
தமிழக வெற்றி கழகத்திற்கு 35% வாக்குகளும் திமுகவிற்கு 30% வாக்குகளும் பதிவாகியுள்ளது, இந்த 65% வாக்குகள் பாஜகவுக்கு தமிழகத்தில் காலூன்றக்கூடாது என்னும் நோக்கில் வாக்களிக்கப்பட்டது என்பதனை காட்டுகிறது
மதச்சார்பின்மையை மையப்படுத்தி இந்த ஆட்சி அமைக்கப்பட்டது. இது உடையக்கூடாது என்ற நோக்கில்தான் காங்கிரஸ் கட்சியும் முடிவு எடுத்துள்ளது
காங்கிரஸுக்கு 5 எம்எல்ஏக்கள் இருந்தாலும், தமிழகத்தின் நிலை மற்றும் மதச்சார்பின்மையை மையப்படுத்தி இந்த முடிவு எடுக்கவேண்டும் என்ற நிலையில்தான் இந்தமுடிவு எடுக்கப்பட்டுள்ளது, மதச்சார்பின்மையை முன்னிறுத்தியே இந்த முடிவெடுக்கப்பட்டுள்ளது
கூட்டணி வாக்குகள் மூலமாகத்தான் ஏற்கனவே திமுக 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெற்றிபெற்றார்கள். எனவே அதனை அவர்கள் ராஜினாமா செய்வார்களா? அதுபோல உதயநிதி ஸ்டாலினும் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி ஆதரவுடன்தான் வெற்றிபெற்றார் என்பதால் அவர் தனது பதவியை ராஜினாமாசெய்வாரா?
பாஜக-வின் அடுத்தகட்ட நகர்வை முடக்கும் விதமாகத்தான் காங்கிரஸ் இந்த மூவை எடுத்துள்ளது.
