Close Menu
    What's Hot

    தொழிலாளர்களின் உரிமைகளை பறிக்கும் சட்டத்துக்கு எதிராக நாடு தழுவிய அளவில் போராட்டம் – எஸ்டிடியூ அறிவிப்பு

    போதை ஆசாமிகளால் அச்சம் – டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி வர்த்தகர்கள் முற்றுகை

    சென்னை உயர் நீதிமன்றத்திற்கு 19 புதிய நீதிபதிகள்: கொலிஜியம் ஒப்புதல்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»இந்தியா»மிகப்பெரிய பொருளாதார புயல் வீசும்; சாமானியர்களுக்கே பாதிப்பு!. ராகுல் காந்தி எச்சரிக்கை!
    இந்தியா

    மிகப்பெரிய பொருளாதார புயல் வீசும்; சாமானியர்களுக்கே பாதிப்பு!. ராகுல் காந்தி எச்சரிக்கை!

    Editor web3By Editor web3May 19, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    rahul gandhi warning
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    இந்தியாவில் மிக விரைவில் ஒரு பெரிய “பொருளாதாரப் புயல்” வீசப்போகிறது என்றும், இதனால் சாமானிய மக்களும் சிறு வணிகர்களுமே கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள் என்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எச்சரித்துள்ளார். மேலும், இந்த நெருக்கடியால் பிரதமர் நரேந்திர மோடி, தொழிலதிபர்கள் அம்பானி மற்றும் அதானி ஆகியோர் எந்தப் பாதிப்பும் அடைய மாட்டார்கள் என்றும் அவர் சாடியுள்ளார்.

    தனது நாடாளுமன்றத் தொகுதியான ரேபரேலிக்கு வருகை தந்த ராகுல் காந்தி, அங்கு ஊடகவியலாளர்கள் மற்றும் பொதுமக்களிடையே உரையாற்றினார். அப்போது மத்திய அரசின் நிதி சார்ந்த கொள்கைகளைக் கடுமையாக விமர்சித்த அவர், நாட்டின் பொருளாதாரக் கட்டமைப்பு உழைக்கும் வர்க்கத்தினரை விடுத்து, ஒரு சில கோடீஸ்வரர்களுக்கு சாதகமாகவே திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ளது என்று குற்றம் சாட்டினார்.

    ஒரு மிகப்பெரிய பொருளாதாரப் புயல் நம்மை நெருங்கி வருகிறது. கடந்த 12 ஆண்டுகளில் மோடிஜி உருவாக்கிய கட்டமைப்பு அதானி மற்றும் அம்பானிக்காக மட்டுமே வடிவமைக்கப்பட்டது. தற்போது அந்த கட்டமைப்பே சரிவின் விளிம்பில் உள்ளது. இதன் தாக்கம் அவர்களைப் பாதிக்காது, தப்பித்துக் கொள்ள அவர்களிடம் வழிகள் உள்ளன.

    ஆனால், இதன் உண்மையான பாதிப்பு இளைஞர்கள், ஏழைகள், நடுத்தர மக்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் சிறு வணிகர்கள் மீதே விழப்போகிறது. இவர்கள் யாரும் அந்தப் பொருளாதாரக் கட்டமைப்பின் பலனைப் பெற்றவர்கள் அல்ல. உங்களைச் சுற்றிப் பாருங்கள், நீங்கள் அந்தப் பலனைப் பெற்ற கட்டமைப்பில் இருக்கிறீர்களா அல்லது வரவிருக்கும் புயலால் பாதிக்கப்படப் போகிறீர்களா என்று உங்களிடமே கேட்டுக் கொள்ளுங்கள்.”

    மேலும் அவர் கூறுகையில் “மோடிஜியால் மாற்றியமைக்கப்பட்ட பொருளாதாரக் கட்டமைப்பு ஒரு பெரிய நெருக்கடியை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என்று நான் பல நாட்களாக எச்சரித்து வருகிறேன். அம்பானிக்கு ஆதரவாக உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு நீடிக்காது, அது முற்றிலும் சரிவது உறுதி. இதில் துரதிர்ஷ்டவசமான விஷயம் என்னவென்றால், சாமானிய மக்களே இதன் சுமையைத் தாங்க வேண்டியிருக்கும். அவர்கள் (தொழிலதிபர்கள்) தங்களது அரண்மனைகளில் சுகமாக வாழ்வார்கள், ஆனால் உத்தரப் பிரதேசத்து இளைஞர்களும் மக்களும்தான் இந்த அதிர்ச்சியை முழுமையாக எதிர்கொள்ளப் போகிறார்கள்.

    வரவிருக்கும் பொருளாதார நெருக்கடி அதானி, அம்பானி அல்லது மோடியைப் பாதிக்காது. அது உத்தரப் பிரதேசத்தின் இளைஞர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் சிறு வணிகர்களைப் பாதிக்கும். கடந்த பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஒரு மிகக் கடினமான காலம் வரவிருக்கிறது. இதற்கு உறுதியான நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, நரேந்திர மோடி மக்களை வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டாம் எனக் கூறிவிட்டு, அவரோ உலகம் முழுவதும் சுற்றி வருகிறார்” என்று ராகுல் காந்தி சாடினார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஇனி லேட்டா வரக் கூடாது!. தலைமைச் செயலக ஊழியர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு!. 
    Next Article சென்னை உயர் நீதிமன்றத்திற்கு 19 புதிய நீதிபதிகள்: கொலிஜியம் ஒப்புதல்!
    Editor web3
    • Website

    Related Posts

    தோல்விகளை மக்கள் மீது சுமத்துவதே மோடி அரசின் வேலை!. கார்கே கடும் கண்டனம்!.

    May 19, 2026

    பொது இடங்களில் பிடிபடும் தெருநாய்களை மீண்டும் அங்கேயே விடக்கூடாது!. உச்சநீதிமன்றம் அதிரடி

    May 19, 2026

    ஆதார் அட்டை புதுப்பிப்பு: கால அவகாசம் நீட்டிப்பு

    May 19, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தொழிலாளர்களின் உரிமைகளை பறிக்கும் சட்டத்துக்கு எதிராக நாடு தழுவிய அளவில் போராட்டம் – எஸ்டிடியூ அறிவிப்பு

    போதை ஆசாமிகளால் அச்சம் – டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி வர்த்தகர்கள் முற்றுகை

    சென்னை உயர் நீதிமன்றத்திற்கு 19 புதிய நீதிபதிகள்: கொலிஜியம் ஒப்புதல்!

    மிகப்பெரிய பொருளாதார புயல் வீசும்; சாமானியர்களுக்கே பாதிப்பு!. ராகுல் காந்தி எச்சரிக்கை!

    இனி லேட்டா வரக் கூடாது!. தலைமைச் செயலக ஊழியர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு!. 

    Trending Posts

    “வெற்றி, தோல்வி சகஜம்… ஒன்றிணைந்து நில்லுங்கள்!. அதிமுக நிர்வாகிகளுக்கு இபிஎஸ் அட்வைஸ்!

    May 19, 2026

    இசைஞானி இளையராஜா 1540 – கைகோர்க்கும் கார்த்திக் சுப்புராஜ்

    May 19, 2026

    எடப்பாடி உருக்கம்… அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது என்ன?

    May 19, 2026

    சென்னையில் பரபரப்பு!. 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி ரெய்டு!. 

    May 19, 2026

    பொது இடங்களில் பிடிபடும் தெருநாய்களை மீண்டும் அங்கேயே விடக்கூடாது!. உச்சநீதிமன்றம் அதிரடி

    May 19, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.