பீகார் மாவட்டம் சிவான் மாவட்டத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சி திட்டப்பணிகளின் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி பங்கேற்று, வளர்ச்சி திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார். தொடர்ந்து மக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், துணை முதலமைச்சர்கள் சாம்ராட் சவுகான், விஜயகுமார் சின்ஹா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி, நான் வெளிநாட்டு பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று நாடு திரும்பினேன். எனது வெளிநாட்டு பயணத்தின்போது இந்தியாவின் வளர்ச்சி குறித்து பல்வேறு நாடுகளின் தலைவர்கள் ஆச்சரியமடைந்தனர். உலகின் 3வது மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறும் என நினைக்கின்றனர். நாடு மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சிபெற பீகாரின் பங்கு முக்கியம். பீகாரில் காட்டாச்சியை கொண்டுவந்தவர்கள் மீண்டும் அந்த வாய்ப்பை எதிர்பார்க்கின்றனர். உங்கள் பிள்ளைகளின் சிறந்த எதிர்காலம் குறி த்து நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். பீகாரின் வளர்ச்சி பயணத்தை தடுக்க சிலர் தயாராக உள்ளதாக சாடினார்.

பீகாரை காங்கிரஸ் அரசு நீண்டகாலம் ஏழ்மையில் வைத்திருந்தது. தலித், பிற்படுத்தப்பட்டோர் இதில் மிகவும் பாதிக்கப்பட்டனர். வறுமையை ஒழிப்பதாக கூறி மக்களை ஏமாற்றி சில குடும்பத்த்னர் கோடீஸ்வரர்களாக மாறினர். காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளத்தின் நடவடிக்கைகள் பீகாருக்கு எதிரானது, பீகாரில் முதலீடுகளுக்கும் எதிரானது என சாடினார்.

Share.
Leave A Reply

Exit mobile version