Close Menu
    What's Hot

    ”தவெக: மாற்றத்திற்கான தீர்ப்பும் கம்யூனிஸ்ட்டுகளின் துணிச்சலான முடிவும்”

    காற்றில் கரைந்த மருத்துவர் கனவு..!! நீட் தேர்வு தோல்வி பயம்… மாணவி தூக்கிட்டு தற்கொலை..!!

    ”அந்த வேகத்தை மேகதாதுவில் காட்டலாமே…?” – விஜய்க்கு வானதி கேள்வி

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»இந்தியா»சமூகவலைதளம் மூலம் வலை விரித்த காதல் மன்னன்… 30 பெண்களிடம் கைவரிசை… சிக்கிய வடமாநில தொழிலாளி…
    இந்தியா

    சமூகவலைதளம் மூலம் வலை விரித்த காதல் மன்னன்… 30 பெண்களிடம் கைவரிசை… சிக்கிய வடமாநில தொழிலாளி…

    Editor TN TalksBy Editor TN TalksJuly 2, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    9 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சமூகவலைதளம் மூலம் சுமார் 30 பெண்களை தனது காதல் வலையில் விழ வைத்து உல்லாசம் அணுபவித்த வடமாநில தொழிலாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    புதுச்சேரியில் 15 வயது சிறுமியின் ஆபாச புகைப்படம் ஒன்று, அச்சிறுமியின் தாயார் வேலை செய்யும் நிறுவனத்தில் உள்ள ஊழியர்களுக்கு சமூக வலைதளம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அச்சிறுமியின் தாயார் இது தொடர்பாக சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார், சிறுமியின் புகைப்படத்தை பதிவிட்ட மேற்கு வங்காளத்தை சேர்ந்த பிரகாஷ் நாயக் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    இவர் புதுச்சேரியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்ததும், புதுச்சேரியில் இருந்து ஒஇசா தப்பிச் சென்று தப்பியதும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் கீர்த்தி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, அந்த தனிப்படை போலீசார் ஒடிசா சென்றனர். அங்கு பாலாசூர் பகுதியில் மறைந்திருந்த பிரகாஷ் நாயக்கை கைது செய்து, அவரது செல்போனை ஆய்வு செய்தனர்.

    அதில் பல பெண்களின் அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இருந்தன. இது குறித்து அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. பிரகாஷ் நாயக், புதுச்சேரியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். சமூக வலைதளங்களில் அதிக ஈடுபாடு கொண்டவர், பெண்களின் புகைப்படங்களுக்கு லைக் போடுவது, அவர்களை வர்ணித்து கமெண்ட்ஸ் போடுவதுமாக இருந்துள்ளார்.

    பிரகாஷ் நாயக்கின் இந்த மாய வலையில் சிக்கிய பல பெண்கள் அவருடன் தனிமையில் பேச ஆரம்பித்துள்ளனர். தனக்கு திருமணம் ஆகவில்லை எனக் கூறியும், சில பல ஆசை வார்த்தைகளை கூறியும், அப்பெண்கள் இடத்திற்கே சென்று தனிமையில் அவர்களுடன் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார் பிரகாஷ் நாயக். அதனை அப்பெண்களுக்கு தெரியாமல் செல்போனில் வீடியோ பதிவு செய்ததுடன், சமூகவலைதளத்தில் வெளியிட்டு விடுவதாகக் மிரட்டி, பணம் பறித்தது தெரியவந்துள்ளது.

    பிரகாஷ் நாயக்கின் இந்த காதல் வலையில், சுமார் 30-க்கும் மேற்பட்ட பெண்கள் ஏமாந்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் தன்னை தேடுவதை அறிந்த பிரகாஷ் நாயக், புதுச்சேரியில் இருந்து தப்பி சென்று ஒடிசாவில் உள்ள தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலைக்கு சேர்ந்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து பிரகாஷ் நாயக்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், பின்பு காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஸ்ரீபெரும்புதூர் தொகுதியை திமுகவுக்கு தாருங்கள்.. முதலமைச்சரிடம் திமுக நிர்வாகிகள் கோரிக்கை..
    Next Article திமுக ஆட்சியில் லாக்கப் டெத் பட்டியல்.. பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி..
    Editor TN Talks

    Related Posts

    அரசியல் மாற்றங்களுக்கு மத்தியில் நீடிக்கும் அன்பு..!! மு.க ஸ்டாலினுக்கு ராகுல் நன்றி..!!

    June 19, 2026

    மீண்டும் சிக்கலில் நடிகர் அல்லு அர்ஜுன்..!! ‘புஷ்பா 2’ கூட்ட நெரிசல் மரண வழக்கில் நீதிமன்றம் சம்மன்..!!

    June 19, 2026

    ராகுல் காந்தி பிறந்தநாள்!. மணக்குள விநாயகர் கோயிலில் தங்க தேர் இழுத்து காங். கட்சியினர் கொண்டாட்டம்!

    June 19, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ”தவெக: மாற்றத்திற்கான தீர்ப்பும் கம்யூனிஸ்ட்டுகளின் துணிச்சலான முடிவும்”

    காற்றில் கரைந்த மருத்துவர் கனவு..!! நீட் தேர்வு தோல்வி பயம்… மாணவி தூக்கிட்டு தற்கொலை..!!

    ”அந்த வேகத்தை மேகதாதுவில் காட்டலாமே…?” – விஜய்க்கு வானதி கேள்வி

    சாதித்த மாணவர்களுக்காக நேரில் வரப்போகும் முதல்வர் விஜய்..!! விரைவில் தவெக கல்வி விருது விழா..!!

    “மேகதாது தீர்மானத்திற்கெல்லாம் கர்நாடகா பணியாது” – துரைமுருகன் சொல்லும் மாற்று யோசனைகள்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.