Close Menu
    What's Hot

    ”வாக்குறுதி கொடுக்கும்போது ரிசர்வ் வங்கி விதி தெரியாதா?” – விஜய்க்கு திமுக காட்டமான கேள்வி

    நீட் மறுதேர்வை ஆன்லைனில் நடத்த உச்சநீதிமன்றம் மறுப்பு

    “புது உருட்டு, சுயநல தற்பெருமை பேச்சு!” – முதல்வர் விஜய் மீது அதிமுக சரமாரி தாக்குதல்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»இந்தியா»பண மோசடி வழக்கு: ராபர்ட் வத்ரா மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது ED!
    இந்தியா

    பண மோசடி வழக்கு: ராபர்ட் வத்ரா மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது ED!

    Editor TN TalksBy Editor TN TalksNovember 20, 2025Updated:November 20, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Robert Vadra
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    பண மோசடி வழக்கு தொடர்பாக காங்கிரஸ் எம்.பி பிரியங்காவின் கணவர் ராபர்ட் வத்ரா மீது அமலாக்கத்துறை அதிகாரிகள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

    பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வத்ரா நடத்தி வரும் ஸ்கைலைட் ஹாஸ்பிடாலிட்டி பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம், கடந்த 2008ம் ஆண்டு ஹரியானாவின் குருகிராம் பகுதியில் ரூ.7.5 கோடியில் 3.5 ஏக்கர் விவசாய நிலத்தை வாங்கியது.

    இந்த நிலத்தில் அடுக்குமாடி குடியிருப்புகளை கட்ட அப்போதைய காங்கிரஸ் முதலமைச்சர் பூபேந்திர சிங் ஹூடா அனுமதி வழங்கினார். இதனால் சம்பந்தப்பட்ட நிலத்தின் மதிப்பு பலமடங்கு உயர்ந்தது. இந்தநிலையில், ராபர்ட் வதேராவின் நிறுவனம், டிஎல்எப் நிறுவனத்துக்கு ரூ.58 கோடிக்கு நிலத்தை விற்றது. கட்டுமான உரிமத்தையும் அந்நிறுவனத்துக்கே வழங்கியது.

    இந்தநிலையில், நில விற்பனையில் பண மோசடி மற்றும் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக குற்றம்சாட்டப்பட்டு, அதனடிப்படையில் அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டுள்ளது. இதுதொடர்பாக கடந்த ஏப்ரல் மாதம் ராபர்ட் வத்ரா அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

    கடந்த 2009ம் ஆண்டு ஆயுதத் தரகர் சஞ்சய் பண்டாரி, ராபர்ட் வத்ராவின் அறிவுறுத்தலின் பேரில், அவர் வழங்கிய நிதியில் லண்டனில் ஒரு சொகுசு பங்களாவை புனரமைத்தார் என அமலாக்கத்துறை குற்றம்சாட்டியது. இந்தக் குற்றச்சாட்டை ராபர்ட் வத்ரா மறுத்திருந்தார். கடந்த 2023ல் சஞ்சய் பந்தாரி மீது அமலாக்கத்துறை அதிகாரிகள், நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

    கடந்த ஜூலை மாதம் இந்த வழக்கு தொடர்பாக ராபர்ட் வத்ராவிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் வாக்குமூலம் பதிவு செய்திருந்தனர். இந்நிலையில், பண மோசடி தொடர்பாக ராபர்ட் வத்ரா மீது டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இந்த குற்றப்பத்திரிகை மீது டிசம்பர் 9ம் தேதி பரிசீலனை செய்யப்படுகிறது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleநேபாளத்தில் மீண்டும் வெடித்த வன்முறை; ஊரடங்கு உத்தரவு அமல்!
    Next Article நாட்டையே திரும்பி பார்க்க வைத்த தீர்ப்பு! மசோதாக்கள் விவகாரத்தில் ஜனாதிபதிக்கு பதிலளித்த உச்சநீதிமன்றம்
    Editor TN Talks

    Related Posts

    நீட் மறுதேர்வை ஆன்லைனில் நடத்த உச்சநீதிமன்றம் மறுப்பு

    June 1, 2026

    மே மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.94 லட்சம் கோடி… பொருளாதார வளர்ச்சியின் அறிகுறியா?

    June 1, 2026

    35 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு!. மே.வங்க அமைச்சரவையின் பலம் 41 ஆக உயர்வு!

    June 1, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ”வாக்குறுதி கொடுக்கும்போது ரிசர்வ் வங்கி விதி தெரியாதா?” – விஜய்க்கு திமுக காட்டமான கேள்வி

    நீட் மறுதேர்வை ஆன்லைனில் நடத்த உச்சநீதிமன்றம் மறுப்பு

    “புது உருட்டு, சுயநல தற்பெருமை பேச்சு!” – முதல்வர் விஜய் மீது அதிமுக சரமாரி தாக்குதல்

    திருச்சியில் விஜய்க்கு சால்வை… திமுக கூட்டணியை கை கழுவுகிறதா மதிமுக?

    திமுகவும், அதிமுகவும் தனக்கு எதிராக சதி செய்தது – முதலமைச்சர் ஜோசப் விஜய் பகிரங்க குற்றச்சாட்டு

    Trending Posts

    ”வாக்குறுதி கொடுக்கும்போது ரிசர்வ் வங்கி விதி தெரியாதா?” – விஜய்க்கு திமுக காட்டமான கேள்வி

    June 1, 2026

    நீட் மறுதேர்வை ஆன்லைனில் நடத்த உச்சநீதிமன்றம் மறுப்பு

    June 1, 2026

    “புது உருட்டு, சுயநல தற்பெருமை பேச்சு!” – முதல்வர் விஜய் மீது அதிமுக சரமாரி தாக்குதல்

    June 1, 2026

    திருச்சியில் விஜய்க்கு சால்வை… திமுக கூட்டணியை கை கழுவுகிறதா மதிமுக?

    June 1, 2026

    திமுகவும், அதிமுகவும் தனக்கு எதிராக சதி செய்தது – முதலமைச்சர் ஜோசப் விஜய் பகிரங்க குற்றச்சாட்டு

    June 1, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.