பிரதமர் நரேந்திர மோடி, மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடுவின் குடும்பத்தினரைத் தனது அதிகாரப்பூர்வ இல்லமான ‘சேவா தீர்த்’தில்  சந்தித்துப் பேசினார்.

மிகவும் பரபரப்பான அரசியல் மற்றும் ஆட்சிப் பணிகளுக்கு மத்தியிலும், பிரதமர் நரேந்திர மோடி குழந்தைகளுடன் குழந்தையாக மாறி கொஞ்சி விளையாடிய எளிமையான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி பலரின் மனங்களையும் கவர்ந்து வருகின்றன. அப்போது, அந்த மழலைகளுடன் விளையாடி மகிழ்ந்த பிரதமர், அந்த குழந்தைகளின் புத்தகத்தில் தனது கையெழுத்திட்டு, அன்போடு ஆசி வழங்கியுள்ளார்.

இந்தச் சந்திப்பு குறித்துத் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, “நேற்று இரண்டு இளம் நண்பர்கள் சேவா தீர்த்திற்கு வந்திருந்தனர்” எனக் குறிப்பிட்டு, குழந்தைகளுடன் சிரித்துப் பேசி விளையாடிய புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.

அமைச்சர் ராம் மோகன் நாயுடுவுடன் அவரது தாய், மனைவி மற்றும் குழந்தைகள் என மூன்று தலைமுறையினரும் பிரதமரைச் சந்தித்து ஆசி பெற்றனர். இந்த நெகிழ்ச்சியான தருணத்தின் போது, அமைச்சரின் தாய் ‘ஒரு மரம் தாயின் பெயரில்’ (Ek Ped Maa Ke Naam) என்ற உன்னத திட்டத்தால் ஈர்க்கப்பட்டு, பிரதமர் மோடிக்கு மரக்கன்று ஒன்றை அன்பளிப்பாக வழங்கினார்.

நாட்டின் மிக முக்கியப் பொறுப்பில் இருக்கும் பிரதமர் மோடி, தனது பிஸியான கால அட்டவணைக்கு இடையிலும் குழந்தைகளிடம் காட்டிய இந்த அன்பான மற்றும் எளிமையான அணுகுமுறை சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்களால் வெகுவாகப் பாராட்டப்பட்டு வருகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version