ஜப்பானின் வடக்கு பகுதியில் இன்று 6.7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியதை அடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்தநிலநடுக்கம் ஹொன்ஷுவில் உள்ள இவாட் மாகாணத்தில் உள்ள குஜி நகரத்திலிருந்து 130 கிலோமீட்டர் அல்லது 81 மைல் தொலைவில் மையம் கொண்டிருந்ததாகவும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது. எச்சரிக்கை விடுக்கப்பட்ட வடக்கு பசிபிக் கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் 3 அடி வரை அலைகள் எழக்கூடும் என்று ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே, அந்தப் பகுதியில் உள்ளவர்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுகுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

திங்கட்கிழமை இரவு ஏற்பட்ட பெரிய நிலநடுக்கத்தை விட இந்த நிலநடுக்கம் பலவீனமாக இருந்ததாக தெரிவித்த ஜப்பானின் NHK, இந்த நிலநடுக்கத்தால் அலமாரிகளில் இருந்து பொருட்கள் விழுந்து, சாலைகள் சேதமடைந்து, ஜன்னல்கள் உடைந்து, 70 சென்டிமீட்டர் உயரத்திற்கு சுனாமி அலைகள் எழுந்ததாகவும் குறிப்பிட்டுள்ளது.

குறிப்பிடத்தக்க வகையில், பசிபிக் “நெருப்பு வளையத்தின்” மேற்குப் பகுதியில் நான்கு பெரிய டெக்டோனிக் தகடுகளின் மேல் ஜப்பான் அமைந்துள்ளது மற்றும் உலகின் மிகவும் பூகம்பத்தால் பாதிக்கப்படக்கூடிய நாடுகளில் ஒன்றாகும். சுமார் 125 மில்லியன் மக்கள்தொகை கொண்ட அந்நாட்டில், ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1,500 நிலநடுக்கங்கள் பதிவாகின்றன.

இவற்றில் பெரும்பாலானவை லேசானவை, இருப்பினும் அவை எங்கு நிகழ்கின்றன, பூமியின் மேற்பரப்பிற்கு அடியில் எவ்வளவு ஆழத்தில் உள்ளன என்பதைப் பொறுத்து தாக்கம் மாறுபடும். முன்னதாக, இதே பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன் தான் 7.5 ரிக்டர் அளவில் நில நடுக்கம் ஏற்பட்டது. இதில்,50 பேர் காயமடைந்ததாகவும் ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனம் (JMA) தெரிவித்துள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version