கர்ப்ப காலத்தில் பாராசிட்டமால் எடுத்துக்கொள்வதால் கருவில் உள்ள குழந்தைக்கு ஆட்டிசம் ஏற்படும் அபாயம் என்று டிரம்ப் தெரிவித்திருந்த நிலையில், பாராசிட்டமாலுக்கும் ஆட்டிசத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
சமீபத்தில், கடந்த 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பாராசிட்டமால் (அசெட்டமினோஃபென்) என்ற வலி நிவாரணிக்கும் ஆட்டிசத்திற்கும் இடையே தொடர்பு இருப்பதாகக் கூறியது, மருத்துவ உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்தநிலையில், தி லான்செட்’ (The Lancet) மருத்துவ இதழில் வெளியிடப்பட்டுள்ள இந்த ஆய்வில், லட்சக்கணக்கான பெண்களை உள்ளடக்கிய 43 மிக முக்கியமான ஆய்வுகள் செய்யப்பட்டன.
பாராசிட்டமால் எடுப்பதற்கும் குழந்தைகளுக்கு ஏற்படும் நரம்பியல் வளர்ச்சிப் பிரச்சினைகளுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என லண்டன் செயின்ட் ஜோர்ஜ் பல்கலைக்கழக பேராசிரியர் அஸ்மா கலீல் தலைமையிலான குழு உறுதிப்படுத்தியுள்ளது.
கர்ப்ப காலத்தில் காய்ச்சல் அல்லது கடுமையான வலி ஏற்படும் போது பாராசிட்டமால் எடுக்காமல் இருப்பது, கருச்சிதைவு அல்லது குறைப்பிரசவம் போன்ற ஆபத்துகளை அதிகரிக்கக்கூடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
