ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர் என்ற சிம்மாசனத்தில் நீண்ட காலமாக இருந்து வந்த முகேஷ் அம்பானியைப் பின்னுக்குத் தள்ளி, கௌதம் அதானி மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளார். அதானி குழுமத்தின் கீழ் உள்ள பல்வேறு நிறுவனங்களின் பங்குகள் பங்குச்சந்தையில் அபாரமான வளர்ச்சியைச் சந்தித்ததே இந்த மாற்றத்திற்குக் காரணமாகச் சொல்லப்படுகிறது. இதன் மூலம் ஆசியாவின் பெரும் பணக்காரர் என்ற அந்தஸ்துடன், உலகப் பணக்காரர்கள் பட்டியலிலும் அதானி தனது நிலையை வலுப்படுத்திக் கொண்டுள்ளார்.
சமீபத்திய ப்ளூம்பெர்க் பில்லியனர் குறியீட்டின் புள்ளிவிவரங்களின்படி, கௌதம் அதானியின் சொத்து மதிப்பு சுமார் ரூ.8.58 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. குறிப்பாக, நடப்பு 2026-ம் ஆண்டில் மட்டும் அவர் சுமார் ரூ.75,000 கோடி வருவாய் ஈட்டியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. துறைமுகங்கள், மின்சாரம், பசுமை எரிசக்தி உள்ளிட்ட அதானி குழுமத்தின் முக்கியத் துறைகளில் மேற்கொள்ளப்பட்ட முதலீடுகள் மற்றும் அதன் பங்குகள் கொடுத்த லாபம், அவரை இந்த உச்சத்திற்கு அழைத்துச் சென்றுள்ளது.
மறுபுறம், ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு தற்போது ரூ.8.41 லட்சம் கோடியாக உள்ளது. அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், எரிசக்தி, தொலைத்தொடர்பு மற்றும் சில்லறை வர்த்தகத்தில் வலுவாக உள்ளது. அம்பானி மற்றும் அதானி ஆகிய இருவருக்கும் இடையே சொத்து மதிப்பில் நிலவும் இடைவெளி மிகவும் குறைவாகவே இருந்தாலும், தற்போதைய சூழலில் அதானியின் கை ஓங்கியுள்ளது. இந்தியாவின் இரு பெரும் தொழிலதிபர்களுக்கு இடையே நிலவும் இந்தப் போட்டி, சர்வதேசப் பொருளாதார அரங்கில் இந்தியத் தொழில்துறையின் வலிமையைப் பறைசாற்றுவதாக அமைந்துள்ளது.
அதானி குழும நிறுவனங்களின் பங்கு விலைகள் இன்று உயர்ந்தன. அதானி பவர் நிறுவனத்தின் பங்கு விலை கிட்டத்தட்ட 1 சதவீதம் உயர்ந்தது. அதானி டோட்டல் கேஸ் 2 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்தது. அதானி கிரீன் எனர்ஜி 0.44 சதவீதம் ஆதாயம் அடைந்தது, அதே நேரத்தில் அதானி போர்ட்ஸ் & ஸ்பெஷல் எகனாமிக் ஸோன் 1.6 சதவீதம் உயர்ந்தது. மேலும் பல அதானி நிறுவனங்களின் பங்குகளும் லாபத்தில் வர்த்தகமாயின.
இருப்பினும், செல்வப் புள்ளிவிவரங்கள் பங்கு விலைகள் மற்றும் வணிகச் செயல்திறனை அடிப்படையாகக் கொண்டிருப்பதால், இந்தத் தரவரிசை அடிக்கடி மாறுகிறது. எனவே, இந்த மாற்றம் உலகளாவிய சந்தைகளில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களைப் பிரதிபலிக்கிறது.
குறியீட்டின்படி, உலகின் 20 பெரும் பணக்காரர்களில் ஏழு பேர் 2026-ல் சரிவைச் சந்தித்துள்ளனர். எல்விஎம்ஹெச் (LVMH) நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான பெர்னார்ட் அர்னால்ட், 44 பில்லியன் டாலர்களை இழந்து, மிகக் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளார்.
உலகின் முதல் 20 பணக்காரர்கள் (உலகம்) – ஏப்ரல் 2026:
எலோன் மஸ்க் – 656 பில்லியன் டாலருடன் உலகின் முதல் பணக்காரராக நீடிக்கிறார்.
லாரி பேஜ் (286 பில்லியன் டாலர்), அமெரிக்கா
ஜெஃப் பெசோஸ் ($269 பில்லியன்), அமெரிக்கா
செர்ஜி பிரின் – ($266 பில்லியன்), அமெரிக்கா
மார்க் ஜுக்கர்பெர்க் – ($239 பில்லியன்), அமெரிக்கா
பெர்ரி எலிசன் – ($230 பில்லியன்), அமெரிக்கா
மைக்கேல் டெல் – ($170 பில்லியன்), அமெரிக்கா
ஜென்சன் ஹுவாங் – ($164 பில்லியன்), அமெரிக்கா
பெர்னார்ட் அர்னால்ட் – ($164 பில்லியன்) – பிரான்ஸ்
ஜிம் வால்டன் – ($150 பில்லியன்) , அமெரிக்கா
கௌதம் அதானி – ($92.6 பில்லியன்), இந்தியா
முகேஷ் அம்பானி – ($90.8 பில்லியன்), இந்தியா
குறியீட்டின்படி, உலகின் 20 பெரும் பணக்காரர்களில் ஏழு பேர் 2026-ல் சரிவைச் சந்தித்துள்ளனர். எல்விஎம்ஹெச் (LVMH) நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான பெர்னார்ட் அர்னால்ட், 44 பில்லியன் டாலர்களை இழந்து, மிகக் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளார்.
