Close Menu
    What's Hot

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»உலகம்»ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதிப்பு!
    உலகம்

    ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதிப்பு!

    Editor TN TalksBy Editor TN TalksNovember 17, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Sheik hasina
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    இடஒதுக்கீட்டு முறையை கண்டித்து போராடியவர்களுக்கு எதிராக குற்றம் புரிந்ததற்காக வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசினாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது உலக அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கடந்த ஆண்டு ஜூலை- ஆகஸ்ட் மாதங்களில் வங்கதேச அரசுக்கும், ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் கட்சிக்கு எதிராகவும் போராட்டம் வெடித்தது. இடஒதுக்கீட்டு முறைக்கு எதிரான இந்த போராட்டத்தை வங்கதேச அரசு தீவிரமாக ஒடுக்கியதால் போராட்டம் வன்முறையாக மாறியது.

    தலைநகர் டாக்கா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியதால் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 1,500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பதற்றம் அதிகரித்ததை உணர்ந்த வங்கதேசத்தின் அப்போதைய பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா பதவியை ராஜினாமா செய்துவிட்டு, நாட்டைவிட்டு வெளியேறி, இந்தியாவில் தஞ்சமடைந்தார்.

    இதையடுத்து, நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் முகமது யூனுஸ் தலைமையில் அமைந்த இடைக்கால அரசு, ஷேக் ஹசீனாவுக்கு எதிராக இனப் படுகொலை, ஊழல் உள்பட ஏராளமான வழக்குகளை பதிவு செய்தது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இடஒதுக்கீடு கொள்கைக்கு எதிராக போராடியவர்களை சுட்டுக் கொல்ல ஹசீனா உத்தரவிட்ட ஆடியோ வெளியானதை ஆதாரமாக வைத்து அவர் மீதும், முன்னாள் உள்துறை அமைச்சர், முன்னாள் போலீஸ் ஐ.ஜி. ஆகியோர் மீதும் மனித குலத்திற்கு எதிராக குற்றம் புரிந்ததாக அந்நாட்டு சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் புதிய வழக்கை பதிந்து விசாரணை நடத்தி வந்தது.

    இந்த வழக்கில் வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, முன்னாள் உள்துறை அமைச்சர் மற்றும் போலீஸ் ஐஜி உள்ளிட்டோர் குற்றவாளிகள் என இன்று (நவ. 17) தீர்ப்பு வழங்கப்பட்டது. மேலும் சேக் ஹசீனா மற்றும் உள்துறை அமைச்சர் அசாதுஸ்ஸாமான் கானுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது.  வழக்கில் தொடர்புடைய காவல்துறை ஐ.ஜி சவுத்ரி அப்துல்லா அல்-மாமுன் கடந்த ஜூலை மாதம் வழக்கு விசாரணையின் போது குற்றத்தை ஒப்புக் கொண்டதால், அவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

    ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளநிலையில், டாக்கா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் வங்கதேச ராணுவத்தினர் மற்றும் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    இந்த பரபரப்பான சூழலில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள “ஷேக் ஹசீனவை” ஒப்படைக்க கோரி இந்திய அரசுக்கு வங்கதேச அரசு கடிதம் அனுப்பியுள்ளது. மனித குலத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்ட முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் ஆகியோருக்கு எந்த ஒரு நாடும் அடைக்கலம் வழங்குவது கடுமையான விரோதச் செயல் என்று சுட்டிக்காட்டியுள்ளது.

    இதனிடையே, சர்வதேச குற்ற தீர்ப்பாயம் வழங்கிய மரண தண்டனையை ஏற்க ஷேக் ஹசீனா மறுத்துள்ளார். தனக்கு எதிராக அறிவிக்கப்பட்ட தீர்ப்பு மோசடியானது என கூறியுள்ள அவர், ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்படாத அரசால், ஒரு மோசடியான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டி உள்ளார். இந்த தீர்ப்பு பாரபட்சமானது மற்றும் அரசியல் ரீதியாக அழுத்தம் கொண்டது என ஹசீனா தெரிவித்துள்ளது வங்கதேச அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஈடன் கார்டனில் இந்தியா கற்றுக் கொண்டது என்ன?
    Next Article பெண்கள், மாணவிகளால் இந்த ஆட்சி முடிவுக்கு வரும் – ஜி.கே.வாசன் நம்பிக்கை
    Editor TN Talks

    Related Posts

    அமெரிக்கா தனது போக்கை மாற்றிக்கொள்ளும் வரை ஹார்மூஸ் திறக்கப்படாது!. புதிய நிபந்தனை விதித்த ஈரான்!

    August 9, 2026

    2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து!. 42 ராணுவ வீரர்கள் பலி!. நைஜர் நாட்டில் சோகம்!

    August 9, 2026

    தனியாக மலையேற்றத்திற்குச் சென்ற இந்திய வம்சாவளி மாணவர்!. அமெரிக்காவில் சடலமாக மீட்பு!

    August 9, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    தவெக அரசை கண்டித்து ஆகஸ்ட் 14-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்!. இபிஎஸ் அறிவிப்பு!

    மகாராஷ்டிராவில் அடுத்தடுத்து நிலநடுக்கம்!. வீடுகளில் விரிசல் ஏற்பட்டதால் வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.