Close Menu
    What's Hot

    ‘சிங்கத் தமிழர் vs குள்ள நரிகள்’! அதிமுகவில் மீண்டும் வெடித்த உட்கட்சி பூசல்?

    FIH மகளிர் நேஷன்ஸ் கப் போட்டி’ நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் –  வீராங்கனைகளுக்கு தலா ரூ.3 லட்சம் பரிசு

    நீட் தேர்வே தேவையில்லை; மாப்பிள்ளையும், மகனும்தான் அதிகார மையம் – அமைச்சர் நிர்மல்குமார் பளீச்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»உலகம்»வெனிசுலா அரசை பயங்கரவாத அமைப்பாக அறிவித்தார் டிரம்ப்!. பதற்றம் அதிகரிப்பு!.
    உலகம்

    வெனிசுலா அரசை பயங்கரவாத அமைப்பாக அறிவித்தார் டிரம்ப்!. பதற்றம் அதிகரிப்பு!.

    Editor web3By Editor web3December 17, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    trump 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    வெனிசுலா – அமெரிக்கா இடையே போர் பதற்றம் உச்சத்தில் இருந்து வரும் நிலையில் வெனிசுலா அரசை பயங்கரவாத அமைப்பு என்று டிரம்ப் அறிவித்துள்ளது பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.

    கரீபியன் கடல் வழியாக லத்தின் மற்றும் தென் அமெரிக்க நாடுகளிலிருந்து அமெரிக்காவுக்குள் அதிகளவில் போதைப்பொருட்கள் கடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இப்படி கடத்தப்பட்டு வரும் போதைப் பொருட்கள் அனைத்தும் அமெரிக்காவுக்குள் விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் குற்றச்சாட்டு இருந்து வருகிறது.
    இந்நிலையில், வெனிசுலா நாட்டில் இருந்து போதைப் பொருள் அதிகம் கடத்தப்படுவதாகவும் இதற்கு பின்னணியில் சீனா இருப்பதாக அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டி வருகிறார்.

    அதுமட்டுமின்றி, ஒருபக்கம் அமெரிக்காவுக்குள் போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். சர்வதேச கடல் எல்லையில் நீர்முழ்கி கப்பல்கள், போர் விமானங்கள் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில் தான், வெனிசுலா அரசை பயங்கரவாத அமைப்பு என்று டிரம்ப் அறிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவரது பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது, ”தென் அமெரிக்க வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் மிகப்பெரிய கடற்படையால் வெனிசுலா முழுவதுமாகச் சூழப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை இன்னும் தீவிரப்படுத்தப்படும். வெனிசுலாவுக்கு கொடுக்கப் போகும் அதிர்ச்சி, அவர்கள் இதற்கு முன் கண்டிராத ஒன்றாக இருக்கும். அமெரிக்காவிடம் இருந்து அவர்கள் திருடிய அனைத்து எண்ணெய், நிலம் மற்றும் பிற சொத்துக்களை திருப்பித் தரும் வரை இந்த நிலை தொடரும்.

    சட்டவிரோதமான மடூரோ ஆட்சி, திருடப்பட்ட இந்த எண்ணெய் வயல்களில் இருந்து கிடைக்கும் எண்ணெயைப் பயன்படுத்தி தங்களுக்குத் தாங்களே நிதியளித்துக்கொள்வதுடன், போதைப்பொருள் பயங்கரவாதம், மனிதக் கடத்தல், கொலை மற்றும் ஆள்கடத்தல் போன்ற செயல்களுக்கும் நிதியளிக்கிறது. இதன்காரணமாக வெனிசுலா ஆட்சி ஒரு வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, வெனிசுலாவுக்கு உள்ளேயும், வெளியேவும் செல்லும் தடைசெய்யப்பட்ட அனைத்து எண்ணெய் டேங்கர் கப்பல்களையும் முற்றுகையிட இன்று உத்தரவிட்டுள்ளேன்.

    பலவீனமான மற்றும் திறமையற்ற பைடன் நிர்வாகத்தின் போது மடூரோ ஆட்சி, அமெரிக்காவுக்கு அனுப்பிய சட்டவிரோத குடியேறிகளும் குற்றவாளிகளும் அதிவேகமாக வெனிசுலாவுக்குத் திருப்பி அனுப்பப்படுகிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகோல்ட்ரிப் இருமல் மருந்து விவகாரம்!. தமிழக அரசின் உத்தரவுக்கு இடைக்கால தடை!. உயர்நீதிமன்றம் உத்தரவு!
    Next Article ரூ.1000 கிடைக்கவில்லையா?. ஆன்லைனில் ‘குறைதீர்வு லிங்க்’!. தமிழக அரசு புதிய அறிவிப்பு!
    Editor web3
    • Website

    Related Posts

    ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் மூடியது ஈரான்!

    June 21, 2026

    ஈரான்: ஹிஜாப் அணியாமல் பாடிய பாடகிக்கு 74 சவுக்கடி தண்டனை..!! வலுக்கும் எதிர்ப்பு..!!

    June 20, 2026

    நான் மிகவும் போற்றும் உலகத் தலைவர்கள் இவர்கள்..!! யாரை சொல்கிறார் அதிபர் டிரம்ப்..??

    June 20, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ‘சிங்கத் தமிழர் vs குள்ள நரிகள்’! அதிமுகவில் மீண்டும் வெடித்த உட்கட்சி பூசல்?

    FIH மகளிர் நேஷன்ஸ் கப் போட்டி’ நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் –  வீராங்கனைகளுக்கு தலா ரூ.3 லட்சம் பரிசு

    நீட் தேர்வே தேவையில்லை; மாப்பிள்ளையும், மகனும்தான் அதிகார மையம் – அமைச்சர் நிர்மல்குமார் பளீச்

    அம்மோனியா கசிவு சம்பவம்: 3 நாளில் முழு அறிக்கை சமர்ப்பிக்க முதல்வர் உத்தரவு

    திருவள்ளூர் அருகே சோகம்: தொழிற்சாலையில் வாயுக் கசிவு… 2  பேர் பலி!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.