Close Menu
    What's Hot

    அடேங்கப்பா இவ்வளவா? – பாரதிராஜா பெற்ற விருதுகளின் பட்டியல்

    காற்றோடு கலந்தார் உங்கள் பாசத்துக்குரிய பாரதிராஜா

    முதலமைச்சர் விஜய்யின் முதல் மாதப் பயணம்! சாதித்தது என்ன?

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»LIFESTYLE»ஆரோக்கியம்»நாய்களால் கெட்ட சக்திகளை உணர முடியுமா?
    ஆரோக்கியம்

    நாய்களால் கெட்ட சக்திகளை உணர முடியுமா?

    Editor TN TalksBy Editor TN TalksDecember 26, 2025No Comments3 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    rottweiler Dog breed age charact
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    பலரும் “ஆவி” அல்லது “எதிர்மறை சக்தி” என்று கருதும் இதுபோன்ற விஷயங்கள், உண்மையில் நாய்களின் கூர்மையான புலன்களால் கண்டறியப்படும் சாதாரண சைகைகளாக இருக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

    மனிதர்களால் புரிந்துகொள்ள முடியாத அளவுக்கு நாய்கள், உலகத்தை ஆழமாக உணர்வதால், சில சமயம் அவற்றின் செயற்பாடுகள் மர்மமாகத் தோன்றுகின்றன. ஆனால், அதற்குப் பின்னால் இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்திகள் அல்ல, அறிவியலே உள்ளது.

    நாய் நன்றியுள்ளது என்பது நம் அனைவருக்குமே தெரிந்த உண்மைதான். பொதுவாகவே ஐந்து அறிவுள்ள எதிர் ஜீவன்கள் வரக்கூடிய ஆபத்துகளை சில நிமிடங்களுக்கு முன்பே தெரிந்துகொள்ளும் என்று நம்பப்படுகிறது. அதற்கான ஆதாரமாக பல்வேறு வீடியோக்களும் சமூக வலைதளங்களில் உள்ளன.

    இப்படி, நல்லதுக்கு பெயர் போன நாய்கள், கெட்ட சக்திகளையும் உணரக்கூடும் என்று பொதுவாக நம்பப்படுவதுண்டு. அதாவது, இரவு நேரத்தில் திடீரென பெரிய ஊளையிட்டுக் கொண்டு நாய் குரைப்பது, ஆளே இல்லாத இடத்தைப் பார்த்து குரைப்பது என பல எடுத்துக்காட்டுகள் சொல்லலாம்.

    அதேபோல், சாலையில் நாம் நடந்து செல்லும் போது அல்லது ஒரு தெருவை கடந்து செல்லும் போது, ஒரு நாய் திடீரென ஒருவரைப் பார்த்து குரைப்பதை கவனித்திருக்கலாம். இப்படிப்பட்ட தருணங்களில், “நாய்களுக்கு கெட்ட சக்திகள் தெரியும்”, “எதிர்மறை ஆற்றலை அவை உணர்கின்றன” போன்ற நம்பிக்கைகள் பலரிடமும் உள்ளன.

    குறிப்பாக மூத்தவர்கள், நாய்கள் இயற்கைக்கு அப்பாற்பட்ட விஷயங்களை உணரும் திறன் கொண்டவை என்று கூறுவார்கள். ஆனால், உண்மையில் இதற்கு பின்னால் மர்ம சக்திகள் ஏதேனும் உள்ளதா அல்லது இதற்கு ஏதேனும் அறிவியல் பூர்வமான விளக்கம் உள்ளதா என்ற கேள்வி நம்மில் பலரிலும் எழுகிறது.

    அறிவியல் பார்வையில், நாய்கள் மனிதர்களைப் போல உலகத்தை உணர்வதில்லை. அவற்றின் புலன்களான, கேட்கும் திறன், முகர்தல், பார்வை போன்றவை மனிதர்களை விட பல மடங்கு கூர்மையானவை. மனிதர்களால் கேட்க முடியாத அல்ட்ராசோனிக் ஒலிகளை நாய்கள் எளிதாகக் கேட்க முடியும். இரவில் அல்லது அமைதியான சூழலில், நமக்கு சாதாரணமாகத் தோன்றும் காற்று அசைவுகள், அதிர்வுகள் அல்லது தொலைவில் ஏற்படும் ஒலிகள் கூட நாய்களுக்கு சாத்தியமான அச்சுறுத்தல்களாகத் தோன்றலாம். இந்த அறிமுகமில்லாத சத்தம் மற்றும் அசைவுகளுக்கான இயல்பான எதிர்வினையாகவே அவை குரைக்கின்றன.

    பலரும் “ஆவி” அல்லது “எதிர்மறை சக்தி” என்று கருதும் இதுபோன்ற விஷயங்கள், உண்மையில் நாய்களின் கூர்மையான புலன்களால் கண்டறியப்படும் சாதாரண சைகைகளாக இருக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

    மனிதர்கள் கவனிக்கத் தவறும் சிறிய மாற்றங்களான, ஒலி, அசைவு அல்லது சூழல் மாற்றங்கள் போன்றவை நாய்களின் கவனத்தை உடனடியாக ஈர்க்கின்றன. இதன் விளைவாகவே, அவை எச்சரிக்கை உணர்வுடன் குரைக்கத் தொடங்குகின்றன.

    நாய்கள் ஒரு நபரின் நற்பண்பு அல்லது தீய நோக்கத்தை மதிப்பிடுவதில்லை. ஆனால், அவை மனிதர்களின் உடல் மொழியை வாசிப்பதில் மிகவும் திறமையானவை. ஒருவர் பதட்டமாக, பயத்துடன் அல்லது மன அழுத்தத்தில் இருக்கும் போது, அவர்களின் உடல் வியர்வையில் உள்ள சில இரசாயனங்கள் மாறுகின்றன. இந்த நுண்ணிய மாற்றங்களை நாய்கள் உடனடியாக முகர்ந்து அறிந்து கொள்கின்றன. இதன் காரணமாகவே, அந்த நபர் ஆபத்தானவரா என்கிற சந்தேகத்தில் அவை எச்சரிக்கையாக நடந்து கொள்வதற்காக குரைக்கலாம்.

    மேலும், மனிதர்களின் நடத்தையும், நாய்களின் எதிர்வினையில் முக்கிய பங்கு வகிக்கிறது. நீண்ட நேரம் கண்காணித்துக் கொள்வது நாய்களுக்கு சவாலாக அல்லது அச்சுறுத்தலாகத் தோன்றலாம். திடீர் அசைவுகள், வழக்கத்திற்கு மாறான நடை, அதிகப்படியான கை அசைவுகள் போன்றவை நாய்களை தற்காப்பு நிலைக்கு கொண்டு செல்லும். இதனால் அவை குரைப்பதன் மூலம் தங்கள் அசௌகரியத்தை வெளிப்படுத்துகின்றன.

    நாய்கள் உணர்ச்சி ரீதியாகவும் மிகுந்த உணர்திறன் கொண்டவை. அவற்றின் நினைவாற்றல் வலுவானது. கடந்த காலத்தில் யாராவது ஒரு நாயை காயப்படுத்தியிருந்தால் அல்லது தவறாக நடத்தியிருந்தால், அந்த நபரின் வாசனையை அது நினைவில் வைத்திருக்கலாம். பின்னர் அதே வாசனை உள்ள ஒருவரை சந்திக்கும் போது, அவை தானாகவே ஆக்ரோஷமாக அல்லது எச்சரிக்கையாக எதிர்வினையாற்றலாம். குறிப்பாக தெரு நாய்கள் மற்றும் ஒரு சமூகத்தில் இருக்கும் நாய்கள், தங்கள் பகுதியை பாதுகாப்பதற்காக அறிமுகமில்லாத நபர்களை பார்த்த உடன் குரைப்பது இயல்பான ஒன்றாகும்.

     மொத்தத்தில், நாய்கள் “கெட்ட சக்திகளை” உணர்கின்றன என்பதற்கான அறிவியல் ஆதாரம் என்று எதுவும் இல்லை. அவற்றின் கூர்மையான புலன்கள், மனித உடல் மொழி, வாசனைகள் மற்றும் சூழல் மாற்றங்களுக்கான இயல்பான எதிர்வினைகளே இத்தகைய நடத்தைக்குக் காரணம். நம்மால் புரிந்துகொள்ள முடியாத அளவுக்கு அவை உலகத்தை ஆழமாக உணர்வதால், சில சமயம் அவற்றின் செயற்பாடுகள் மர்மமாகத் தோன்றுகின்றன. ஆனால், அதற்குப் பின்னால் இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்திகள் அல்ல, அறிவியலே உள்ளது.

    சில நேரங்களில், நாய்கள் குறிப்பிட்ட அந்த நபரைப் பார்த்து குரைப்பதில்லை, அவர்களிடம் இருந்து வரும் வாசனைகளுக்காகவே குரைக்கின்றன. கடுமையான வாசனை திரவியங்கள், மதுபானம், சிகரெட் புகை போன்ற வாசனைகள் நாய்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தலாம். இந்த அறிமுகமில்லாத அல்லது தீவிரமான வாசனைகள், சாத்தியமான அச்சுறுத்தலாக உணரப்படுவதால், எச்சரிக்கையாக அவை குரைக்கின்றன.

    மொத்தத்தில், நாய்கள் “கெட்ட சக்திகளை” உணர்கின்றன என்பதற்கான அறிவியல் ஆதாரம் என்று எதுவும் இல்லை. அவற்றின் கூர்மையான புலன்கள், மனித உடல் மொழி, வாசனைகள் மற்றும் சூழல் மாற்றங்களுக்கான இயல்பான எதிர்வினைகளே இத்தகைய நடத்தைக்குக் காரணம். நம்மால் புரிந்துகொள்ள முடியாத அளவுக்கு அவை உலகத்தை ஆழமாக உணர்வதால், சில சமயம் அவற்றின் செயற்பாடுகள் மர்மமாகத் தோன்றுகின்றன. ஆனால், அதற்குப் பின்னால் இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்திகள் அல்ல, அறிவியலே உள்ளது.

     

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஸ்டாலின், இபிஎஸ்சுடன் அடுத்தடுத்து எல்.கே. சுதிஷ் சந்திப்பு! ஏன் தெரியுமா?
    Next Article தவெக பெண் நிர்வாகி தற்கொலை முயற்சி! விஜய் காரை மறித்து பரபரப்பை ஏற்படுத்தியவர்
    Editor TN Talks

    Related Posts

    நோ பெட்ரோல்… நோ பொல்யூஷன்… இன்று உலக சைக்கிள் தின ஸ்பெஷல்!

    June 3, 2026

    ப்ளூடூத் இயர்பட்ஸ் பயன்படுத்துவதால் புற்றுநோய் ஏற்படுமா?. எச்சரிக்கும் மருத்துவ நிபுணர்கள்!

    May 16, 2026

    சுட்டெரிக்கும் வெயில்!. தாகத்தை தணிக்க ஐஸ் வாட்டர் குடிக்கிறீர்களா?.  உஷார்!

    April 29, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    அடேங்கப்பா இவ்வளவா? – பாரதிராஜா பெற்ற விருதுகளின் பட்டியல்

    காற்றோடு கலந்தார் உங்கள் பாசத்துக்குரிய பாரதிராஜா

    முதலமைச்சர் விஜய்யின் முதல் மாதப் பயணம்! சாதித்தது என்ன?

    தமிழகம் முழுவதும் இன்று முதல் களமிறங்கும் ‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடிப்படை

    முதல்வர் விஜய் இன்று டெல்லி பயணம்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.