Close Menu
    What's Hot

    ‘இந்தியா மறக்காது’!. பஹல்காம் தாக்குதல் நடந்து ஓராண்டு நிறைவு!. ராணுவம் எச்சரிக்கை!.

    வாக்குக்கு ரூ.5,000!. கொள்ளையடித்த பணத்தை கோவையில் செலவழிக்கும் செந்தில் பாலாஜி!. வானதி அட்டாக்!

    ஒரே பைக்கில் சென்று வாக்கு கேட்ட அண்ணாமலை, வானதி!. கோவையில் அனல் பறக்கும் பிரச்சாரம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»அரசியல்»ஹரியானாவில் 25 லட்சம் வாக்குகள் திருட்டு; காங்கிரஸ் தோற்றது இதனால்தான் – ராகுல் காந்தி
    அரசியல்

    ஹரியானாவில் 25 லட்சம் வாக்குகள் திருட்டு; காங்கிரஸ் தோற்றது இதனால்தான் – ராகுல் காந்தி

    Editor TN TalksBy Editor TN TalksNovember 5, 2025Updated:November 5, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    rrrr
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

     ஹரியானாவில் உள்ள 2 கோடி வாக்காளர்களில், 25 லட்சம் வாக்குகள் திருடப்பட்டன. ஹரியானா தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாலேயே காங்கிரஸால் வெற்றிபெற முடியவில்லை என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.

    புதுடெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, “ ஹரியானா சட்டப்பேரவை தேர்தலின்போது அனைத்து கருத்துக்கணிப்புகளும், கள நிலவரங்களும் காங்கிரஸ்தான் வெற்றிபெறும் என சொன்னது. ஆனால், முறைகேடுகள் நடந்ததால் காங்கிரஸால் வெற்றிபெற முடியவில்லை. ஹரியானாவில் தபால் வாக்குகளின் எண்ணிக்கை தேர்தல் முடிவுகளுடன் பொருந்தவில்லை. ஹரியானாவில் நடந்தது ஆட்சித் திருட்டு. ஜென் ஸீ தலைமுறையினர் வாக்கு திருட்டு குறித்து புரிந்துகொள்ள வேண்டும். வாக்கு திருட்டு மூலம் ஜென் ஸீ இளம் வாக்காளர்களின் எதிர்காலம் அழிக்கப்படுகிறது.

    ஹரியானாவில் 25 லட்சம் வாக்குகள் திருடப்பட்டுள்ளன. ஹரியானாவில் பிரேசில் பெண் மாடலின் படம் பல பெயர்களில் வாக்காளர் பட்டியலில் இருந்தது. ஹரியானாவில் உள்ள 2 கோடி வாக்காளர்களில், 25 லட்சம் வாக்குகள் திருடப்பட்டன. ஹரியானாவில் 5,21,619 போலியான வாக்குகள் இடம்பெற்றிருந்தன. ஒரு தொகுதியில், ஒரே புகைபடத்தை வைத்து 100 வாக்குகள் திருடப்பட்டன. ஹரியானாவில் செலுத்தப்பட்ட 8-ல் ஒரு வாக்கு போலியானது.

    ஹரியானாவில் பல வாக்குச்சாவடிகளில் 200, 100, 50 என வாக்குகள் திருடப்பட்டன. 1,24,177 வாக்காளர்களின் புகைப்படங்கள் போலியானவை என்பதை கண்டறிந்துள்ளோம். அதுபோல ஒரே புகைப்படம், ஒரே முகவரியில் பல வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர். இதுகுறித்து முக்கிய சிசிடிவி ஆவணங்களை தேர்தல் ஆணையம் அழித்துவிட்டது. போலி புகைப்படங்களை நீக்கும் மென்பொருள் வசதி தேர்தல் ஆணையத்திடம் உள்ளது. பின்னர் எப்படி இதுபோல நடக்கிறது?. ஒரே நபர் ஒரே நாளில் பல வாக்குகளை செலுத்த தேர்தல் ஆணையம் எப்படி அனுமதித்தது?. காங்கிரஸின் வெற்றியை பாஜகவின் வெற்றியாக மாற்றும் சதி நடைபெற்று வருகிறது.

    வீடு எண் 0 என முகவரி வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றது எப்படி?. ஒரு பாஜக நிர்வாகிக்கு ஒரு தொகுதியில் 66 வாக்குகள் உள்ளன. ஒரே முகவரியில் 500 வாக்காளர்கள் உள்ளனர். ஒரு நபர் உ.பியிலும், ஹரியானாவிலும் வாக்களித்துள்ளார். ஹரியானாவில் தேர்தலுக்கு முன்பு 3.5 லட்சம் வாக்குகள் நீக்கப்பட்டன. நாடு முழுவதும் வாக்குத் திருட்டு பெரிய பிரச்சினையாக மாறி வருகிறது. வாக்கு திருட்டு மூலம் பிஹாரிலும் ஆட்சியை பிடிக்க பாஜக முயற்சி செய்கிறது. ஜனநாயகத்தை அழிப்பதில் பாஜகவின் புதிய ஆயுதம் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்.” எனத் தெரிவித்தார்.

    மேலும், அவர் இது தொடர்பான ஆவணங்களை பவர் பாயிண்ட் மூலமாக விளக்கமாக காண்பித்தார். வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்கள் சிலரும் நேரடியாக இந்த செய்தியாளர் சந்திப்பின்போது பேசினர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஉ.பி.யில் தண்டவாளத்தை கடக்கும்போது ரயில் மோதி 6 பெண்கள் பலி
    Next Article தமிழக அரசின் புதிய மினி பஸ் திட்டத்துக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு
    Editor TN Talks

    Related Posts

    இன்று (ஏப். 21) மாலை 6 மணி முதல் பிரச்சாரம் கூடாது!

    April 20, 2026

    ‘ரோட் ஷோ’ டூ ‘சைக்கிள் ரேலி’!. விஜய்யை காண திரளும் மக்கள் கூட்டம்!. கை கொடுக்குமா?

    April 12, 2026

    தவெக – காங்., கூட்டணி?. கசிந்த ரகசிய தகவல்கள்!. திமுகவுக்கு அதிர்ச்சி!.

    April 12, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ‘இந்தியா மறக்காது’!. பஹல்காம் தாக்குதல் நடந்து ஓராண்டு நிறைவு!. ராணுவம் எச்சரிக்கை!.

    வாக்குக்கு ரூ.5,000!. கொள்ளையடித்த பணத்தை கோவையில் செலவழிக்கும் செந்தில் பாலாஜி!. வானதி அட்டாக்!

    ஒரே பைக்கில் சென்று வாக்கு கேட்ட அண்ணாமலை, வானதி!. கோவையில் அனல் பறக்கும் பிரச்சாரம்!

    ”நான் என்றுமே டேஞ்சர் தான்”!. முதல்வர் ஸ்டாலின் வீடியோ வெளியீடு!

    ஆதாயங்களைக் காட்டி உங்கள் மகனை அடக்கிவிட முடியாது!. விஜய் அதிரடி!

    Trending Posts

    இன்று (ஏப். 21) மாலை 6 மணி முதல் பிரச்சாரம் கூடாது!

    April 20, 2026

    வாக்குக்கு ரூ.5,000!. கொள்ளையடித்த பணத்தை கோவையில் செலவழிக்கும் செந்தில் பாலாஜி!. வானதி அட்டாக்!

    April 21, 2026

    தமிழகம் இருண்ட நிலைக்கு போய்விட்டது!. அண்ணாமலை கண்டனம்!

    April 21, 2026

    ‘இந்தியா மறக்காது’!. பஹல்காம் தாக்குதல் நடந்து ஓராண்டு நிறைவு!. ராணுவம் எச்சரிக்கை!.

    April 21, 2026

    ஒரே பைக்கில் சென்று வாக்கு கேட்ட அண்ணாமலை, வானதி!. கோவையில் அனல் பறக்கும் பிரச்சாரம்!

    April 21, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.