Close Menu
    What's Hot

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»அரசியல்»இதற்காகத்தான் எம்.எல்.ஏ பதவி ராஜினாமா – மரகதம் குமரவேல் தன்னிலை விளக்கம்
    அரசியல்

    இதற்காகத்தான் எம்.எல்.ஏ பதவி ராஜினாமா – மரகதம் குமரவேல் தன்னிலை விளக்கம்

    Editor TN TalksBy Editor TN TalksMay 25, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    003 maragatham kumaravel
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

     

    எம்.எல்.ஏ பதவியை தான் எதற்காக ராஜினாமா செய்தேன் என மதுராந்தகம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏவாக இருந்த மரகதம் குமரவேல் விளக்கம் அளித்துள்ளார்.

    சி.வி.சண்முகம் – எஸ்.பி.வேலுமணி தரப்புக்கு ஆதரவாக இருந்த மதுராந்தகம் தனித் தொகுதி எம்.எல்.ஏ மரகதம் குமரவேல், பெருந்துறை எம்.எல்.ஏ ஜெயக்குமார், தாராபுரம் தனித் தொகுதி எம்.எல்.ஏ சத்தியபாமா ஆகிய மூவரும் இன்று (மே 25) தலைமைச் செயலகத்தின் தரைத் தளத்தில் இருந்த சட்டப்பேரவைத் தலைவர் ஜேசிடி.பிரபாகரை சந்தித்து தாங்கள் கைப்பட எழுதிய ராஜினாமா கடிதத்தை அளித்தனர்.

    அதை ஏற்றுக் கொண்டதாக சட்டப்பேரவைத் தலைவர் ஜேசிடி.பிரபாகர் தெரிவிப்பதற்கு முன்பாகவே, முதல் தளத்தில் இருக்கும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் அலுவலகத்துக்கு சென்று அவரை சந்தித்து மூவரும் தமிழக வெற்றிக் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர். அவர்களுக்கு தவெக அடையாள அட்டை அளிக்கப்பட்டதோடு, ஆதவ் அர்ஜுனா அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி வரவேற்றார். தலைமைச் செயலகம் தவெக அலுவலகமான நிலையில் அதன்பின்னரே, அவர்களின் ராஜினாமா ஏற்றுக் கொள்ளப்பட்டதாக பேரவைத் தலைவர் அறிவித்தார்.

    இதன்பின்னர், பனையூரில் அமைந்துள்ள தவெக தலைமை அலுவலகத்துக்கு வந்த அவர்கள் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது மரகதம் குமரவேல் கூறியதாவது;-

    “தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் முன்னிலையில் நாங்கள் முழுமனதோடு கழகத்தில் இணைந்துள்ளோம். 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் மதுராந்தகம், பெருந்துறை, தாராபுரம் ஆகிய மூன்று தொகுதியில் நாங்கள் வெற்றி பெற்ற நாங்கள், எம்.எல்.ஏ பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளோம்.

    எம்.எல்.ஏ பதவியில் இருந்து நாங்கள் ஏன் விலகியுள்ளோம் என்பதை மக்களுக்கு தெளிவுப்படுத்த விரும்புகிறோம். தேர்தல் முடிவு கடந்த 4-ம் தேதி வெளியான நிலையில், மே 7ஆம் தேதி முதல் அதிமுகவில் பல்வேறு பிரச்சினைகள் தொடர்ந்தது. தலைமை குழு நிர்வாகிகள் கலந்தாலோசித்து இரு வேறு நிலைப்பாட்டை எடுத்தனர். அதில் திமுகவுடன் இணைந்து ஆட்சி அமைப்பது. மற்றொன்று தவெக-வுக்கு ஆதரவு அளிப்பது.

    இதில், திமுக உடன் இணைந்து ஆட்சி அமைப்பதில் எங்களுக்கு விருப்பம் இல்லாததால், நாங்கள் எங்களது முடிவை முன்கூட்டியே எடுத்து விட்டோம்.

    சி.வி.சண்முகம் தலைமையில் தவெக அரசுக்கு ஆதரவு தெரிவித்த எங்களுக்கு அதிமுகவில் இருந்து விலகும் எண்ணமெல்லாம் இல்லை. தவெகவுக்கான ஆதரவு நிலைப்பாட்டை மட்டுமே எடுத்தோம். ஆனால், அன்று முதல், பல்வேறு அவதூறுகள், விமர்சனங்கள் எங்கள் மீது சமூக வலைதளத்தில் வைக்கப்பட்டது.

    மேலும், முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா வழிநடத்திய அதிமுக, எதிர்க்கட்சியான திமுக உடன் இணைந்து ஆட்சி அமைக்க எங்கள் மனம் விரும்பவில்லை. அதனால் இந்த முடிவை எடுத்துள்ளோம்.

    கடந்த 2021 தேர்தலில் நாங்கள் எம்.எல்.ஏக்களாக வெற்றிபெற்றபோதும், மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியவில்லை. 2026 தேர்தல் பிரச்சாரத்தின் போது எங்கள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் தெரிவித்த மக்கள் எங்களை வெற்றி பெற வைத்தனர்.
    ஆனாலும் எங்களால் எதிர்க்கட்சியாகக் கூட இந்த முறை செயல்பட முடியாத சூழலால்தான், தொகுதி மக்களின் நலனுக்காக இந்த முடிவை எடுத்துள்ளோம். நிச்சயமாக இது சுய நலன் சார்ந்தது அல்ல. முதல்வர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சி மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. அவர் நல்லாட்சி கொடுப்பார் என நம்புகிறோம். தேர்தலில் மீண்டும் போட்டியிடுவது குறித்து தவெக தலைமை எடுக்கும் முடிவுக்கு நாங்கள் கட்டுப்படுகிறோம் என்றார்.,

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article3 ஐ.பி.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்; அரசு உத்தரவு
    Next Article தவெக குறித்து மு.க.ஸ்டாலின் பொய் பிரசாரம்; அதிமுக தொண்டர்களை வரவேற்கிறோம் – ஆதவ் அர்ஜுனா பேட்டி
    Editor TN Talks

    Related Posts

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    August 9, 2026

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    August 9, 2026

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    August 9, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    தவெக அரசை கண்டித்து ஆகஸ்ட் 14-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்!. இபிஎஸ் அறிவிப்பு!

    மகாராஷ்டிராவில் அடுத்தடுத்து நிலநடுக்கம்!. வீடுகளில் விரிசல் ஏற்பட்டதால் வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.