Close Menu
    What's Hot

    நாடாளுமன்றத்திற்கு போகும் மேகதாது அணை விவகாரம்..!! திமுக எம்.பி.க்கள் நோட்டீஸ்..!!

    நீதி மன்றங்களில் வேலை; 800 பேரிடம் கோடிக்கணக்கில் மோசடி –  கில்லாடியை தேடி வரும் காவல்துறை!

    மனநலம் பாதிக்கப்பட்டவர்போல் பேசிக் கொண்டிருக்கிறார் அனிதா ராதாகிருஷ்ணன் – அமைச்சர் நிர்மல்குமார் சாடல்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»அரசியல்»46 ஆயிரம் கோவில்களில் இருந்து வருவது, வெறும் 300 கோடி தானா… ? அண்ணாமலை கேள்வி
    அரசியல்

    46 ஆயிரம் கோவில்களில் இருந்து வருவது, வெறும் 300 கோடி தானா… ? அண்ணாமலை கேள்வி

    Editor TN TalksBy Editor TN TalksAugust 29, 2025Updated:August 29, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    annamalai
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழ்நாட்டில் 46 ஆயிரம் கோவில்கள் இருக்கிறது, ஆனால் கோவில் சொத்துக்கள் மூலமாக வரக் கூடிய வருமானம் மட்டும் வெறும் 300 கோடி தானா என்று இந்து சமய அறநிலையத்துறையை நோக்கி தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.

    இந்து முன்னணி அமைப்பின் கோவை மாநகர் வடக்கு பகுதியில் நிறுவப்பட்ட விநாயகர் சிலைகள் இன்று நீரில் கரைக்கப்படும் நிலையில் துடியலூர் பகுதியில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற உள்ள பா.ஜ.க தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை பேசும்போது :-

    கோவில் நகைகளை உருக்கி வங்கியில் டெபாசிட் செய்த கணக்கில் எந்த விதமான வெளிப்படை தன்மையும் இல்லை. மூன்று லட்சம் கோடி ஒரு அரசு பட்ஜெட் போட்டும், வருமானம் இல்லை கோவில் பக்தர்கள் கொடுத்த நகைகளை, பிரித்து அதில் வரக் கூடிய சில கோடிகளை வைத்து தான் அரசாங்கம் நடத்த வேண்டும் என்று திமுக பிச்சை எடுத்து பிழைப்பு நடத்திக் கொண்டு இருக்கிறது.

    கோவிலில் ஒவ்வொருவரும் மனம் உருகி அரசுக்கு கொடுக்க வேண்டும் என்று கொடுத்தது அல்ல. அது கடவுளுக்காக அர்ப்பணிக்கப்பட்ட நகை. அது உடைந்த நகை பயன்படுத்த முடியாத நகையை உருக்கி இருக்கிறோம் என அரசு கூறுகிறது.

    தமிழ்நாட்டில் எத்தனையோ சாமானிய மக்கள் கேள்வி கேட்டும் கூட எவ்வளவு டன் நகையை உறுப்பினர் எப்படிப்பட்ட நகை ஒடுக்கப்பட்ட நகை எங்கே இருக்கிறது ? அதன் மூலமாக எவ்வளவு வருமானம் வந்து இருக்கிறது அதை என்ன செய்து இருக்கிறார்கள் என்பதற்கான பதில் வராது. ஒவ்வொரு கோவிலிலும் ஆகம விதிகள் மீறப்படுகிறது.

    கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பு சொத்துக்கள் கொள்ளை கோவில் பராமரிப்பு போன்ற வழிகாட்டு நெறிமுறைகள் உட்பட நீதிமன்ற தீர்ப்புகள் உள்ளிட்ட எதையும் அறநிலையத் துறை மதிக்கவே இல்லை. 1986 க்கு பிறகு தமிழகத்தில் கோவிலின் உடைய சொத்துக்கள் மட்டுமே ஒரு லட்சம் ஏக்கர் நாம் இழந்து இருக்கிறோம். 50 ஆண்டுகளில் கோவில் நிலங்களில் இருக்கக் கூடிய வணிக வளாகங்கள், 1 ரூபாய் வாடகைக்கு இருக்கிறார்கள். அதனால் தான் கோவில் சொத்துக்கள் மூலமாக அறநிலைத் துறைக்கு தமிழகத்தில் வரக் கூடிய மொத்த வருமானமே 300 கோடி ரூபாய் தான். ஐந்தரை லட்சம் ஏக்கர் இருக்கிறது, 46 ஆயிரம் கோவில்கள் இருக்கிறது, ஆனால் கோவில் சொத்துக்கள் மூலமாக வரக் கூடிய வருமானம் மட்டும் வெறும் 300 கோடி தான்.

    அதையெல்லாம் தட்டிக் கேட்பதற்கான நேரம் இது தான். நீங்கள் இதையெல்லாம் நிச்சயம் தட்டிக் கேட்க வேண்டும். இதையெல்லாம் கேள்வியாக கேட்பதை நம்முடைய கடமையாக கருத வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅதிகரித்து வரும் மூளையை தின்னும் அமீபா தொற்று – மா.சு. கொடுத்த தகவல்
    Next Article ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பெரியார் உருவப்படம் திறப்பு!
    Editor TN Talks

    Related Posts

    நாடாளுமன்றத்திற்கு போகும் மேகதாது அணை விவகாரம்..!! திமுக எம்.பி.க்கள் நோட்டீஸ்..!!

    July 18, 2026

    நீதி மன்றங்களில் வேலை; 800 பேரிடம் கோடிக்கணக்கில் மோசடி –  கில்லாடியை தேடி வரும் காவல்துறை!

    July 18, 2026

    மனநலம் பாதிக்கப்பட்டவர்போல் பேசிக் கொண்டிருக்கிறார் அனிதா ராதாகிருஷ்ணன் – அமைச்சர் நிர்மல்குமார் சாடல்!

    July 18, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    நாடாளுமன்றத்திற்கு போகும் மேகதாது அணை விவகாரம்..!! திமுக எம்.பி.க்கள் நோட்டீஸ்..!!

    நீதி மன்றங்களில் வேலை; 800 பேரிடம் கோடிக்கணக்கில் மோசடி –  கில்லாடியை தேடி வரும் காவல்துறை!

    மனநலம் பாதிக்கப்பட்டவர்போல் பேசிக் கொண்டிருக்கிறார் அனிதா ராதாகிருஷ்ணன் – அமைச்சர் நிர்மல்குமார் சாடல்!

    72-வது தேசிய திரைப்பட விருதுகள் – இன்று மாலை அறிவிப்பு

    தவெக ஆட்சி கவிழ்ப்பு சதி விவகாரம்.. சிக்கிய 3 பேரிடம் இருந்து ரூ.2 கோடி பறிமுதல்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.