Close Menu
    What's Hot

    திருவள்ளூர் : அமோனியா வாயு கசிவு விவகாரம்..! உயிரிழப்பு எண்ணிக்கை 18ஆக உயர்வு..!

    செங்கல்பட்டு : ஒரே நாளில் 8 பேரை கடித்த குரங்கு..! வனத்துறையால் கூண்டு வைத்து பிடிப்பு..!

    PF கணக்கிலிருந்து 100% பணம் எடுக்கலாம்..! அதிரடியான மாற்றங்கள்..!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»அரசியல்»பூட்டை உடைத்து உள்ளே புகுந்து…. கரூர் அதிமுக லகலகலக…
    அரசியல்

    பூட்டை உடைத்து உள்ளே புகுந்து…. கரூர் அதிமுக லகலகலக…

    Editor TN TalksBy Editor TN TalksMay 15, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    005 karur
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    அதிமுக கரூர் மாவட்ட புதிய செயலாளர் அலுவலக பூட்டுக்களை உடைத்து உள்ளே சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

     கரூர் மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் கடந்த சட்டமன்ற தேர்தலில் கரூர் தொகுதியில் நின்று வெற்றி பெற்றார். அதனை தொடர்ந்து சென்னை சென்ற அவர், சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி தரப்புக்கு ஆதரவாகச் செயல்பட்டு வருகிறார். சட்டசபையிலும் எடப்பாடி பழனிசாமி உத்தரவுக்கு எதிராக தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்தார். இதனால், இவரை அதிமுக மாவட்ட செயலாளர் பொறுப்பிலிருந்து நீக்கி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அவருக்கு பதிலாக கரூர் மேற்கு ஒன்றிய செயலாளராக இருந்த கமலக் கண்ணன் மாவட்ட செயலாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

    இதையடுத்து கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட லைட்ஹவுஸ் கார்னர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர்கள் அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்த  கமலக்கண்ணன், தனது ஆதரவாளர்களுடன் பழனியப்பா தெருவில் உள்ள அதிமுக மாவட்ட அலுவலகத்திற்கு வருகை தந்தார்.

    அங்கு கட்சி அலுவலகத்தின் சுற்றுச் சுவர் மற்றும் நுழைவு வாயில் கதவு பூட்டப்பட்டிருந்ததை பார்த்த அவர்கள், பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு அமைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதனை தொடர்ந்து அலுவலக அறைக்கு சென்ற அவர்கள் சிறிது நேரம் அமர்ந்திருந்து விட்டு மீண்டும் வெளியில் வந்த அவர்கள் அலுவலக படிக்கட்டில் அமர்ந்திருந்தனர்.

    005 karur 1

    அப்போது, புதிய மாவட்ட செயலாளருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்துக் கொண்டிருந்தனர். அப்போது, பூட்டை உடைத்த தகவல் அறிந்து அங்கு வந்த எம்.ஆர்.விஜயபஸ்கர் அணியினர் திரண்டனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதுடன், அவர்களை சமரசம் செய்து அனுப்பி வைத்தனர். அதனை தொடர்ந்து இரு தரப்பினரும் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    005 karur 2

    அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கமலகண்ணன், இந்த தொகுதியில் வெற்றி பெற்ற எம்.ஆர்.விஜயபாஸ்கர் சென்னை சென்றவர் எங்கு சென்றார் என்று தெரியவில்லை, புதிதாக என்னை மாவட்ட செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி என்னை அறிவித்துள்ளார். அதனை தொடர்ந்து கட்சி அலுவலகம் வந்தால் அதனை பூட்டி வைத்திருக்கிறார்கள். இது தவறான செயலாகும், கடந்த காலங்களில் என்னவெல்லாம் நடந்திருக்கிறது என்பது அவருக்கே தெரியும் என்றார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபெட்ரோல், டீசல் விலை உயர்வை  திரும்பப் பெறுக – எண்ணெய் நிறுவனங்களுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
    Next Article ஒரு போதும் விலகாமல் உழைப்போம் – தவெகவினருக்கு அமைச்சர் வெங்கட் அழைப்பு
    Editor TN Talks

    Related Posts

    திருவள்ளூர் : அமோனியா வாயு கசிவு விவகாரம்..! உயிரிழப்பு எண்ணிக்கை 18ஆக உயர்வு..!

    July 3, 2026

    செங்கல்பட்டு : ஒரே நாளில் 8 பேரை கடித்த குரங்கு..! வனத்துறையால் கூண்டு வைத்து பிடிப்பு..!

    July 3, 2026

    தவெக எம்.எல்.ஏ-விடம் குதிரை பேரம்..! 5 பேருக்கு நீதிமன்றக் காவல்..!

    July 3, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    திருவள்ளூர் : அமோனியா வாயு கசிவு விவகாரம்..! உயிரிழப்பு எண்ணிக்கை 18ஆக உயர்வு..!

    செங்கல்பட்டு : ஒரே நாளில் 8 பேரை கடித்த குரங்கு..! வனத்துறையால் கூண்டு வைத்து பிடிப்பு..!

    PF கணக்கிலிருந்து 100% பணம் எடுக்கலாம்..! அதிரடியான மாற்றங்கள்..!

    புதுச்சேரி: அரசுப் பேருந்தில் பெண் பயணிக்கு ஏற்பட்ட வலிப்பு..! சாதுர்யமாக செயல்பட்ட ஓட்டுநருக்கு பாராட்டு..!

    ஃபிஃபா அப்டேட் : அதிரடி காட்டிய போர்ச்சுக்கல்..! தொடரில் இருந்து வெளியேறிய குரோஷியா..!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.