Close Menu
    What's Hot

    டாஸ்மாக் கடைகளுக்கு கெடுபிடி!. மீறினால் ரோந்து போலீசார் மீது நடவடிக்கை!

    கமல் எப்பவுமே இப்படித்தான் செய்றாரு – பொறுமும் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம்

    தவெக அமைச்சரவையில் காங்கிரஸுக்கு 2 இடங்கள்?. வெளியான தகவல்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»அரசியல்»அன்புமணிக்கு மத்திய அமைச்சர் பதவி என்னால்தான் கிடைத்தது…. ஜிகே மணி ஓபன் டாக்
    அரசியல்

    அன்புமணிக்கு மத்திய அமைச்சர் பதவி என்னால்தான் கிடைத்தது…. ஜிகே மணி ஓபன் டாக்

    Editor TN TalksBy Editor TN TalksDecember 16, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    GK Mani
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    அன்​புமணியை மத்​திய அமைச்​ச​ராக்க நான் பரிந்​துரை செய்​ததையடுத்தே ராம​தாஸ் ஒப்​புக்​கொண்​டார் என்று பாமக கவுரவ தலை​வர் ஜி.கே.மணி தெரி​வித்​தார்.

    இதுதொடர்​பாக அவர் சென்​னை​யில் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: என்னை துரோகி என்று அன்​புமணி கூறியது வேதனை​யாக இருக்​கிறது. அன்​புமணிக்கு நான் எந்த வகை​யிலும் கெடு​தலோ, துரோகமோ செய்​தது இல்​லை. அன்​புமணி​யின் செயல்​பாடு​களால் தான் ராம​தாஸ் கண்​ணீர் வடிக்​கி​றார். எனது குடும்​பத்​தில் இருப்​பவர்​கள் யாரும் பதவிக்கு வரமாட்​டார்​கள் என்று தெரி​வித்த ராம​தாஸ், அதில் உறு​தி​யாக இருந்​தார். அந்த நேரத்​தில், அன்​புமணி என்​னிடம் வந்து மத்​திய அமைச்​சர் பதவி கேட்க சொன்​னார்.

    நான் ராம​தாஸிடம் பேசி, ‘நீங்​கள் தான் பதவிக்கு வரமாட்​டேன் என்​கிறீர்​கள். உங்​கள் மகனை​யா​வது அமைச்​ச​ராக்​கலாம்’ என்று கூறினேன். அதற்கு அவர், ‘கட்​சி​யின் தலை​வர் என்​ப​தால் உனது விருப்​பத்​துக்கு செயல்​படு​கி​றா​யா. நான் செய்த சத்​தி​யம் என்​ன​வாகும்’ என்று என்​னிடம் கடுமை​யாக கோபப்​பட்​டார். பிறகு, காடு​வெட்டி குருவை அழைத்​துச் சென்று மீண்​டும் ராம​தாஸிடம் பேசினோம். அதன் பின்​னரே, அன்​புமணியை அமைச்​ச​ராக்க ராம​தாஸ் ஒப்​புக்​கொண்​டார். ஒரு​முறை நாடாளு​மன்ற உறுப்​பின​ராக என்னை போக சொன்ன போது கூட, அன்​புமணியை தான் பரிந்​துரைத்​தேன். அன்​புமணியை தான் மாநிலங்​களவை உறுப்​பின​ராக்​கினோம். பாமக தனித்து போட்​டி​யிட்ட போது கூட, அன்​புமணி தான் முதல்​வர் வேட்​பாள​ராக அறிவிக்​கப்​பட்​டார்.

    ஆனால், அன்​புமணிக்கு எந்த கெடு​தலும் செய்​யாத என்னை பார்த்​து, அப்​பாவை​யும் என்​னை​யும் ஜி.கே.மணி பிரித்​து​விட்​டார் என அன்​புமணி கூறுகி​றார். தந்தை – மகனை நான் எப்​படி பிரிக்க முடி​யும். ராம​தாஸும், அன்​புமணி​யும் உட்​கார்ந்து பேசி​னால் தான் தீர்வு கிடைக்​கும். வீட்​டுக்​குள் பேச வேண்​டிய விஷ​யத்தை பொது​வெளி​யில் பேசி​யது தான், இவ்​வளவு பிரச்​சினை​களுக்​கும் காரணம். ராம​தாஸை கடுமை​யாக அன்​புமணி விமர்​சனம் செய்​கி​றார். அன்​புமணி மனசாட்​சி​யோடு பேச வேண்​டும். ராம​தாஸுடன் நான் இருப்​ப​தால், என்னை அன்​புமணி விமர்​சனம் செய்து வரு​கி​றார். ராம​தாஸ் பல முறை சிறை சென்​றுள்​ளார். அன்​புமணி எந்த்​தனை முறை சிறை சென்​றார்? பாமக​வில் ஏற்​பட்ட பிரச்​சினைக்கு காரணம் அன்​புமணி மட்​டும் தான். கட்​சி​யில் பிரச்​சினை இருக்​கும் போது, விருப்ப மனு வாங்​கு​வது மோசடி வேலை​யாகும்.

    பாமக நிறு​வனர், தலை​வர் ராம​தாஸ் தான். பாமக​வில் எனக்கு எந்த பதவி​யும் வேண்​டாம். ராம​தாஸ் – அன்​புமணி ஒன்று சேர தயார் என்​றால், நான் கட்​சி​யில் இருந்து விலகி கொள்ள தயா​ராக இருக்​கிறேன். அன்​புமணி யார், யார் துரோகி​கள் என நினைக்​கி​றோரோ, அவர்​கள் அனை​வ​ரும் பாமக​வில் இருந்து வில​கத் தயா​ராக இருக்​கி​றோம். ராம​தாஸ் உடன் அன்​புமணி இணைந்து செயல்பட வேண்​டும். நானோ, என் குடும்​பத்​தினரோ கட்​சி​யில் இருக்க மாட்​டோம். எம்​எல்ஏ பதவியை கூட ராஜி​னாமா செய்து விடு​கிறேன். வேறு எந்த கட்​சி​யிலும் சேர மாட்​டோம். அவர்​களாக அழைத்​தால் மீண்​டும் பாமக​வில் இணை​கி​றோம்.

    வன்​னியர்​களுக்​கான 10.5 சதவீத இடஒதுக்​கீட்டை நான் தான் கெடுத்​த​தாக அன்​புமணி அவதூறாக பேசி வரு​கி​றார். ஆட்சி மாற்​றம் காரண​மாக, அந்த இடஒதுக்​கீடு கிடைக்​காமல் போனது. அதற்கு நான் எப்​படி பொறுப்​பாக முடி​யும். ஆடிட்​டர் குரு​மூர்த்​தி, சைதை துரை​சாமி ஆகி​யோர் ராம​தாஸ். அன்​புமணியை சமா​தானம் செய்​வதற்​காக, தைலாபுரம் தோட்​டத்​துக்கு வந்​தனர். இரு​வ​ரும் ஒன்​றிணைய வேண்​டும் என்​பதே எனது விருப்​பம். இவ்​வாறு அவர் தெரிவித்​தார்​.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஜோதிட நாள்காட்டி 16.12.2025 | மார்கழி 01
    Next Article டிச.27ல் நாதக பொதுக்குழு கூட்டம்!. முக்கிய தீர்மானங்களை நிறைவேற்ற சீமான் திட்டம்!
    Editor TN Talks

    Related Posts

    விஜய் அமைச்சரவையின் இலாகா ஒதுக்கீடும் புதிய சமூக நீதி இலக்கணமும்..!

    May 16, 2026

    திமுகவினர் மீது தாக்கு: தவெகவினர் 8 பேருக்கு நிபந்தனை  ஜாமீன்

    May 16, 2026

    தமிழக அமைச்சரவை பட்டியல் – ஆளுநருடன் முதலமைச்சர் தனிச் செயலர் சந்திப்பு

    May 16, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    டாஸ்மாக் கடைகளுக்கு கெடுபிடி!. மீறினால் ரோந்து போலீசார் மீது நடவடிக்கை!

    கமல் எப்பவுமே இப்படித்தான் செய்றாரு – பொறுமும் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம்

    தவெக அமைச்சரவையில் காங்கிரஸுக்கு 2 இடங்கள்?. வெளியான தகவல்!

    விஜய் முதல்வரானதில் பொறாமையா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகர் ரஜினிகாந்த்!

    அதிமுகவில் தான் மட்டுமே இருக்கவேண்டும் என இபிஎஸ் நினைக்கிறார்!. செங்கோட்டையன் விமர்சனம்!

    Trending Posts

     புதுச்சேரி : இருசக்கர வாகனத்தில் மோதிய அரசுப் பேருந்து..! ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி..!

    May 17, 2026

    தவெக அமைச்சரவையில் காங்கிரஸுக்கு 2 இடங்கள்?. வெளியான தகவல்!

    May 17, 2026

    டாஸ்மாக் கடைகளுக்கு கெடுபிடி!. மீறினால் ரோந்து போலீசார் மீது நடவடிக்கை!

    May 17, 2026

    கமல் எப்பவுமே இப்படித்தான் செய்றாரு – பொறுமும் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம்

    May 17, 2026

    விஜய் முதல்வரானதில் பொறாமையா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகர் ரஜினிகாந்த்!

    May 17, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.