Close Menu
    What's Hot

    ஈத் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி; ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி நன்றி

    மகளிர் டி20 உலகக்கோப்பை தோல்வி!. ஹர்மன்பிரீத் கவுரின் கேப்டன்சிக்கு ஆபத்தா?. பயிற்சியாளர் ஓபன் டாக்!

    ராஜினாமா எம்.எல்.ஏக்கள் மீதான தகுதி நீக்க மனுக்களை சபாநாயகர் தொடர்ந்து விசாரிப்பார்; சட்டமன்ற செயலாளர் தகவல்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»அரசியல்»“இது வெறும் டிரைலர்தான்… ” – எச்சரிக்கும் சேகர் பாபு
    அரசியல்

    “இது வெறும் டிரைலர்தான்… ” – எச்சரிக்கும் சேகர் பாபு

    Editor web2By Editor web2June 29, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Screenshot 2026 06 29 144636
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சென்னையில் திமுக மாணவரணி சார்பில் திட்டமிடப்பட்டிருந்த ஆர்ப்பாட்டத்துக்கு காவல்துறை அனுமதி மறுத்த நிலையில், புரசைவாக்கத்தில் முன்னாள் அமைச்சர் பி.கே. சேகர்பாபு தலைமையில் திமுகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பெண்கள் பாதுகாப்பு, சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, அமைச்சர் கில்லி சரத் பதவி விலக வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, திமுக மாணவரணி செயலாளர் வீரமணி ஜெயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்று தமிழக அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர்.

    பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் பி.கே. சேகர்பாபு, அமைச்சர் கில்லி சரத் தொடர்பான விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கக் கோரி திமுக மாணவரணி சார்பில் எழும்பூரில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரியிருந்ததாகவும், ஆனால் காவல்துறை அனுமதி மறுத்ததாகவும் தெரிவித்தார்.

    மேலும், “தீவிரவாதிகளுக்கு ஆதரவாகவா திமுக போராட்டத்தில் ஈடுபடுகிறது? மக்களின் நியாயமான கோரிக்கைகளை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லவே இந்தப் போராட்டம் நடைபெறுகிறது” என்று அவர் கூறினார்.

    “இது வெறும் டிரைலர்தான். ஒரு இடத்தில் நடத்தத் திட்டமிட்ட போராட்டம், தற்போது மூன்று இடங்களில் நடைபெறுகிறது. கைது நடவடிக்கைகள் எங்கள் இயக்கத்துக்கு மேலும் உத்வேகத்தை அளிக்கும். அடிக்க அடிக்க எழும் பந்தாகவும், அறுக்க அறுக்க மணக்கும் சந்தனமாகவும், தீட்ட தீட்ட ஜொலிக்கும் வைரமாகவும் திமுக இருக்கும்” என அவர் தெரிவித்தார்.

    மேலும், “எங்கள் தலைவர் மு.க.ஸ்டாலின் 24 வயதிலேயே நெருக்கடிகளை சிரித்த முகத்துடன் சந்தித்தவர். அவரது வழியில் நாங்களும் கொடும் சிறையாக இருந்தாலும், தடியடியாக இருந்தாலும் சிரித்த முகத்துடன் சிறை செல்லத் தயாராக இருக்கிறோம். அரசு எங்களை எப்படி அணுகுகிறதோ, அதேபோன்ற அணுகுமுறையையே நாங்களும் கடைப்பிடிப்போம். இந்தப் போராட்டம் தொடரும், தொடரும், தொடரும்,” என சேகர்பாபு தெரிவித்தார்.

    ChennaiProtest DMK sekarbabu TamilNaduPolitics
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅனைத்து தேர்தல்களிலும் தி.மு.க.வை, மக்கள் வெளுக்கப் போவது உறுதி – தவெக
    Next Article துணைவேந்தர் நியமன அதிகாரத்தை  எதிர்த்த வழக்கு; இறுதி விசாரணை  தள்ளிவைப்பு
    Editor web2
    • Website

    Related Posts

    ராஜினாமா எம்.எல்.ஏக்கள் மீதான தகுதி நீக்க மனுக்களை சபாநாயகர் தொடர்ந்து விசாரிப்பார்; சட்டமன்ற செயலாளர் தகவல்

    June 29, 2026

    முன்னாள் கமிஷனர் அருணுக்கு எதிரான வழக்கு:  நீதிமன்றம் பச்சைக்கொடி?

    June 29, 2026

    துணைவேந்தர் நியமன அதிகாரத்தை  எதிர்த்த வழக்கு; இறுதி விசாரணை  தள்ளிவைப்பு

    June 29, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஈத் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி; ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி நன்றி

    மகளிர் டி20 உலகக்கோப்பை தோல்வி!. ஹர்மன்பிரீத் கவுரின் கேப்டன்சிக்கு ஆபத்தா?. பயிற்சியாளர் ஓபன் டாக்!

    ராஜினாமா எம்.எல்.ஏக்கள் மீதான தகுதி நீக்க மனுக்களை சபாநாயகர் தொடர்ந்து விசாரிப்பார்; சட்டமன்ற செயலாளர் தகவல்

    முன்னாள் கமிஷனர் அருணுக்கு எதிரான வழக்கு:  நீதிமன்றம் பச்சைக்கொடி?

    அயோத்தி ராமர் கோவில் பண மோசடி வழக்கு!. வாதாடும் வழக்கறிஞர்களுக்கு ரூ.5 லட்சம் அபராதம்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.