நடப்பு ஐபிஎல் சீசனின் லீக் போட்டிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. நடப்பு சாம்பியனான ஆர்சிபி ஏற்கனவே 18 புள்ளிகளுடன் முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றுவிட்ட நிலையில், மீதமுள்ள 3 இடங்களுக்கு 7 அணிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
பிளே ஆஃப் செல்லும் வாய்ப்புகளின் சதவீதம்:
குஜராத் டைட்டன்ஸ் அணி, 95% 16 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளது. அடுத்த சுற்றுக்குச் செல்ல 1 வெற்றி போதும், ரன் ரேட்டும் வலுவாக உள்ளது.
ஹைதராபாத் 87%: 14 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளது. மீதமுள்ள போட்டிகளில் 1 வெற்றி இவர்களை 16 புள்ளிகளுக்குக் கொண்டு செல்லும்.
சென்னை 44%: 12 புள்ளிகளுடன் சம பலத்தில் உள்ளது. ரன் ரேட் பாசிட்டிவாக இருந்தாலும், அடுத்தடுத்த போட்டிகளில் வெல்ல வேண்டிய கட்டாயம்.
ராஜஸ்தான் 44%: சென்னைக்கு இணையாக 12 புள்ளிகளுடன் சம வாய்ப்பில் நீடிக்கிறது.
பஞ்சாப் 35%: 13 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் இருந்தாலும், இவர்களுக்கு இன்னும் ஒரே ஒரு போட்டி மட்டுமே எஞ்சியுள்ளது.
டெல்லி 19%: 12 புள்ளிகளுடன் இருந்தாலும், மோசமான நெட் ரன் ரேட் (-0.871) இவர்களுக்குப் பெரிய முட்டுக்கட்டையாக உள்ளது.
கொல்கத்தா 18%: 11 புள்ளிகளுடன் மிகக் குறைந்த வாய்ப்பில் உள்ளது. மற்ற அணிகளின் முடிவுகளை நம்பியிருக்க வேண்டிய சூழல்.
இன்றைய போட்டி ஏன் மிக முக்கியமானது?
பிளே ஆஃப் ரேஸில் இன்றைய சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் வாழ்வா-சாவா போராட்டமாக மாறியுள்ளது. ஐதராபாத் வென்றால் 16 புள்ளிகளைப் பெற்று பிளே ஆஃப் வாய்ப்பை கிட்டத்தட்ட உறுதி செய்துவிடும்.
சென்னை அணி வென்றால் 14 புள்ளிகளுடன் டாப் 4 இடங்களுக்குள் நுழைந்து, தனது பிளே ஆஃப் வாய்ப்பை 44%-ல் இருந்து கணிசமாக உயர்த்திக் கொள்ளும். தோற்றால் சென்னையின் ரன் ரேட் பாதிப்பதோடு, மற்ற அணிகளின் தயவை எதிர்பார்க்க வேண்டியிருக்கும்.
மும்பை மற்றும் லக்னோ அணிகள் தொடரிலிருந்து ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக வெளியேறிவிட்ட நிலையில், இன்றைய போட்டியின் முடிவு புள்ளிகள் பட்டியலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை!.
