Close Menu
    What's Hot

    திரையில் மட்டும் நாயகனாக இருக்க பிறந்தவர் இல்லை! முதல்வர் விஜய் பற்றி சமந்தா நெகிழ்ச்சி!

    இந்தியா- அமெரிக்கா நட்புறவில் புதிய உத்வேகம்!- அதிபர் டிரம்ப்

    ஆளுங்கட்சிக்கு எதிராக மக்கள் போராடும் நிலைமை ஏற்பட்டுள்ளது!- மு.க.ஸ்டாலின்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»விளையாட்டு»ரஞ்சி கோப்பை 2025: ரிங்கு சிங் அபார ஆட்டம்; டிராவில் முடிந்த தமிழ்நாடு – யுபி ஆட்டம்!
    விளையாட்டு

    ரஞ்சி கோப்பை 2025: ரிங்கு சிங் அபார ஆட்டம்; டிராவில் முடிந்த தமிழ்நாடு – யுபி ஆட்டம்!

    Editor TN TalksBy Editor TN TalksNovember 20, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    crick
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழ்நாடு – உத்தரப் பிரதேசம் அணிகளுக்கு இடையிலான ரஞ்சி கோப்பை லீக் போட்டியானது டிராவில் முடிவடைந்தது.

    ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பாண்டு சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நவம்பர் 16ஆம் தேதி நடைபெற்ற லீக் போட்டியில் குரூப் ஏ பிரிவில் இடம் பிடித்துள்ள தமிழ்நாடு மற்றும் உத்திரபிரதேசம் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற தமிழ்நாடு அணி பேட்டிங்கைத் தேர்வு செய்திருந்தது.

    அதன்படி களமிறங்கிய தமிழ்நாடு அணியில் பாபா இந்திரஜித், ஆண்ட்ரே சித்தார்த் ஆகியோர் சதம் விளாசினார். இதில் இந்திரஜித் 149 ரன்களையும், ஆண்ட்ரே சித்தார்த் 121 ரன்களையும் சேர்க்க, அடுத்து வந்த அஜித்தேஷ் குருஸ்வாமி 86 ரன்களையும் சேர்த்தார். இதன் மூலம் தமிழ்நாடு அணி முதல் இன்னிங்ஸில் 455 ரன்களைக் குவித்து ஆல் அவுட்டானது.

    அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த யுபி அணியில் ரிங்கு சிங் சதம் விளாசி மிரட்டியதுடன், 176 ரன்களையும் சேர்த்து அசத்தினார். மேற்கொண்டு கோஸ்வாமி 79 ரன்களையும், ஷிவம் மாவி 54 ரன்களையும் சேர்க்க யுபி அணி முதல் இன்னிங்ஸில் 460 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. தமிழ்நாடு தரப்பில் வித்யுத் 4 விக்கெட்டுகளையும், சாய் கிஷோர் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

    பின்னர் 5 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய தமிழ்நாடு அணியில் தொடக்க வீரர்கள் பாலசுப்பிரமணியம் சித்தார்த் 59 ரன்களையும், ஜெகதீசன் 44 ரன்களையும் சேர்க்க, தமிழ்நாடு அணி 103 ரன்களை எடுத்திருந்த போது நான்காம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

    இதன் காரணமாக தமிழ்நாடு – உத்திரபிரதேசம் இடையிலான இந்த போட்டி டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. அதேசமயம், இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் யுபி அணி முன்னிலை பெற்றிருந்ததன் காரணமாக அந்த அணிக்கு 3 புள்ளிகளும், தமிழ்நாடு அணிக்கு ஒரு புள்ளியும் வழங்கப்பட்டது.

    இதன் மூலம் நடப்பு சீசன் ரஞ்சி கோப்பை தொடரில் உத்திரபிரதேச அணி விளையாடிய 5 போட்டிகளில் ஒரு வெற்றி, ஒரு தோல்வி, மூன்று டிரா என மொத்தமாக 17 புள்ளிகளை கைப்பற்றி 4ஆம் இடத்தைப் பிடித்துள்ளது. அதேசமயம் தமிழ்நாடு அணி ஒரு வெற்றியைக் கூட பதிவு செய்யாமல் 7 புள்ளிகளுடன் 7ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

    இதனையடுத்து அடுத்த ஆண்டு ஜனவரி 22ஆம் தேதி தொடங்கும் இரண்டாவது கட்ட ரஞ்சி கோப்பை தொடரில், தமிழ்நாடு அணி ஒடிசா அணியை எதிர்த்து பலப்பரீட்சை நடத்தவுள்ளது. ஏற்கெனவே தமிழ்நாடு அணி நடப்பு சீசனில் ஒரு வெற்றியைக் கூட பதிவு செய்யாமல் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துள்ள நிலையில், எஞ்சிய ஆட்டங்களில் ஆறுதல் வெற்றியையாவது பதிவு செய்யுமா என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous ArticleU 19 ஆடவர் ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கான அட்டவணையை அறிவித்தது ஐசிசி!
    Next Article நேட்டோ அல்லாத நாடுகள் கூட்டமைப்பில் இணைந்தது சவுதி அரேபியா: டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
    Editor TN Talks

    Related Posts

    கில் – இஷான் அதிரடி! ரன் மழை பொழிந்த இந்தியா!. ஆப்கானிஸ்தானுக்கு 403 ரன்கள் இமாலய இலக்கு!

    June 17, 2026

    லக்னோவில் வானவேடிக்கை!. ஆப்கானிஸ்தானை பொளந்து கட்டிய கில்-இஷான் கிஷன் ஜோடி!

    June 17, 2026

    2-வது ஒருநாள் போட்டி: டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான்  இந்தியாவுக்கு எதிராக பந்துவீச்சு

    June 17, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    திரையில் மட்டும் நாயகனாக இருக்க பிறந்தவர் இல்லை! முதல்வர் விஜய் பற்றி சமந்தா நெகிழ்ச்சி!

    இந்தியா- அமெரிக்கா நட்புறவில் புதிய உத்வேகம்!- அதிபர் டிரம்ப்

    ஆளுங்கட்சிக்கு எதிராக மக்கள் போராடும் நிலைமை ஏற்பட்டுள்ளது!- மு.க.ஸ்டாலின்

    அந்த டயலாக்கை பேச வெட்கமாக இருந்தது!. நடிகை சமந்தா கலகல பேச்சு!

    ஆணவக் கொலை தடுப்புச் சட்டம் கொண்டுவரப்படுமா?: முதல்வரிடம் வன்னி அரசு வைத்த கோரிக்கை!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.