Close Menu
    What's Hot

    த்ரிஷா குறித்து இரட்டை அர்த்தப் பேச்சு… உதயநிதியை கைது செய்யத் திட்டமா?… வீட்டை முற்றுகையிட்டுள்ள காவல் துறை…

    கேரளாவில் கொட்டித்தீர்க்கும் கனமழை!. கண்முன்னே உள்வாங்கிய கிணறு!. இடிந்து விழும் நிலையில் வீடு!

    வெளிமாநிலங்களுக்கு கனிமங்கள் அனுப்ப தடை ஏன்? ஐகோர்ட்டில் தமிழக அரசு விளக்கம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»உலகம்»நேட்டோ அல்லாத நாடுகள் கூட்டமைப்பில் இணைந்தது சவுதி அரேபியா: டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
    உலகம்

    நேட்டோ அல்லாத நாடுகள் கூட்டமைப்பில் இணைந்தது சவுதி அரேபியா: டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

    Editor TN TalksBy Editor TN TalksNovember 20, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    saudi
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

     மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அதிக சக்திவாய்ந்த நாடாக கருதப்படும் சவுதி அரேபியாவை, நேட்டோ அல்லாத முக்கிய நாடுகளின் கூட்டமைப்பில் (MAJOR NON – NATO ALLIES) அமெரிக்கா சேர்த்துள்ளதாக அதிபர் டொனால்டு டிரம்ப் அதிரடியாக அறிவித்தார்.

    இஸ்ரேல் – காஸா போரில் அமெரிக்க நிலைப்பாட்டுக்கு எதிராக செயல்பட்டு வந்த சவுதி அரேபியாவுக்கு, ‘நேட்டோ அல்லாத நாடுகள் கூட்டமைப்பு’ அந்தஸ்து வழங்கப்பட்டிருப்பது சர்வதேச அளவில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.

    சவுதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மான், நேற்று காலை அமெரிக்காவுக்கு வருகை தந்தார். வாஷிங்டன் விமான நிலையத்துக்கு வந்த அவர், அங்கிருந்து வெள்ளை மாளிகைக்கு கார் மூலமாக சென்றார்.

    வெள்ளை மாளிகையில் அவரை வரவேற்க பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இளவரசருக்கு சிகப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டதுடன், ராணுவ வீரர்கள் மற்றும் ராணுவ ஹெலிகாப்டர்களின் அணிவகுப்பு மரியாதையும் அளிக்கப்பட்டது.

    இதன் தொடர்ச்சியாக, இளவரசர் முகமது பின் சல்மானுக்கு வெள்ளை மாளிகையில் இரவு விருந்து வழங்கப்பட்டது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், அமைச்சர்கள் உள்ளிட்டோரும் இந்த விருந்தில் கலந்து கொண்டனர்.

    பின்னர், அதிபர் டொனால்டு டிரம்ப்பும், இளவரசர் முகமது பின் சல்மானும் தனியே சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர். சுமார் ஒன்றரை மணி நேரத்துக்கும் மேலாக இந்த ஆலோசனை நீடித்தது.

    கூட்டம் முடிந்து வெளியே வந்த அதிபர் டிரம்ப்பும், இளவரசர் முகமது பின் சல்மானும் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது டிரம்ப் கூறுகையில், “இந்த தருணத்தில் மிக முக்கியமான ஒரு அறிவிப்பை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். நேட்டோ அல்லாத நாடுகளின் கூட்டமைப்பில் (Major Non Nato Alliance) இன்று முதல் சவுதி அரேபியா இணைகிறது. இந்த கூட்டமைப்பில் சவுதி அரேபியாவை வரவேற்கும் வகையில், அமெரிக்காவின் F-35 போர் விமானங்களை அந்நாட்டிற்கு விற்க ஒப்புதல் அளித்துள்ளேன்” என தெரிவித்தார்.

    இதனைத் தொடர்ந்து பேசிய இளவரசர் முகமது பின் சல்மான், “அமெரிக்காவில் சவுதி அரேபியாவின் முதலீட்டை பல மடங்கு அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம். அதன்படி, இப்போதைய முதலீடான 600 பில்லியன் டாலரை, 1 டிரில்லியன் டாலராக அதிகரிக்க போகிறோம். நீங்கள் (டிரம்ப்) உருவாக்கி கொடுத்துள்ள வாய்ப்பு, இன்றைய தினத்திற்கானது அல்ல. அது நீண்ட நெடிய காலத்திற்கான வாய்ப்பு” என கூறினார்.

    முன்னதாக, இந்த F-35 போர் விமானங்களை சவுதி அரேபியாவுக்கு விற்க அமெரிக்காவின் நட்பு நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. குறிப்பாக, F-35 போர் விமானங்களின் உயர் தொழில்நுட்பத்தை சீனா தெரிந்துகொள்ளும் அபாயம் இருப்பதாக அந்நாடுகள் எச்சரிக்கை விடுத்திருந்தன. எனினும், இந்த போர் விமானங்களை தற்போது சவுதிக்கு விற்க முன்வந்துள்ளார் டொனால்டு டிரம்ப்.

    இதனிடையே, இந்த செய்தியாளர் சந்திப்பின் போது ‘வாஷிங்டன் போஸ்ட்’ பத்திரிகை நிருபர் ஜமால் காஷோகி கொலை செய்யப்பட்டது தொடர்பாக இளவரசரிடம் நிருபர் ஒருவர் கேள்வியெழுப்பினார்.

    உடனே குறுக்கிட்ட அதிபர் டிரம்ப், நிருபர் ஜமால் காஷோகி ஒரு சர்ச்சைக்குரிய நபர் தான். அந்த மனிதரை பெரும்பாலானோர் விரும்பியதில்லை. நமக்கு பிடிக்கிறதோ, இல்லையோ சில விஷயங்கள் நடக்கத்தான் செய்யும். அப்படித்தான் இந்த விஷயத்தையும் பார்க்க வேண்டும். இதுதொடர்பாக இளவரசருக்கு எதுவும் தெரியாது. அதை விட்டுவிடுங்கள். நமது விருந்தினரிடம் இப்படிப்பட்ட கேள்விகளை கேட்டு, அவரை தர்ம சங்கடத்திற்கு உள்ளாக்க கூடாது” எனக் கூறினார்.

    அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ‘வாஷிங்டன் போஸ்ட்’ பத்திரிகை நிருபர் ஜமால் காஷோகி. இவர் சவுதி அரேபிய அரசாங்கத்தின் தவறுகளை சுட்டிக்காட்டி அடிக்கடி செய்தி வெளியிட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 2018ஆம் ஆண்டு துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் உள்ள சவுதி தூதரகத்தில் வைத்து ஜமால் கொலை செய்யப்பட்டார்.

    இந்த கொலையின் பின்னணியில் சவுதி இளவரசர் முகமது பின் சல்மானுக்கு தொடர்பு இருப்பதாக அமெரிக்க உளவுத்துறை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleரஞ்சி கோப்பை 2025: ரிங்கு சிங் அபார ஆட்டம்; டிராவில் முடிந்த தமிழ்நாடு – யுபி ஆட்டம்!
    Next Article இனி சென்னை டூ திருச்சி பயணம் வெறும் 3:30 மணி நேரம் தான்; மகிழ்ச்சியில் மக்கள் !!!
    Editor TN Talks

    Related Posts

     புதிய உலகளாவிய வரிவிதிப்பு!. டிரம்ப் மீது 25 மாகாணங்களில் வழக்கு!. இந்தியாவுக்கு நிம்மதி!.

    August 4, 2026

    “தப்பியோட கூட நேரமில்லை”!. ரஷ்ய கடற்கரையில் ட்ரோன் தாக்குதலில் குழந்தைகள் உட்பட 7 பேர் பலி!

    August 4, 2026

    ஈரான் விவகாரத்தில் இந்தியாவின் முக்கிய முடிவு!. திடீரென தூதரை மாற்றம் செய்து அதிரடி!

    August 4, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    த்ரிஷா குறித்து இரட்டை அர்த்தப் பேச்சு… உதயநிதியை கைது செய்யத் திட்டமா?… வீட்டை முற்றுகையிட்டுள்ள காவல் துறை…

    கேரளாவில் கொட்டித்தீர்க்கும் கனமழை!. கண்முன்னே உள்வாங்கிய கிணறு!. இடிந்து விழும் நிலையில் வீடு!

    வெளிமாநிலங்களுக்கு கனிமங்கள் அனுப்ப தடை ஏன்? ஐகோர்ட்டில் தமிழக அரசு விளக்கம்!

    அதிகார நியமனங்களில் புதிய நடைமுறை! ஆளுநர் ஒப்புதலை ரத்து செய்த முதல்வர் விஜய்!!

     புதிய உலகளாவிய வரிவிதிப்பு!. டிரம்ப் மீது 25 மாகாணங்களில் வழக்கு!. இந்தியாவுக்கு நிம்மதி!.

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.