திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு பேத்திகளை கொன்றுவிட்டு, தாய், மகள் இருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள சின்ன குளிப்பட்டி கிராமத்தை சேர்ந்த செல்லம்மாள்(65). அவரது மகள் காளீஸ்வரியின் (45) மகள் பவித்ரா (28 ) என்பவருக்கும் கரூர் மாவட்டம் பள்ளபட்டி அருகே உள்ள செளந்தபுரம் பிரபாகரன் என்பவருக்கும் கடந்த 9 வருடங்களுக்கு முன்பு திருமணம் ஆகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஒரு மாதமாக காளீஸ்வரி, சின்ன குழிப்பட்டியில் உள்ள தனது தாயார் வீட்டில் வசித்து வந்துள்ளார்.

அப்போது, பள்ளபட்டியைச் சேர்ந்த ஒருவருடன் பவித்ராக்கு தொடர்பு ஏற்பட்டதால் அந்த நபருடன் 17. 6.2025 அன்று மாலை 6 மணி அளவில் பவித்ரா வீட்டை விட்டு சென்று விட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் அவமானமடைந்த பாட்டி செல்லம்மாள் மற்றும் அவரது மகள் காளீஸ்வரி ஆகியோர் பவித்ராவின் 7 மற்றும் 5 வயது குழந்தைகளை கொன்று விட்டு, வீட்டில் இருந்த ஃபேனில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

இது குறித்து இடையகோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலை செய்து கொண்டவர்களின் உடல்களை உடல் கூராய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்து விட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version