Close Menu
    What's Hot

    சுதந்திரத்திற்குப் பின் வரலாற்றுச் சாதனை வாக்குப்பதிவு: தமிழ்நாட்டு மக்களுக்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையர் வாழ்த்து!

    தென்மேற்குப் பருவமழை & பயிர் சாகுபடி ஆய்வு: குடிநீர், அத்தியாவசியப் பணிகளுக்கு ₹340 கோடி நிதி ஒதுக்கீடு- முதல்வர் விஜய் உத்தரவு!

    கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் விரைவில் நடத்தி முடிக்கப்படும்..! அமைச்சர் காந்திராஜ் தகவல்..!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»தமிழகமே அதிர்ச்சி!. 10 வயது சிறுவன் கொடூரமாக வெட்டிக்கொலை!. பகீர் காரணம்!
    தமிழ்நாடு

    தமிழகமே அதிர்ச்சி!. 10 வயது சிறுவன் கொடூரமாக வெட்டிக்கொலை!. பகீர் காரணம்!

    Editor web3By Editor web3April 24, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    salem 10 years old boy murder
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் 10 வயது சிறுவன் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஓமலூர் கருத்தானூர் பகுதியைச் சேர்ந்த சத்யா (33) என்ற பெண், தனது கணவர் பிரிந்து சென்ற நிலையில் இரு குழந்தைகளுடன் வசித்து வந்தார். தான் வேலை பார்க்கும் தனியார் ஷோரூமின் மேலாளரான சக்திவேல் என்பவருடன் சத்யாவிற்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக சத்யா அவரிடம் சரியாக பேசாததால், அவர் மீது சந்தேகமடைந்த சக்திவேல் ஆத்திரத்தில் இருந்துள்ளார்.

    நேற்று இரவு சத்யாவின் வீட்டிற்குச் சென்ற சக்திவேல், அவர் நீண்ட நேரம் கதவைத் திறக்காததால் கடும் கோபமடைந்தார். வீட்டிற்குள் நுழைந்த அவர், மின் விளக்குகளை அணைத்துவிட்டு மறைத்து வைத்திருந்த கத்தியால் சத்யாவையும், அவரது 10 வயது மகன் கிஷாந்தையும் சரமாரியாகக் குத்தினார். இதில் சத்யாவின் கை மணிக்கட்டு துண்டானதுடன், சிறுவன் கிஷாந்தின் தலை மற்றும் கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. ரத்த வெள்ளத்தில் துடித்த இருவரையும் உறவினர்கள் மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு சிறுவன் கிஷாந்த் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். படுகாயமடைந்த சத்யா சேலம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

    தப்பியோடிய கொலையாளி சக்திவேலை போலீஸார் தீவிரமாகத் தேடி வந்த நிலையில், அவர் சேலம் கோரிமேடு காட்டுப்பகுதியில் மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. சக்திவேலுக்கும் ஏற்கனவே திருமணமாகி இரு குழந்தைகள் உள்ள நிலையில், சத்யாவுடனான பழக்கத்தால் அவரது மனைவி கடந்த 6 மாதமாக அவரைப் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். ஒரு தவறான உறவினால் சிறுவன் உயிரிழந்ததும், கொலையாளி தற்கொலை செய்ததும், ஒரு பெண் படுகாயமடைந்ததும் ஓமலூர் வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து ஓமலூர் மற்றும் கருப்பூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதேர்தல் பரபரப்பு ஓய்ந்தது!. ஸ்டாலின் முதல் விஜய் வரை!. ஓய்வெடுக்க டூர் கிளம்பும் தலைவர்கள்!
    Next Article ஹூக்ளி நதியில் படகுப் பயணம் செய்த பிரதமர் மோடி!. படகோட்டிகளுடன் கலந்துரையாடி நெகிழ்ச்சி!
    Editor web3
    • Website

    Related Posts

    சுதந்திரத்திற்குப் பின் வரலாற்றுச் சாதனை வாக்குப்பதிவு: தமிழ்நாட்டு மக்களுக்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையர் வாழ்த்து!

    July 31, 2026

    தென்மேற்குப் பருவமழை & பயிர் சாகுபடி ஆய்வு: குடிநீர், அத்தியாவசியப் பணிகளுக்கு ₹340 கோடி நிதி ஒதுக்கீடு- முதல்வர் விஜய் உத்தரவு!

    July 31, 2026

    கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் விரைவில் நடத்தி முடிக்கப்படும்..! அமைச்சர் காந்திராஜ் தகவல்..!

    July 31, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சுதந்திரத்திற்குப் பின் வரலாற்றுச் சாதனை வாக்குப்பதிவு: தமிழ்நாட்டு மக்களுக்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையர் வாழ்த்து!

    தென்மேற்குப் பருவமழை & பயிர் சாகுபடி ஆய்வு: குடிநீர், அத்தியாவசியப் பணிகளுக்கு ₹340 கோடி நிதி ஒதுக்கீடு- முதல்வர் விஜய் உத்தரவு!

    கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் விரைவில் நடத்தி முடிக்கப்படும்..! அமைச்சர் காந்திராஜ் தகவல்..!

    சிறப்பாக பணியாற்றிய காவல் அதிகாரிகளுக்கு பதக்கங்களை வழங்கினார் முதல்வர் விஜய்!

    திருவள்ளூர் : RTO அலுவலகத்தில் திடீர் சோதனை..! கணக்கில் வராத ரூ.1.65லட்சம் பறிமுதல்..!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.